Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஜிஎஸ்டி 2.0: தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்கும், வலியுறுத்தும் அம்சங்கள்
    மாநிலம்

    ஜிஎஸ்டி 2.0: தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்கும், வலியுறுத்தும் அம்சங்கள்

    adminBy adminSeptember 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஜிஎஸ்டி 2.0: தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்கும், வலியுறுத்தும் அம்சங்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தனிநபர் ஆயுள், மருத்துவ காப்பீடுகளுக்கு வரிவிலக்கு உள்ளிட்ட ஜிஎஸ்டி சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்பு தெரிவித்துள்ளார். அதேவேளையில், மாநிலங்களின் வருவாய் வாய்ப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் வலியுறுத்தினார்.

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: டெல்லியில் 2 நாட்கள் நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மன்றத்தின் 56-வது கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று, தமிழக அரசின் சார்பில் கருத்துகளை எடுத்துரைத்தார். அப்போது அவர், தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் மருத்துவ காப்பீடு சேவைகளுக்கு வரிவிலக்கு உள்ளிட்ட ஜிஎஸ்டி சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு வரவேற்பு தெரிவித்தார்.

    அதேநேரம் மாநில வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசியலமைப்பு திருத்தம் மூலம் தற்போதைய மேல்வரியை தொடரலாம் அல்லது ஜிஎஸ்டி சட்டத் திருத்தம் மூலம் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு மட்டும் உச்ச வரி வரம்பினை அதிகரிக்கலாம் என்றும் பரிந்துரைத்தார்.

    ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தீர்வு நடைமுறைகளை நெறிப்படுத்துவதற்கு, அலுவலர்கள் குழுவின் அறிக்கையை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இக்குழுவின் பரிந்துரைகளை இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் செயல்படுத்த ஜிஎஸ்டி மன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

    ஏற்றுமதி மற்றும் தலைகீழ் வரி அமைப்பின் கீழ் தற்காலிகமாக ஜிஎஸ்டியை திரும்பப் பெறுவதற்கான தானியங்கி வழிமுறை, வணிகம் செய்வதை எளிமைப்படுத்துவதற்கான, சிறு இடர் அளவுரு கொண்ட வணிகங்களுக்கு எளிதாக்கப்பட்ட பதிவு முறையினையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார்.

    உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களுக்கு இழப்பீட்டு மேல்வரி விதிக்கும் காலத்தை அக்டோபர் முதல் 2 அல்லது 3 மாதங்களுக்கு நீட்டிக்க சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றம் பரிந்துரைத்துள்ளது. எனவே, தமிழக அரசின் பரிந்துரைகளை ஜிஎஸ்டி மன்றம் பரிசீலிக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இந்தக் கூட்டத்தில், நிதித்துறை செயலர் த.உதயசந்திரன், தகவல் தொழில்நுட்வியல் துறை செயலர் பிரஜேந்திர நவ்னிட், வணிகவரி ஆணையர் எஸ்.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட சமூக வலைதளப் பதவில், “புதுடெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் 56-வது கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்தின் சார்பில் கருத்துகளை முன்வைத்தேன்.

    உயிர் காக்கும் மருந்துகள், ஆயுள் காப்பீடு, அத்தியாவசிய பொருட்கள் பலவற்றிற்கும் வரிக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கின்ற அதே சமயத்தில், மாநிலங்களின் வருவாய் வாய்ப்புகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் அரசியல் சட்டத் திருத்தத்தில் மாற்றம் கொண்டு வரவோ அல்லது வேறு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தினேன்.

    மேலும், ஏற்றுமதி மற்றும் தலைகீழ் வரி அமைப்பின் ( Inverted Duty Structure) கீழ் தற்காலிகமாக சரக்குகள் மற்றும் சேவைகள் வரியினை திரும்பப் பெறுவதற்கான (Provisional Refund) தானியங்கி வழிமுறையை வரவேற்றுப் பேசியதோடு, ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரித் தீர்வு நடைமுறைகளை நெறிப்படுத்துவதற்கு, அலுவலர்கள் குழுவின் அறிக்கையை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்” என்று அவர் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “பாமகவினர் எதிர்பார்க்கும் கூட்டணியை விரைவில் அறிவிப்பேன்” – அன்புமணி ராமதாஸ்

    September 4, 2025
    மாநிலம்

    ‘20 ஆண்டாக பதவி உயர்வு இல்லை’ – புதுச்சேரி அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் பேரணி

    September 4, 2025
    மாநிலம்

    வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள்: ஜிஎஸ்டி 2.0-க்கு பழனிசாமி வரவேற்பு

    September 4, 2025
    மாநிலம்

    காலி மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டம்: நவ.30-க்குள் தமிழகம் முழுவதும் அமல்படுத்த ஐகோர்ட் கெடு

    September 4, 2025
    மாநிலம்

    பாஜகவை நம்பிய அதிமுக நிலைதான் புதுச்சேரியில் ரங்கசாமிக்கும் ஏற்படும்: இ.கம்யூனிஸ்ட் தேசிய செயலர்

    September 4, 2025
    மாநிலம்

    தெருநாய் பிரச்சினைக்கு தீர்வு காண வெளிநாட்டு நடைமுறைகளை அறிந்து பின்பற்றலாம்: சென்னை ஐகோர்ட் யோசனை

    September 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “பாமகவினர் எதிர்பார்க்கும் கூட்டணியை விரைவில் அறிவிப்பேன்” – அன்புமணி ராமதாஸ்
    • ஜிஎஸ்டி மாற்றம்: தொழில் துறையினருக்கு அமைச்சர் பியூஷ் முன்வைத்த இரு கோரிக்கைகள்
    • தோலில் கணைய அறிகுறிகள்: ஆரம்ப அறிகுறிகள் நீங்கள் புறக்கணிக்கக்கூடாது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘20 ஆண்டாக பதவி உயர்வு இல்லை’ – புதுச்சேரி அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் பேரணி
    • இதய நோயாளிகளுக்கு சிறந்த தூக்க நிலை: என்ன ஆராய்ச்சி கூறுகிறது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.