Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை 1.38 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன: உதயநிதி ஸ்டாலின் தகவல்
    மாநிலம்

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை 1.38 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன: உதயநிதி ஸ்டாலின் தகவல்

    adminBy adminMay 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை 1.38 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன: உதயநிதி ஸ்டாலின் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை 1.38 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, திருவெற்றியூரில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 1,500 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது: சென்னையில் பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் இருக்கும் மக்களுக்கு பட்டா கொடுக்கப்படும் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது முதல்வர் வாக்குறுதி கொடுத்தார். அதற்காக வருவாய்த் துறை அமைச்சர் தலைமையில் ஒரு குழுவையும் நியமித்தார். அந்தக் குழு பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தி பட்டா கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது.

    அதன் அடிப்படையில், கடந்த ஜூலை மாதம் மாதவரத்தில் 2,200 பேருக்கு பட்டாக்களை வழங்கினோம். அடுத்து சோழிங்கநல்லூர் தொகுதியில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு பட்டா கொடுத்தோம். திருவொற்றியூர் தொகுதியிலும் கடந்த செப்டம்பர் மாதம் 2,120 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினோம். சென்னையில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பட்டாக்களை வழங்கி இருக்கிறோம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இதுவரை 1,38 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு 1,500 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக, வடசென்னை அனல்மின் நிலையத்துக்கு இடம் கொடுத்த 400 பேருக்கு மாற்று இடம் வழங்கப்பட்டதற்கான பட்டா பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. அதை கேள்விப்பட்ட முதல்வர், உடனே அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி 35 வருடங்களுக்கு பிறகு அந்த 400 பேருக்கும் தற்போது பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை 1970, 1980-களில் வழங்கப்பட்ட இந்த வீட்டுமனைகளுக்கு பல இடங்களில் பட்டா இல்லை. நிறைய தொழில்நுட்ப காரணங்கள் இருந்தன. அதை எல்லாம் சரிசெய்து, இந்த பட்டாவை வழங்கி இருக்கிறோம். இந்த பகுதி மக்களுக்காக, விரைவில் இன்னும் 18 ஆயிரம் பட்டாக்களை வழங்கவுள்ளோம் என்று துணை முதல்வர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்.பி. கலாநிதி வீராசாமி, எம்எல்ஏ-க்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், ப.தாயகம் கவி, ஆர்.டி.சேகர், நா.எழிலன், ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, கே.பி.சங்கர், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு.மகேஷ் குமார், வருவாய்த் துறை செயலர் பெ.அமுதா. சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், நில நிர்வாக ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.கீதா, நிலைக் குழுத் தலைவர் (நகரமைப்பு) தா.இளைய அருணா, மாமன்ற உறுப்பினர்கள், பயனாளிகள், அரசு உயர் அலுவலர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வீடுகளையும், முந்திரிக் காடுகளையும் அழித்துவிட்டு தான் தொழிற்சாலை அமைக்க வேண்டுமா? – அன்புமணி

    July 19, 2025
    மாநிலம்

    கடலூர் மலையடி குப்பம் விவசாயிகளை அப்புறப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை

    July 19, 2025
    மாநிலம்

    நீதித் துறையில் ஏராளமான பெண் நீதிபதிகள்: தமிழகத்துக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் பாராட்டு

    July 19, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வரவேற்கத்தக்கது’ – பெ.சண்முகம் ஆதரவு

    July 19, 2025
    மாநிலம்

    “பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா?” – திருவள்ளூர் சம்பவத்தில் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி

    July 18, 2025
    மாநிலம்

    “திமுக கூட்டணியில் எந்த கட்சியும் ஆட்சியில் பங்கு குறித்து பேசவில்லை” – நவாஸ்கனி எம்.பி

    July 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வீடுகளையும், முந்திரிக் காடுகளையும் அழித்துவிட்டு தான் தொழிற்சாலை அமைக்க வேண்டுமா? – அன்புமணி
    • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
    • ‘மான்செஸ்டர் போட்டியில் ஆடும் லெவனில் இந்தியா ஒரு மாற்றம் செய்ய வேண்டும்’ – ரஹானே பகிர்வு
    • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு
    • கடலூர் மலையடி குப்பம் விவசாயிகளை அப்புறப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.