Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஜூலை 1 முதல் கொடைக்கானலில்  ஜேசிபி, போர்வெல் வாகனங்களை பயன்படுத்த தடை
    மாநிலம்

    ஜூலை 1 முதல் கொடைக்கானலில்  ஜேசிபி, போர்வெல் வாகனங்களை பயன்படுத்த தடை

    adminBy adminJune 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஜூலை 1 முதல் கொடைக்கானலில்  ஜேசிபி, போர்வெல் வாகனங்களை பயன்படுத்த தடை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கொடைக்கானல்: கொடைக்கானலில் மழைக்காலத்தில் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூலை 1 -ம் தேதி முதல் மண் அள்ளும் இயந்திரம், ஆழ்துளை கிணறு தோண்டும் வாகனங்களை பயன்படுத்த தடை விதித்து கோட்டாட்சியர் திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் மண் அள்ளும் இயந்திர (ஜேசிபி) வாகனங்கள், பாறைகளுக்கு வெடி வைப்பது, ஆழ்துளை கிணறு அமைப்பது ஆகியவற்றுக்கு தடை உள்ளது. இருந்தும் பல்வேறு பகுதிகளில் கட்டுமானப் பொருட்களை அகற்றுவதற்கும், விவசாய நிலம் உட்பட பிற வகை நிலங்களை சமன் செய்வதற்காகவும் அனுமதியில்லாமல் மண் அள்ளும் இயந்திரம் (ஜேசிபி) உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    கடந்த சில ஆண்டுகளாக விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, சட்டத்துக்கு புறம்பாக காட்டேஜ்கள், ரிசார்ட்கள் அதிகளவில் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொடைக்கானலில் மழைக்காலத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மண் அள்ளும் இயந்திரம், ஆழ்துளை கிணறும் தோண்டும் வாகனங்கள் பயன்படுத்த தடை விதித்து கோட்டாட்சியர் திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து இன்று (ஜூன் 24) கோட்டாட்சியர் திருநாவுக்கரசு, செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கொடைக்கானல் மலைப்பகுதியில் விதிகளை மீறி மண் அள்ளும் இயந்திரம், பாறைகளை துளையிடும் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஜூன் 30-ம் தேதிக்குள் இந்த வாகனங்களை கொடைக்கானலில் இருந்து கீழே இறக்க வேண்டும். ஜூலை 1-ம் தேதி முதல் தடை செய்யப்பட்ட இந்த வாகனங்களை பயன்படுத்தினால், வாகனத்தை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஒரு முறை அபராதம் விதிக்கப்படும்.

    மீண்டும், பயன்படுத்தினால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்வதுடன் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதற்கு அரசு அதிகாரிகள் உதவினால் அவர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். சென்ற 2 மாதங்களில் அனுமதியின்றி இயக்கிய மண் அள்ளும் இயந்திரம், ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனங்களுக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அதிமுக உட்கட்சி விவகார மனுக்கள் மீதான ‘முடிவு’ எப்போது? – தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் கெடு

    July 11, 2025
    மாநிலம்

    சாதாரண பிரசவத்தில் தாய், குழந்தைக்கு வெட்டு காயம்: மருத்துவ கவுன்சில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

    July 11, 2025
    மாநிலம்

    திரு​மலா பால் நிறு​வன மேலா​ளர் மர்ம மரணம்: காவல் துறை விசாரணை மீது இபிஎஸ் சந்தேகம்

    July 11, 2025
    மாநிலம்

    “வீட்டில் எனது நாற்காலிக்கு அருகே அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி…” – ராமதாஸ் பகிர்ந்த தகவல்

    July 11, 2025
    மாநிலம்

    மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த விசிக நிர்வாகிகளுக்கு திருமாவளவன் உத்தரவு

    July 11, 2025
    மாநிலம்

    “ஆளுநர் அதிகாரங்களில் முதல்வர் தலையிடக் கூடாது” – மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்கள் வீட்டிற்கு செல்வம், நேர்மறை மற்றும் நல்ல ஆற்றலை ஈர்க்கும் உட்புற தாவரங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொலை: தந்தையின் வாக்குமூலமும், அதிர்ச்சி தகவல்களும்
    • அதிமுக உட்கட்சி விவகார மனுக்கள் மீதான ‘முடிவு’ எப்போது? – தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் கெடு
    • 50 வயதிற்குட்பட்டவர்களில் பெருங்குடல் மற்றும் பிற ஜிஐ புற்றுநோய்கள் ஏன் உயர்கின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சாதாரண பிரசவத்தில் தாய், குழந்தைக்கு வெட்டு காயம்: மருத்துவ கவுன்சில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.