Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னை, புறநகர் கனமழை: சாலைகளில் மழைநீர் தேக்கம்; வேரோடு சாய்ந்த 17 மரங்கள்
    மாநிலம்

    சென்னை, புறநகர் கனமழை: சாலைகளில் மழைநீர் தேக்கம்; வேரோடு சாய்ந்த 17 மரங்கள்

    adminBy adminAugust 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னை, புறநகர் கனமழை: சாலைகளில் மழைநீர் தேக்கம்; வேரோடு சாய்ந்த 17 மரங்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை கனமழை கொட்டித்தீர்த்தது. தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதலே கடும் வெயில் வாட்டி வதைத்தது. புழுக்கமும் அதிகமாக இருந்ததால் பொது மக்கள் அவதிப் பட்டனர். திடீரென மாலை முதல் சென்னை, புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று அதிகாலையில் இருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

    இதன் காரணமாக சென்னை மாநகரப் பகுதிகளில் நேற்று 17 மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றை மாநகராட்சிப் பணியாளர்கள் உடனுக் குடன் வெட்டி அகற்றினர். கனமழை கொட்டித் தீர்த்த நிலையிலும், மாநகரப் பகுதிகளில் உள்ள அனைத்து சுரங்கப் பாலங்களிலும் மழைநீர் வெளியேற்றப்பட்டு, போக்குவரத்து சீராக இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கண்ணகி நகர் பகுதியில் வரலட்சுமி என்ற தூய்மைப் பணியாளர், பணியின்போது, மின்கசிவு ஏற்பட்ட மழைநீரில் கால் வைத்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து வரலட்சுமியின் குடும்பத்தாரை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தவுடன், மின்வாரியம் மற்றும் வரலட்சுமி தூய்மைப் பணி மேற்கொள்ளும் அர்பேசர் சுமித் நிறுவனம் சார்பில் தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சத்தை இழப்பீட்டு தொகையாக வழங்கினார்.

    போக்குவரத்து பாதிப்பு: கனமழையால் மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில மழைநீர் தேங்கி, நேற்று காலை போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பழைய மாமல்லபுரம் சாலை, கந்தன் சாவடி பகுதியில் மழைநீர் தேங்கியதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    அதிகபட்சமாக 17 செ.மீ. மழை: நேற்று காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லூர், பாரிமுனையில் 17 செ.மீ, மடிப்பாக்கத்தில் 15 செ.மீ, எண்ணூர், கொரட்டூர், நெற்குன்றம் ஆகிய இடங்களில் தலா 14 செ.மீ, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், திருத்தணி ஆகிய இடங்களில் தலா 13 செ.மீ, திருவள்ளூர், சென்னை அம்பத்தூர், செம்பரம்பாக்கம், வளசரவாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 11 செ.மீ, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, திருவாலங்காடு, சென்னை அயப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம் ஆகிய இடங்களில் தலா 10 செமீ, கொளத்தூர், கொரட்டூர், அடையாறு, வில்லிவாக்கம், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, ஆர்.கே.பேட்டை ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ, சென்னை ஆட்சியர் அலுவலகம், மணலி, விம்கோ நகர் கண்ணகி நகர், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அதிமுகவின் ஒன் மேன் ஆர்மியாக மாற நினைக்கிறாரா பழனிசாமி? – செல்லூர் கே.ராஜூ பளிச் நேர்காணல்

    August 24, 2025
    மாநிலம்

    ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை: விண்ணப்பிப்பது எப்படி?

    August 24, 2025
    மாநிலம்

    ஊ​ராட்​சிகளில் தூய்மைக் காவலர்களுக்கு வார விடுப்பு: சுழற்சி முறையில் வழங்க நடவடிக்கை

    August 24, 2025
    மாநிலம்

    மாநிலக் கல்விக்கொள்கை சமத்துவமான திறன்சார் கல்வியை வலுப்படுத்தும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

    August 24, 2025
    மாநிலம்

    அமித் ஷா ஆயிரம் முறை தமிழகம் வந்தாலும் பாஜக காலூன்ற முடியாது: செல்வப்பெருந்தகை கருத்து

    August 24, 2025
    மாநிலம்

    வரும் தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி: பெங்களூரு புகழேந்தி கருத்து

    August 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அதிமுகவின் ஒன் மேன் ஆர்மியாக மாற நினைக்கிறாரா பழனிசாமி? – செல்லூர் கே.ராஜூ பளிச் நேர்காணல்
    • சூக்குகள் முதல் வானளாவிய கட்டிடங்கள் வரை: கத்தார் ஏன் உங்கள் பயண பட்டியலில் ஒரு இடத்திற்கு தகுதியானவர்
    • ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கப் பதக்கம் வென்றது அர்ஜுன் – இளவேனில் ஜோடி!
    • இந்திய வான்பரப்பில் பாக். விமானம் பறக்க தடை நீட்டிப்பு
    • இந்திரா: திரை விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.