Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சி திறன் மையம் திறப்பு
    மாநிலம்

    சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சி திறன் மையம் திறப்பு

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சி திறன் மையம் திறப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சி திறன் ஆய்வகத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பிரிவு முன்னாள் இயக்குநர் பேராசிரியர் மருத்துவர் முத்துக்குமார் இயற்றிய செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சி திறன் கையேட்டை வெளியிட்டனர். பின்னர், ரூ.14 லட்சம் செலவில் வளரிளம் பருவத்தினருக்கான ஆலோசனை – சிகிச்சை மையம் மற்றும் ரூ.94 லட்சம் செலவில் நீரிழிவு சிகிச்சை சிறப்பு மையத்தை திறந்துவைத்தனர்.

    சுகாதாரத் துறை செயலாளர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாராமன், துணை முதல்வர் கவிதா, நீரிழிவு நோயியல் துறை இயக்குநர் தர்மராஜன், காது, மூக்கு, தொண்டை நிலைய இயக்குநர் சுரேஷ்குமார், பேராசிரியர் பாரதிமோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஏற்கெனவே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் `காக்ளியர் இம்ப்ளான்ட்’ என்கிற காது வால் அறுவை சிகிச்சை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் செவி எலும்பு அறுவை சிகிச்சை ஆய்வகம் தொடங்கப்பட்டிருப்பது ஒரு புதிய முயற்சி ஆகும். தமிழகத்தில் பணிபுரியும் காது, மூக்கு, தொண்டை பிரிவு சிறப்பு மருத்துவர்களுக்கான பயிற்சிகள் ஆய்வகத்தில் வழங்கப்படும்.

    தமிழகத்திலேயே இந்த மருத்துவமனையில்தான் வளரிளம் பருவத்தினருக்கான ஆலோசனை மற்றும் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை தோறும் காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், மனநல மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் தோல் மருத்துவம், பாலியல் ரீதியாக பரவும் நோய்த் தொற்று ஆகியவற்றை உள்ளடக்கிய பல்துறை அணுகுமுறைகளை இந்த சேவை மையம் வழங்கும்.

    இளைய சமுதாயத்தினரிடையே இருக்கின்ற மது, புகை மற்றும் போதைப் பழக்கங்களினால் ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள், பாலியல் ரீதியாக பரவும் நோய் தொற்றுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த மையம் செயல்படவுள்ளது.

    சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், நோவோ நோட்ரிக்ஸ் கல்வி அறக்கட்டளை ஆகிய 2 அமைப்புகள் சேர்ந்து சிஎஸ்ஆர் நிதி ரூ.94 லட்சத்தில் நீரிழிவு நோய்க்கான சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பு 10.4 சதவீதமாக உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு, கூடுதல் சிகிச்சைகள் வழங்க பல்வேறு உபகரணங்களுடன் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னையில் பருவமழை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

    August 11, 2025
    மாநிலம்

    சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம் நிறைவேற்ற அன்புமணி கோரிக்கை

    August 11, 2025
    மாநிலம்

    2026 தேர்தலின்போது மேற்கு மண்டலத்தில் இருந்து தான் அதிமுகவின் தோல்வி தொடங்கும்: ஸ்டாலின்

    August 11, 2025
    மாநிலம்

    போராடும் தூய்மைப் பணியாளர்கள் சார்பில் மனு: சென்னை மாநகராட்சி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    August 11, 2025
    மாநிலம்

    பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தை உருவாக்கியோரின் சிலைகளை திறந்து வைத்தார் ஸ்டாலின்

    August 11, 2025
    மாநிலம்

    பாமக யுத்தக் களம் – வெல்லப் போவது ராமதாஸா, அன்புமணியா?

    August 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விக்ரமை இயக்கும் ‘பார்க்கிங்’ இயக்குநர்?
    • சென்னையில் பருவமழை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்
    • சுப்மேன் கில்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் ஷுப்மேன் கில் இருந்து கற்றுக்கொள்ள 5 பாணி பாடங்கள்
    • தயாரிப்பாளராக மாற நடிகர் சூரி திட்டம்!
    • சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம் நிறைவேற்ற அன்புமணி கோரிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.