Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
    மாநிலம்

    டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

    adminBy adminJune 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மேட்டூர்: மேட்டூர் அணையின் வரலாற்றில் 92-வது ஆண்டாக காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

    மேட்டூரில் காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டும் போது 93.47 டிஎம்சி நீர் இருப்பு இருக்கும் . மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரைப் பயன்படுத்தி சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.15 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 16 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்களுக்கு மொத்தம் 330 டிஎம்சி நீர் தேவைப்படும். அணையில் நீர் இருப்பை பொறுத்து, ஜூன் 12-ம் தேதிக்கு முன்போ, அல்லது காலதாமதமாகவோ அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க வேண்டுமானால் அணையில் குறைந்தபட்சம் 90 அடிக்கு நீர் இருந்தால் மட்டுமே சாகுபடிக்கு முழுமையாக நீர் திறக்க முடியும். நடப்பாண்டில் அணையின் நீர்மட்டம் 115 அடியாக இருப்பதாலும், பருவமழையை எதிர்நோக்கி, குறித்த நாளான ஜூன் 12-ம் தேதியான இன்று பாசனத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையின் வலது கரையில் உள்ள மேல்மட்ட மதகுகளின் மின் விசையை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    மேட்டூர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில், உரிய காலத்தில் (ஜூன் 12-ம் தேதி) டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது இது 20-வது முறையாகும். நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 12-ம் தேதி முன்பு 11 முறையும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 61 முறை தள்ளிப்போயுள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து. துவக்கத்தில் வினாடிக்கு 3,000 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக வினாடிக்கு 10,000 கனஅடி வரை அதிகரிக்கப்படும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் சுரங்க மின் நிலையம் அனல் மின் நிலையம் மற்றும் 7 கதவணைகள் மூலம் 460 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

    மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்ற இவ்விழாவின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு,வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி எம் செல்வகணபதி, மணி, மலலயரசன், முன்னாள் எம்எல்ஏவும், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் எஸ்.ஆர்.சிவலிங்கம், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாள குமார், சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி. மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்க பிரத்யேக வசதி: சட்டரீதியாக உறுதி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

    September 17, 2025
    மாநிலம்

    இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் பி.வி.கரியமால் காலமானார்

    September 17, 2025
    மாநிலம்

    என்எஸ்எஸ் சிறப்பு முகாமுக்கு வழிகாட்டு விதிகள்: பள்ளிக்கல்வித் துறை வெளியீடு

    September 17, 2025
    மாநிலம்

    திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை: தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

    September 17, 2025
    மாநிலம்

    தெற்​காசி​யா​விலேயே தமிழகம் முன்​னேறிய மாநில​மாகும்: கிருஷ்ணகிரி அரசு விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் உறுதி

    September 17, 2025
    மாநிலம்

    பழனிசாமி நாளை டெல்லி பயணம்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிக்க செல்வதாக விளக்கம்

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
    • தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்க பிரத்யேக வசதி: சட்டரீதியாக உறுதி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
    • முடி வளர்ச்சிக்கு சிறந்த 5 எண்ணெய்கள்
    • கர்நாடக மாநிலம் மாலூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ தேர்தல் வெற்றி செல்லாது: மறு வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவு
    • சாம் கான்ஸ்டாஸ் சதம் விளாசல்: ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 337 ரன்கள் குவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.