Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்க தேர்தலை நவ.27-க்குள் நடத்தி முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    மாநிலம்

    சென்னை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்க தேர்தலை நவ.27-க்குள் நடத்தி முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminSeptember 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்க தேர்தலை நவ.27-க்குள் நடத்தி முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பல ஆண்​டு​களாக நடத்​தப்​ப​டா​மல் உள்ள சென்னை வழக்​கறிஞர்​கள் கூட்​டுறவு சங்​கத்​தேர்​தலை, வரும் நவ.27-க்​குள் நடத்தி முடிக்க வேண்​டுமென உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

    இதுதொடர்​பாக, வழக்​கறிஞர் வி.ஆனந்த் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில், கடந்த 2018-ம் ஆண்டு தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் கூட்​டுறவு சங்​கம் பல ஆண்​டு​களாக செயல்​பட்டு வரு​கிறது.

    இந்த சங்​கத்​துக்கு கடந்த பல ஆண்​டு​களாக தேர்​தல் நடத்​தப்​பட​வில்லை என்​ப​தால் சங்கமும் கேண்​டீனும் தற்​போது தனி அதி​காரி​யின் கட்​டுப்​பாட்​டில் நிர்​வகிக்​கப்​பட்டு வரு​கிறது. எனவே, இந்த கூட்​டுறவு சங்​கத்​துக்​கான தேர்​தலை உடனடி​யாக நடத்த உத்​தர​விட வேண்​டும், எனக்​ கோரி​யிருந்​தார்.

    இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்​வு, சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் சங்​கம், மெட்​ராஸ் பார் அசோசி​யேஷன், லா அசோசி​யேஷன், பெண் வழக்​கறிஞர்​கள் சங்​கம் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் அடங்​கிய குழுவை அமைத்து வாக்​காளர் பட்​டியலை சரி​பார்த்​து, தேர்​தல் அதி​காரி மூல​மாக தேர்​தலை நடத்த உத்​தர​விட்​டது.

    இந்​நிலை​யில், உயர் நீதி​மன்​றம் நியமித்த குழு வாக்​காளர் பட்​டியலை சரி​பார்த்த பின்​னரும் இந்த தேர்​தல் இது​வரை​யிலும் நடத்​தப்​பட​வில்லை எனக்​கூறி வழக்​கறிஞர் வி.ஆனந்த் மீண்​டும் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த வழக்கு நீதிபதி வி. லட்​சுமி நாராயணன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது.

    அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் சங்​கத் தலை​வ​ரான ஜி. மோக​னகிருஷ்ணனும் அரசு தரப்​பில் சிறப்பு அரசு வழக்​கறிஞர் கீதா தாமரை செல்​வனும் வாதிட்டனர். அதையடுத்து நீதிப​தி, தற்​போது அந்த குழு​வில் உள்ள வழக்​கறிஞர்​களான ஜி.மோக​னகிருஷ்ணன், வி.ஆர்​. கமல​நாதன், டி.​வி.கிருஷ்ணகு​மார், வி.நளினி ஆகியோர் வாக்​காளர் பட்​டியலை மீண்​டும் தனி அதி​காரி​யிடம் சமர்ப்​பிக்க வேண்​டும். தனி அதி​காரி அந்த பட்​டியலை வரும் அக்​.25-க்​குள் சரி​பார்த்து தேர்​தல் அதி​காரி​யிடம் வழங்க வேண்​டும். அதன்​படி தேர்​தல் அதி​காரி வரும் நவ.27-ம் தேதிக்​குள் இந்த சங்​கத்​துக்​கான தேர்​தலை நடத்​தி முடிக்​க வேண்​டும்​, என உத்தரவிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    காந்தி ஜெயந்திக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

    September 30, 2025
    மாநிலம்

    கரூர் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை: தே.ஜ. கூட்டணி எம்.பி.க்கள் குழு உறுதி

    September 30, 2025
    மாநிலம்

    சென்னை மண்டலத்தில் இந்தாண்டு இறுதிக்குள் 50 கோயில்களில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

    September 30, 2025
    மாநிலம்

    சாத்தியமான இடங்களில் சிறு துறைமுகங்கள்: கடல்சார் வாரியம் ஆய்வு செய்வதாக அமைச்சர் வேலு தகவல்

    September 30, 2025
    மாநிலம்

    “யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை” – கரூரில் நிர்மலா சீதாராமன் கருத்து

    September 30, 2025
    மாநிலம்

    கரூர் உயிரிழப்பு சம்பவம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் எழுப்பும் சந்தேகங்கள்!

    September 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘கோயில்முன் இந்து அல்லாதோர் பிரசாதம் விற்றால் தாக்கலாம்’ – பிரக்யா தாக்கூர் பேச்சால் சர்ச்சை!
    • ஆஷஸ் தொடர் தேர்வின்மை: ஓய்வு அறிவித்த கிறிஸ் வோக்ஸ்
    • காந்தி ஜெயந்திக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு
    • டி.சி.எஸ் பணிநீக்கங்கள்: 12,000 அல்லது 80,000 ஊழியர்கள் வேலைகளை இழந்தார்களா? வதந்திகள், யதார்த்தம் மற்றும் AI எப்படி வேலைகளை வடிவமைக்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • காசா மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் ட்ரம்ப்பின் திட்டம்: மோடி வரவேற்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.