Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னை காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள ‘எஃப்ஐஆர்’கள் எத்தனை? – பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    சென்னை காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள ‘எஃப்ஐஆர்’கள் எத்தனை? – பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminJune 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னை காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள ‘எஃப்ஐஆர்’கள் எத்தனை? – பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 2024 ஜூன் வரை நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் எத்தனை? எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகளில் புலன் விசாரணை நிலுவையில் உள்ளது? என்ற விவரங்கள் குறித்து ஜூலை 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக புகார் அளித்த குடியிருப்பு உரிமையாளரான நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை என்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை, அவமானப்படுத்தும் வகையில், குடியிருப்பு உரிமையாளர் ஒருவர் வாட்ஸ் அப் குரூப்பில் சாதி ரீதியிலான கருத்துக்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அளித்த புகார் மீது நொளம்பூர் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வானமாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி இந்த வழக்கு இன்று (ஜூன் 9), நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜரானார். அப்போது, காவல் துறை தரப்பில், வானமாமலையிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை. புகார் வந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையர் அருணை அழைத்த நீதிபதி, காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த எண்ணிக்கைக்கும் நீதிமன்றத்தில் உள்ள அறிக்கையின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது. புகார்கள் மீது விசாரணை நடத்தி அவற்றை முடித்து வைத்தால் அது குறித்து நீதிமன்றங்களுக்கு அறிக்கைகள் அனுப்பப்படுவதில்லை.

    சென்னை நகரில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 2024 ஜூன் வரை நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் எத்தனை? எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகளில் புலன் விசாரணை நிலுவையில் உள்ளன என்ற விவரங்கள் குறித்து ஜூலை 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    குற்றப்பத்திரிகைகள் கோப்புக்கு எடுக்கும் விஷயத்தில் கீழமை நீதிமன்றங்கள் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் அதை தனது கவனத்துக்கு கொண்டு வரும்படி அறிவுறுத்திய நீதிபதி, போக்குவரத்து நெரிசலில் காத்திருக்க நாம் விரும்புவதில்லை. வீட்டில் மின்சாரம் இல்லாவிட்டால் காத்திருப்பதில்லை ஆனால் வழக்குகளுக்கு மட்டும் மக்கள் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது என்று குறிப்பிட்டார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும் மக்களுக்கு எதுவும் சென்றடைவதில்லை. சட்டத்தின் ஆட்சி இல்லை. ஏராளமான குறைபாடுகள் உள்ளன என்று தெரிவித்த நீதிபதி, புலன்விசாரணை அதிகாரிகளை பாதுகாப்பு பணிகளுக்கு அனுப்பக் கூடாது என்று காவல் ஆணையருக்கு அறிவுறுத்தினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விஜய் காட்டிய ‘மாஸ்’… அதிர்வுகளை உணர்த்தும் எதிர்வினைகள் – ஒரு பார்வை

    September 15, 2025
    மாநிலம்

    “தவெகவுக்கு எனர்ஜியும், இயல்பான ஆதரவும் இருக்கிறது” – கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து

    September 15, 2025
    மாநிலம்

    “மக்கள் பிரச்சினைகளை எழுதி வைத்துப் படிப்பது சரியல்ல” – விஜய் மீது சீமான் விமர்சனம்

    September 15, 2025
    மாநிலம்

    அண்ணாமலை காலாவதி ஆனவர் அல்ல: தமிழக பாஜக

    September 15, 2025
    மாநிலம்

    வக்பு சட்டத்தில் கடுமையான விதிகளுக்கு தடை: தவெக வரவேற்பு

    September 15, 2025
    மாநிலம்

    அண்ணா பிறந்தநாள் விழா: குன்னூரில் திமுக, அதிமுக இடையே மோதல்!

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விஜய் காட்டிய ‘மாஸ்’… அதிர்வுகளை உணர்த்தும் எதிர்வினைகள் – ஒரு பார்வை
    • பார்கின்சன்: திருப்புமுனை ஆய்வு பார்கின்சன் நோயைக் குறைப்பதற்கான நம்பிக்கையை வழங்குகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இணையத்தில் எழுந்த கிண்டல்கள்: தனுஷ் பதில்
    • “தவெகவுக்கு எனர்ஜியும், இயல்பான ஆதரவும் இருக்கிறது” – கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து
    • நீரிழிவு நிர்வாகத்திற்கான தினை: இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்தவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒரு இயற்கை வழி | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.