Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சொத்து வரி முறைகேடு புகார்: மதுரை மாநகராட்சி 5 மண்டல தலைவர்கள் ராஜினாமா ஏற்பு
    மாநிலம்

    சொத்து வரி முறைகேடு புகார்: மதுரை மாநகராட்சி 5 மண்டல தலைவர்கள் ராஜினாமா ஏற்பு

    adminBy adminJuly 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சொத்து வரி முறைகேடு புகார்: மதுரை மாநகராட்சி 5 மண்டல தலைவர்கள் ராஜினாமா ஏற்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் 5 மண்டலத் தலைவர்கள் ராஜினாமாவும் ஏற்கப்படுவதாக மேயர் இந்திராணி இன்று அறிவித்தார்.

    மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்து வரி முறைகேடு தொடர்பாக ஒய்வு பெற்ற உதவி ஆணையர் ரங்க ராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில் குமரன் மற்றும் கணிணி ஒப்பந்ததாரர்கள் 6 பேர் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.

    விசாரணையில், மாநகராட்சி மண்டலங்கள் – 2, 3, 4, 5 ஆகியவற்றில் உள்ள 150 கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து முறைகேடு செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, திமுக மண்டலத் தலைவர்களான வாசுகி (கிழக்கு), சரவண புவனேஷ்வரி (வடக்கு), பாண்டி செல்வி (மத்தி), முகேஷ் சர்மா (தெற்கு) மற்றும் சுகிதா (மேற்கு) ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தனர். சொத்து வரி முறைகேட்டை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.

    இந்நிலையில், அமைச்சர் கே.என்.நேரு மாநகராட்சி அலுவலகத்தில், 4 திமுக மண்டலத் தலைவர்கள், மேயர் இந்திராணி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார். மண்டலம்-1ல் முறைகேடு நடக்கவில்லை என்று கூறி அந்த மண்டல தலைவரை திருப்பி அனுப்பி விட்டனர். மற்ற மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஷ்வரி, முகேஷ் சர்மா, பாண்டி செல்வி, சுவிதா மற்றும் நிலைக்குழு தலைவர்கள் மூவேந்திரன் (நகர அமைப்பு), விஜயலட்சுமி (வரி விதிப்பு) ஆகியோரிடம் ராஜினாமா கடிதங்கள் எழுதி வாங்கப்பட்டன.

    இதையடுத்த சில மணி நேரங்களில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவில், மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டலத் தலைவர்களை யும் ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டார். ஆனால், மண்டலம்-1ன் தலைவர் வாசுகியிடம் ராஜினாமா கடிதம் எழுதி வாங்காத நிலையில், அவரையும் சேர்த்து ராஜினாமா செய்ய உத்தரவிட்ட தால் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று திடீரென மண்டலம்-1 தலைவர் வாசுகி மாநகராட்சி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு ராஜினாமா கடிதம் எழுதி வாங்கப்பட்டது. அந்த கடிதத்தை மேயர் இந்திராணி பெற்றுக் கொண்டார்.

    இவரோடு சேர்த்து 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா கடிதங்களையும் ஏற்றுக் கொள்ளுமாறு அரசிடமிருந்து உத்தரவு வந்தது. இதையடுத்து, அனைவரின் ராஜினாமா கடிதங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மதுரை மாநகராட்சி வரலாற்றில் முறைகேடு புகார் தொடர்பாக ஒட்டுமொத்த மண்டலத் தலைவர்களையும் ராஜினாமா செய்ய வைத்தது இதுவே முதல்முறையாகும். காலியான மண்டலத் தலைவர்கள் மற்றும் 2 நிலைக் குழு தலைவர்கள் பதவிகளுக்கும் புதிய நபர்கள் நியமிக்கப் படுவார் களா அல்லது சட்டப்பேரவை தேர்தல் வரை இதே நிலை நீடிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “இஸ்லாமிய தாய்மார்கள் சிந்தும் கண்ணீரே திமுக ஆட்சியை வீழ்த்தும்!” – சீமான்

    July 9, 2025
    மாநிலம்

    பரந்தூர் விமான நிலையத்துக்கான நிலம் எடுக்கும் பணி தொடக்கம் – போராட்டக் குழு கண்டனம்

    July 9, 2025
    மாநிலம்

    திருப்பூர்: தொழிலாளர்களின் தற்காலிக குடியிருப்பில் 9 சிலிண்டர்கள் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்

    July 9, 2025
    மாநிலம்

    மதுரையில் விரைவில் தவெக மாநாடு – இடம் தேர்வு செய்யும் கட்சிக் குழு?

    July 9, 2025
    மாநிலம்

    கடலூர் ரயில் விபத்து விசாரணை: கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் உள்பட 13 பேர் ஆஜராக நோட்டீஸ்

    July 9, 2025
    மாநிலம்

    ‘அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றவில்லை’ – திருத்தணியில் ஜூலை 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

    July 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “இஸ்லாமிய தாய்மார்கள் சிந்தும் கண்ணீரே திமுக ஆட்சியை வீழ்த்தும்!” – சீமான்
    • மேட்சா சியா புட்டு என்றால் என்ன, இது கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது
    • பரந்தூர் விமான நிலையத்துக்கான நிலம் எடுக்கும் பணி தொடக்கம் – போராட்டக் குழு கண்டனம்
    • வயதானதை தாமதப்படுத்தக்கூடிய 5 காலை பழக்கம்
    • திருப்பூர்: தொழிலாளர்களின் தற்காலிக குடியிருப்பில் 9 சிலிண்டர்கள் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.