Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னை: தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் 154 மகளிருக்கு ஆட்டோ வழங்கல்
    மாநிலம்

    சென்னை: தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் 154 மகளிருக்கு ஆட்டோ வழங்கல்

    adminBy adminMay 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னை: தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் 154 மகளிருக்கு ஆட்டோ வழங்கல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சைதாப்பேட்டை தொகுதியில் தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் 154 மகளிருக்கு ஆட்டோக்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சி.வெ. கணேசன் ஆகியோர் வழங்கினர்.

    சென்னை சைதாப்பேட்டையில் 154 மகளிர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் கூடிய ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் காரப்பாக்கம் கணபதி, எஸ்.அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர்கள் கிருஷ்ண மூர்த்தி, துரை ராஜ், மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஸ்ரீதரன், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

    அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: மகளிருக்கு வழங்கப்படும் ஆட்டோக்களை 100 சதவீதம் மகளிரே ஓட்டுவது மிகப்பெரிய தலைமை பண்பை பெற்று தரும். மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1 கோடியே 15 லட்சம் மகளிர் வாழ்வில் மகிழ்ச்சி வெள்ளத்தை ஏற்படுத்தி யுள்ளது. 700 கோடி பயணங்களை மகளிர் விடியல் பயணம் நெருங்கி கொண்டிருக்கிறது, பெண்களுக்காக ஒரு பொருளாதார புரட்சியே தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தொகுதியில் 419 மகளிரும், 200 ஆண்களும் என 619 பேர் ஆட்டோக்களை பெற்று தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர்.

    இந்த அரசு பொறுப் பேற்ற பிறகு சைதாப்பேட்டை தொகுதியில் கடந்த 2023ம் ஆண்டு மகளிர்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்துடன் 151 ஆட்டோக்களும், 2024 ஆண்டில் 200 ஆண்களுக்கு ரூ.40,000 சலுகை விலையிலும் ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 8ம் தேதி மகளிர்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்துடன் கூடிய 75 பிங்க் ஆட்டோக்களை முதல்வர் வழங்கினார்.

    கடந்த மார்ச் 3ம் தேதி 39 ஆதி திராவிட பயனாளிகளுக்கு ஆட்டோக்கள் ரூ.1 லட்சம் மானியத்துடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிரே முடிந்த வரை 100 சதவீதம் நீங்களே ஓட்டக்கூடிய சக்திகளை பெற வேண்டும், அப்போதுதான் உங்களுக்கு மிகப்பெரிய தலைமை பண்பு கிடைக்கும், சமுதாயத்தில் பலதரப்பட்ட மக்களை உங்களால் சந்திக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 2000ம் ஆண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு என 9 வாரியங்களை உருவாக்கினார். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் பதிவு செய்து பலன் அடைந்து வருகின்றனர். மகளிர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டதத்தில், கடந்த ஆண்டு 1,000 மகளிர்களுக்கு மானியம் அறிவிக்கப்பட்டு, இதுவரை 545 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    அந்த வகையில் தற்போது, சைதாப்பேட்டை தொகுதியில் 154 மகளிர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியத் துடன் கூடிய ஆட்டோ வழங்கப் பட்டுள்ளது. மகளிரை தொழில் முனைவோர் ஆகவும், சுயமாக தொழில் செய்து ஆட்டோ ஓட்டுநராக தன்னம்பிக்கை வளர்க்கும் வகையில் இத்திட்டத்தினை தமிழக முதல்வர் செயல்படுத்தியுள்ளார்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாரத் பந்த்: சென்னையில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் – 1,000 பேர் கைது

    July 10, 2025
    மாநிலம்

    பாரத் பந்த்: விருதுநகரில் 17 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 2,312 பேர் கைது

    July 9, 2025
    மாநிலம்

    பழனிசாமிக்கு நாவடக்கம்  தேவை: இந்திய கம்யூனிஸ்ட் எச்சரிக்கை

    July 9, 2025
    மாநிலம்

    “இஸ்லாமிய தாய்மார்கள் சிந்தும் கண்ணீரே திமுக ஆட்சியை வீழ்த்தும்!” – சீமான்

    July 9, 2025
    மாநிலம்

    பரந்தூர் விமான நிலையத்துக்கான நிலம் எடுக்கும் பணி தொடக்கம் – போராட்டக் குழு கண்டனம்

    July 9, 2025
    மாநிலம்

    திருப்பூர்: தொழிலாளர்களின் தற்காலிக குடியிருப்பில் 9 சிலிண்டர்கள் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்

    July 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காபி நன்மைகள்: தினமும் 3 கப் காபி கொழுப்பு கல்லீரலின் அபாயத்தை 20% குறைக்கும், மற்றும் நாள்பட்ட கல்லீரல் நோயிலிருந்து இறப்பு 49% | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தீவிரவாதி ரானாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
    • பாரத் பந்த்: சென்னையில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் – 1,000 பேர் கைது
    • வைட்டமின் டி Vs கால்சியம் துணை: இது மிகவும் முக்கியமானது மற்றும் இரண்டையும் உட்கொள்ள சரியான வழி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாரத் பந்த்: விருதுநகரில் 17 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 2,312 பேர் கைது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.