சென்னை: சென்னை – கூடூர் மார்க்கத்தில் கும்மிடிப்பூண்டி – பொன்னேரி இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 27 மின்சார ரயில்களின் சேவையில் 15, 17 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது. அதன் விவரம்: சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு ஜூலை 15, 17 ஆகிய தேதிகளில் காலை 8.05,9.00, 9.30, 10.30, 11.35 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும்.
சென்ட்ரல்- சூலூர்பேட்டைக்கு அதே நாட்களில் அதிகாலை 5.40, காலை 8.35, 10.15, நண்பகல் 12.10 ஆகிய நேரங்களில் இயக்கப் படும் மின்சார ரயில்கள், சூலூர்பேட்டை – சென்ட்ரலுக்கு காலை 10.00, பகல் 11.45, 12.35, மதியம் 1.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படும். கடற்கரை – கும்மிடிப்பூண் டிக்கு அதே நாட்களில் காலை 9.40, நண்பகல் 12.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சூலூர்பேட்டை – நெல்லூருக்கு காலை 7.50 மணிக்கு இயக்கப்படும் ரயில், நெல்லூர் – சூலூர்பேட்டைக்கு காலை 10.20 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆகியவை ரத்து செய்யப்படவுள்ளன. கும்மிடிப்பூண்டி – கடற்கரைக்கு அதே நாட்களில் காலை 10.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படவுள்ளது. கும்மிடிப்பூண்டி – சென்ட்ரலுக்கு அதேநாளில் காலை 9.10, 9.55, பகல் 11.25, நண்பகல் 12.00, மதியம் 1.00, பிற்பகல் 2.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
ஆவடி – சென்ட்ரலுக்கு அதே நாட்களில் அதிகாலை 4.25 மணிக்கு இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்பட உள்ளது. செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டிக்கு 15, 17 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
கும்மிடிப்பூண்டி – தாம்பரத்துக்கு அதே நாட்களில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட வேண்டிய மின் ரயில், கும்மிடிப் பூண்டி – கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. ரத்து செய்யப்படும் மின்சார ரயில்களுக்கு பதிலாக, அதே நாட்களில், சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி, எண்ணூர் இடையே பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதுதவிர, சென்னை கடற்கரை – மீஞ்சூர் இடையே ஒரு பாசஞ்சர் சிறப்பு ரயிலும் இயக்கப்படும்.