Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கே.சுரேந்தர் பதவியேற்பு
    மாநிலம்

    சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கே.சுரேந்தர் பதவியேற்பு

    adminBy adminJune 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கே.சுரேந்தர் பதவியேற்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கே.சுரேந்தர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதி கே.சுரேந்தரை வரவேற்று பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், 2022 ஆம் ஆண்டு தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சுரேந்தர் 22,622 வழக்குகளை முடித்து வைத்துள்ளார் என்றும் நீதிபதியாக பொறுப்பேற்கும் முன் தில்சுக் நகர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகள், சத்தியம் கம்ப்யூட்டர்ஸ் முறைகேடு வழக்குகளில் அரசு சிறப்பு வழக்கறிஞராக நீதிபதி சுரேந்தர் பணியாற்றியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

    மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் நீதிபதி சுரேந்தரை வரவேற்றுப் பேசினர். ஏற்புரையாற்றிய நீதிபதி சுரேந்தர், அரசியல் சாசனத்திற்கும், நீதித்துறைக்கும் குறிப்பிடத்தக்க பங்கை வழங்கி இருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதலாக கற்றுக் கொள்ளும் ஆவலுடன் வந்திருப்பதாக குறிப்பிட்டார்.

    மேலும், இடமாற்றம் என்பது புதிய துவக்கம் என்றும் அவர் தெரிவித்தார். நீதிபதி சுரேந்தருடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. 16 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    படிக்கும்போதே விவசாயம் குறித்த சிந்தனையை ஏற்படுத்த வேண்டும்: ஐஐடி மாநாட்டில் அண்ணாமலை வலியுறுத்தல்

    August 3, 2025
    மாநிலம்

    ​​​​​​​துரோகம் செய்ததாக வைகோ குற்றச்சாட்டு: நீதி கேட்டு மல்லை சத்யா சென்னையில் உண்ணாவிரதம்

    August 3, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் நடப்பது பழனிசாமிக்கு தெரியவில்லை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம்

    August 3, 2025
    மாநிலம்

    ​​​​​​​மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த ஓபிஎஸ் திட்டம்

    August 3, 2025
    மாநிலம்

    ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கியது: மக்களை பரிவுடன் கவனிக்குமாறு மருத்துவர்களுக்கு முதல்வர் அறிவுரை

    August 3, 2025
    மாநிலம்

    ​​​​​​​சென்னையில் ‘சிங்கா 60’ கலைத் திருவிழா: சமூக, கலாச்சார சிக்கல்களை வெளிப்படுத்திய ‘முச்சந்தி’ நாடகம்

    August 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • படிக்கும்போதே விவசாயம் குறித்த சிந்தனையை ஏற்படுத்த வேண்டும்: ஐஐடி மாநாட்டில் அண்ணாமலை வலியுறுத்தல்
    • ஆண்களில் காணப்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வின் எச்சரிக்கை அறிகுறிகள்
    • ​​​​​​​துரோகம் செய்ததாக வைகோ குற்றச்சாட்டு: நீதி கேட்டு மல்லை சத்யா சென்னையில் உண்ணாவிரதம்
    • தமிழகத்தில் நடப்பது பழனிசாமிக்கு தெரியவில்லை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம்
    • ​​​​​​​மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த ஓபிஎஸ் திட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.