Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»டிஎஸ்பியை கைது  செய்ய உத்தரவிட்ட முதன்மை அமர்வு நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை: நீதிமன்றம் உத்தரவு
    மாநிலம்

    டிஎஸ்பியை கைது  செய்ய உத்தரவிட்ட முதன்மை அமர்வு நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை: நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminSeptember 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டிஎஸ்பியை கைது  செய்ய உத்தரவிட்ட முதன்மை அமர்வு நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை: நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ​காஞ்​சிபுரம் டிஎஸ்​பியை கைது செய்ய உத்​தர​விட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செம்​மல் மீது நிர்​வாக ரீதி​யில் நடவடிக்கை எடுக்​கும் வகை​யில், விஜிலென்ஸ் பதி​வாளர் தனது விசா​ரணை அறிக்​கையை நிர்​வாக குழு​வுக்கு அனுப்ப உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

    காஞ்​சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிப​தி​யின் பாது​காவல​ராகப் பணி​யாற்​றிவந்த காவல் துறையைச் சேர்ந்த லோகேஷ்வரன் தற்​போது செங்​கல்​பட்டு மாவட்​டத்​துக்கு இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார். இந்​நிலை​யில், பூசி​வாக்​கம் பகு​தி​யில் பேக்​கரி நடத்தி வரும் லோகேஷ்வரனின் மாமனார் சிவக்​கு​மாருக்​கும், பேக்​கரிக்கு வந்த பட்​டியலினத்​தைச் சேர்ந்த முரு​கன் என்​பவருக்​கும் இடையே தகராறு ஏற்​பட்டு மோதலில் முடிந்​தது.

    இதுதொடர்​பாக, இருதரப்​பும் வாலாஜா​பாத் காவல்​நிலை​யத்​தில் புகார் அளி்க்க, சிவக்​கு​மார் மற்​றும் லோகேஷ்வரன் மீது வன்​கொடுமை தடுப்பு சட்​டத்​தின்​கீழ் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர். இந்​நிலை​யில், வன்​கொடுமை தடுப்​புச்​சட்ட வழக்​கில் காவலர் லோகேஷ்வரன் மற்​றும் அவரது மாம​னார் உள்​ளிட்​டோர் மீது போலீ​ஸார் உரிய நடவடிக்கை எடுக்​க​வில்லை எனக்​கூறிய மாவட்ட முதன்மை அமர்வு நீதிப​தி​யான செம்​மல், காஞ்​சிபுரம் டிஎஸ்பி சங்​கர் கணேஷை கைது செய்ய உத்​தர​விட்​டார்.

    இந்​நிலை​யில், மாவட்ட நீதிப​தி​யான செம்​மலுக்​கும், அவரது பாது​காவல​ராகப் பணி​யாற்​றிய லோகேஷ்வரனுக்​கும் இடையே ஏற்​பட்ட தனிப்​பட்ட பிரச்​சினை காரண​மாக இந்த வழக்​கில் காஞ்​சிபுரம் டிஎஸ்​பியைக் கைது செய்ய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உத்​தர​விட்​டுள்​ள​தாகக் கூறி, காஞ்​சிபுரம் எஸ்பி தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. அந்த வழக்கை கடந்த செப்.9 அன்று விசா​ரித்த நீதிபதி என். சதீ்ஷ்கு​மார், காஞ்​சிபுரம் டிஎஸ்பி சங்​கர் கணேஷை சிறை​யில் அடைக்க முதன்மை அமர்வு நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்​து, டிஎஸ்​பியை விடு​வித்து உத்​தர​விட்​டார்.

    மேலும், இந்த விவ​காரம் தொடர்​பாக முழு​மை​யாக விசா​ரணை நடத்தி அறிக்கை தாக்​கல் செய்ய உயர் நீதி​மன்ற விஜிலன்ஸ் பதி​வாள​ருக்​கும் உத்​தர​விட்​டிருந்​தார். இந்​நிலை​யில், இந்த வழக்கு நீதிபதி என்​.சதீ்ஷ்கு​மார் முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது உயர் நீதி​மன்ற விஜிலென்ஸ் பதி​வாளர் தனது அறிக்​கையை நீதிப​தி​யிடம் சமர்ப்​பித்​தார்.

    அரசு தரப்​பில் கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் கே.எம்​.டி.​முகிலன் ஆஜராகி, “மாவட்ட முதன்மை நீதிப​தி​யின் உத்​தர​வின் பேரிலேயே உணவுப்​பொருள் அதி​காரி​கள் அந்த பேக்​கரியை சோதனை​யிட்​டுள்​ளனர். இந்த விவ​காரத்​தில் இருதரப்​பும் சமரசமடைந்து பரஸ்​பரம் புகார்​கள் முடித்து வைக்​கப்​பட்​டபிறகு, மாவட்ட நீதிப​தி​யின் அழுத்​தம் காரண​மாகவே போலீ​ஸார் வன்​கொடுமை தடுப்​புச்​சட்​டத்​தின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்” என்​றார்.

    வழக்கு முடித்து வைப்பு: அதையடுத்து நீதிபதி என்​. சதீ்ஷ்கு​மார், “இந்த விவ​காரத்​தி்ல் நிர்​வாக ரீதி​யாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிப​திக்கு எதி​ராக நடவடிக்கை எடுக்க ஏது​வாக விஜிலென்ஸ் பதி​வாளர் தனது அறிக்​கையை உயர் நீதி​மன்ற நிர்​வாக குழு மற்​றும் நீதிப​தி​கள் இடமாற்ற குழு​வுக்கு அனுப்ப வேண்​டும்” என உத்​தர​விட்டு வழக்கை முடித்து வைத்​துள்​ளார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘வந்தவங்க வாழ்றாங்க… இருக்கிறவங்க வாடுறோம்ங்க..!’ – அமைச்சர் முன்னிலையில் திமுக நிர்வாகி புலம்பல்

    September 24, 2025
    மாநிலம்

    உடலுறுப்பு தானத்தால் 8,000 பேருக்கு மறுவாழ்வு: அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தகவல்

    September 24, 2025
    மாநிலம்

    90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு: 2021, 2022, 2023-க்கான முழு பட்டியல்

    September 24, 2025
    மாநிலம்

    தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை இடையிலான பாலத்துக்கு எஃகு கட்டமைப்புகளின் தரம்: அமைச்சர் வேலு உறுதி

    September 24, 2025
    மாநிலம்

    வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்கு பிறகு சென்னையில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 4,071 ஆக உயர்வு

    September 24, 2025
    மாநிலம்

    விடுதலைப்புலிகள் அமைப்புக்காக ரூ.40 கோடி கையாடல் முயற்சி: இலங்கை பெண்ணிடம் அமலாக்கத் துறை விசாரணை

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிறுகோள் 2024 yr4: சந்திரன் மற்றும் செயற்கைக்கோள்களைப் பாதுகாக்க அபாயகரமான விண்வெளி பாறையை ‘வீச’ முன்மொழிகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 3,787 ஆதரவற்றோர் உடல்களுக்கு இறுதிச் சடங்கு: ‘உதவும் சேவகர்கள்’ அமைப்பினரின் மனிதாபிமானம்
    • என்றும் பசுமை மாறாத வேளாண் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – 22
    • அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமானால் ட்ரம்ப் காசா போரை நிறுத்த வேண்டும்: பிரான்ஸ் அதிபர்
    • ராஜ ராஜேஸ்வரி திருக்கோலம் | நவராத்திரி வழிபாடு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.