Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சொத்துவரி விவகாரத்தில் மேயருக்கு ஆதரவாக நிற்போம்: மதுரை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் சூளுரை
    மாநிலம்

    சொத்துவரி விவகாரத்தில் மேயருக்கு ஆதரவாக நிற்போம்: மதுரை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் சூளுரை

    adminBy adminAugust 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சொத்துவரி விவகாரத்தில் மேயருக்கு ஆதரவாக நிற்போம்: மதுரை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் சூளுரை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: ‘‘அதிமுகவினர் விவாதம் செய்வதற்கு நேரில் வராமல் பயந்து ஓடிவிட்டார்கள். சொத்துவரி விவகாரத்தில் மேயருக்கு ஆதரவாக நிற்போம்” என்று மேயர் இந்திராணிக்கு ஆதரவாக திமுக கவுன்சிலர்கள் மட்டுமில்லாது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக கவுன்சிலர்களும் பேசினர்.

    சொத்துவரி முறைகேட்டில் மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மேயராக இந்திராணி தொடரும் வரை மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று அதிமுக புறக்கணித்த நிலையில் மாநகராட்சிகூட்டம் இன்று நடந்தது.

    இக்கூட்டத்தில் மேயருக்கு எதிரான திமுக கவுன்சிலர்களும், மண்டலத் தலைவர்களும் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்பட்ட நிலையில் மாநகராட்சி கூட்டம் திட்டமிட்டப்படி நடக்குமா? நடக்காதா? என்ற பரப்பு, கூட்டம் தொடங்கும் வரை காணப்பட்டது.

    அதுபோல், மேயர் இந்திராணி, மாமன்ற கூட்டரங்கிற்கு வருவதற்கு சில நிமிடங்கள் முன் வரை 15-க்கும் குறைவான கவுன்சிலர்களே வந்திருந்தனர். மேயர் இந்திராணி வந்து அவரது இருக்கையில் அமர்ந்ததும், மற்ற திமுக கவுன்சிலர்களும், அவர்கள் கூட்டணி கட்சி கவுன்சிலர்களும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அதனால், பெரும்பான்மை கவுன்சிலர்கள் ஆதரவுடன் கூட்டம் தொடங்கியது. ஆணையாளர் சித்ரா, துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.

    திமுக கவுன்சிலர் ஜெயராஜ்: அதிமுக கவுன்சிலர்கள், கூட்டத்தை புறக்கணித்து மிகப்பெரிய தவறு செய்துள்ளனர். சொத்துவரி முறைகேட்டில் சில தவறுகள் நடந்து இருக்கலாம். எந்த ஒரு கருத்தும், ஆட்சேபனை இருந்தாலும் நேரில் கூட்டத்திற்கு வந்து விவாதத்தில் பங்கேற்று இருக்க வேண்டும். 2022 முதல் மட்டுமே சொத்துவரி முறைகேட்டை விசாரிக்க வேண்டும் என்று அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    2011-ம் ஆண்டு முதல் சொத்துவரி முறைகேட்டை விசாரிக்க வேண்டும் என்றால் அதிமுகவினர் பதறுகின்றனர். ஏனென்றால் அதிமுகவினர் ஏராளமானோர் இந்த வழக்கில் சிக்குவார்கள். யார் தவறு செய்திருந்தாலும் எங்கள் முதல்வர் நடவடிக்கை எடுப்பார். அதன் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு மடியில் கணமில்லை, அதனால் பயமில்லாமல் கூட்டத்திற்கு வந்திருக்கிறோம். ஆனால், அதிமுகவினர் பயந்தே இன்று கூட்டத்திற்கு வராமல் ஓடிவிட்டார்கள்.

    காங்கிரஸ் கவுன்சிலர் கார்த்திகேயன்: எதுவாக இருந்தாலும் அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வந்திருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் காங்கிரஸ் கவுன்சிலர்கள், மேயருடன் நிற்போம்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் குமரவேல்: அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணிக்கவில்லை. கூட்டத்திற்கு வராமல் ஓடிவிட்டார்கள். சொத்துவரி முறைகேட்டை 2011-ம் ஆண்டு முதலே விசாரிக்க வேண்டும். அப்போதுதான் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.

    காங்கிரஸ் கவுன்சிலர் சுவேதா: மாமன்ற கூட்டத்தில் எங்களுக்கெல்லாம் பேச வாய்ப்பு கிடைப்பதில்லை. மண்டலத் தலைவர்கள் இல்லாததால் மண்டல கூட்டம் நடக்கவில்லை. அதனால், எங்கள் வார்டு பிரச்சினைகளை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை.

    திமுக கவுன்சிலர் சோலை செந்தில்குமார்: 2 அதிமுக கவுன்சிலர்கள் இன்று கைதாக வாய்ப்பு இருந்தது. அதற்கு பயந்தே அவர்கள் கூட்டத்திற்கு வரவில்லை. 2011-ம் ஆண்டு முதல் சொத்துவரி முறைகேட்டை விசாரிக்க, நாமமும் ஆணையாளர் மூலம் போலீஸாரிடம் பரிந்துரை செய்ய வேண்டும்.

    ஆணையாளர் சித்ரா கூறுகையில், “2011 மட்டுமில்லாது, 2000-ம் ஆண்டில் தவறு நடந்திருந்தாலும் கூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குடியிருப்பு கட்டிடங்களை தவிர்த்துவிட்டு வணிக கட்டிடங்களில் சொத்துவரி குறைக்கப்பட்டிருந்தால் திருத்தி மறுசீரமைக்கப்படுகிறது.” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஓபிஎஸ், தினகரன் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம்: நயினார் நாகேந்திரன்

    September 21, 2025
    மாநிலம்

    செப்.23-ல் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி, எம்எல்ஏ.,க்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

    September 21, 2025
    மாநிலம்

    “தவெகவுக்கு பெருகும் ஆதரவால் அஞ்சி ஆள்வைத்து பொய் பரப்புகின்றனர்” – விஜய் விமர்சனம்

    September 21, 2025
    மாநிலம்

    அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் – ராமதாஸ்

    September 21, 2025
    மாநிலம்

    பாஜக நிச்சயமாக எந்த உட்கட்சி பிரச்சினையிலும் தலையிடாது: நயினார் நாகேந்திரன்

    September 21, 2025
    மாநிலம்

    வடசென்னை மெரிடியன் மருத்துவமனையில் இதய அறிவியல் மையம் திறப்பு

    September 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘எனக்கும் ஒரு நேரம் வரும்’ – ஆசியக் கோப்பை தேர்வின்மை குறித்து ஜெய்ஸ்வால் மனம் திறப்பு
    • கரோனா பரவல் குறித்து முதலில் தகவல் தெரிவித்த சீன பெண் பத்திரிகையாளருக்கு தண்டனை நீட்டிப்பு
    • ஓபிஎஸ், தினகரன் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம்: நயினார் நாகேந்திரன்
    • வெற்று வயிற்றில் குடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் 3 பொதுவான உணவுகள் – இந்தியாவின் காலங்கள்
    • ‘பல்டி’ படத்துக்காக 3 மாதம் கபடி பயிற்சி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.