பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) சார்பில், தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன.
தலைமைச் செயலகத்தை வரும் 22-ம் தேதி முற்றுகையிட போவதாக டிட்டோஜேக் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், டிட்டோஜேக் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொடக்கக் கல்வித் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கான கூட்டம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், சென்னையில் வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், டிட்டோஜேக் உயர்மட்டக் குழு பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.