சென்னை: தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அல்லது மக்கள் எதிர்ப்புமிக்க இடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படும் பட்சத்தில், அவை மாவட்ட ஆட்சியரின் தலையீட்டின் பேரில் அகற்றப்படுகின்றன.
இதுதொடர்பாக, உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்ட அறிவிக்கை: ஏற்கெனவே டாஸ்மாக் மதுபானக்கடைகள் அமைவிடங்களுக்கு அருகில் புதிதாக வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் வந்தால் ஏற்கெனவே உள்ள விதிகள் இங்கு பொருந்தாது.
ஆனால், டாஸ்மாக் கடைகள் தொடர்பான புகார்கள் தெரிவிக்கப்படும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர்கள், விதிகளின்படி அதை பரிசீலித்து, தகுதிகள் மற்றும் உத்தரவுகள் அடிப்படையில் 30 நாட்களுக்குள் ஆணை பிறப்பிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.