Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு: அமலாக்கத்துறை சோதனை நிறைவு
    மாநிலம்

    டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு: அமலாக்கத்துறை சோதனை நிறைவு

    adminBy adminMay 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு: அமலாக்கத்துறை சோதனை நிறைவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: டாஸ்மாக்கில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் 2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நேற்று முன்தினம் நள்ளிரவில் நிறைவு பெற்றது.

    தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

    இதுதொடர்பாக, கடந்த மார்ச் மாதம் எழும்பூரில் உள்ள தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதன் தொடர்ச்சியக கடந்த 16-ம் தேதி சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    ஆழ்வார்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, சூளைமேடு ராஜகீழ் வீதியில் உள்ள தனியார் மதுபான நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வரும் மேகநாதன் வீடு, திருவல்லிக்கேணியில் உள்ள தொழிலதிபர் தேவக்குமார் வீடு, சாஸ்திரி நகர் 2-வது குறுக்குத் தெருவில் உள்ள மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் வீடு, சேத்துப்பட்டு ஜெகநாதபுரம் முதல் தெருவில் உள்ள பாபு வீடு, தி.நகர் ஆற்காடு சாலையில் உள்ள கேசவன் வீடு, எம்ஆர்சி நகரில் உள்ள தொழிலதிபர் ரித்தீஷ் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    தொடர்ந்து, 2-வது நாளாக நேற்று முன்தினம் நடைபெற்ற சோதனை நள்ளிரவு 2 மணி அளவில் முடிவடைந்தது. அனைத்து இடங்களிலும் நடைபெற்ற சோதனையின்போது ரூ.1,000 கோடி ஊழல் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது காரில் எடுத்து சென்றனர்.

    சோதனை நடந்த 2 நாட்களும் விசாகனை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அவரது செல்போன், லேப்டாப்பில் இருந்து பல்வேறு ஆதாரங்களை அமலாக்கத்துறையினர் திரட்டி உள்ளனர்.

    அந்தவகையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர். இந்த வழக்கில் இன்னும் பல தொழிலதிபர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ராமதாஸ் நடத்திய கூட்டம் சட்டவிதிகளுக்கு முரணானது: அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

    July 9, 2025
    மாநிலம்

    தவெகவில் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலி: கட்சி நிர்வாகிகளுக்கு பயிற்சி

    July 9, 2025
    மாநிலம்

    மருந்து ஆய்வாளர் காலி பணியிடங்களை அடுத்த வாரத்துக்குள் கலந்தாய்வு மூலம் நிரப்ப முடிவு

    July 9, 2025
    மாநிலம்

    பேரவை தேர்தலில் இரு​முனை போட்டியே நிலவும்: திருமாவளவன் கருத்து

    July 9, 2025
    மாநிலம்

    கடலூர் அருகே கேட் கீப்பர் அலட்சியத்தால் விபத்து: பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழப்பு

    July 9, 2025
    மாநிலம்

    மதுரையிலேயே அரசு பணி வழங்க வேண்டும்: அஜித்குமாரின் சகோதரர் திடீர் ஆதங்கம்

    July 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி
    • ‘அயோத்தி’  பட ரீமேக்கில் நாகார்ஜுனா
    • ராமதாஸ் நடத்திய கூட்டம் சட்டவிதிகளுக்கு முரணானது: அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
    • 5 அன்றாட பழக்கவழக்கங்கள் உங்களுக்கு வயதை விரைவாக மாற்றக்கூடும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கொலம்பியா க்ளூம்னி: இந்திய-ஓரிஜின் சோஹ்ரான் மம்தானி தனது ஏழை SAT மதிப்பெண்ணின் காரணமாக கருப்பு என்று கூறினாரா? நமக்குத் தெரியும் … | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.