Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னை அரசு மனநல மருத்துவமனையில் ரூ.42 கோடியில் புதிய மைய கட்டிடங்கள் பணி நிறைவு: அமைச்சர் தகவல்
    மாநிலம்

    சென்னை அரசு மனநல மருத்துவமனையில் ரூ.42 கோடியில் புதிய மைய கட்டிடங்கள் பணி நிறைவு: அமைச்சர் தகவல்

    adminBy adminAugust 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னை அரசு மனநல மருத்துவமனையில் ரூ.42 கோடியில் புதிய மைய கட்டிடங்கள் பணி நிறைவு: அமைச்சர் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை அரசு மனநல மருத்​து​வ​மனை​யில் ரூ.42 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள மனநலம் மற்​றும் நரம்​பியல் ஒப்புயர்வு மையத்தை முதல்​வர் விரை​வில் திறந்து வைக்​க​வுள்​ளார் என்று சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். சென்னை அரசு மனநல மருத்​து​வ​மனை​யில் ரூ.40.5 கோடி​யில் தீவிர சிகிச்​சைப் பிரிவு கட்​டிடத்​துக்கு சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு ஆகியோர் நேற்று அடிக்​கல் நாட்​டினர்.

    தொடர்ந்​து, ரூ.42 கோடி​யில் கட்​டப்​பட்டு விரை​வில் பயன்​பாட்​டுக்கு வரவுள்ள மனநலம் மற்​றும் நரம்​பியல் ஒப்​புயர்வு மையம் கட்டு​மான பணி​யினை ஆய்வு செய்​தனர். மருத்​து​வக்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் (பொ) தேரணி​ராஜன், அரசு மனநல மருத்​து​வ​மனை இயக்​குநர் மாலை​யப்​பன் உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

    அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறிய​தாவது: இந்த மருத்​து​வ​மனை​யில் இடைநிலை பராமரிப்புமையம், காந்த சக்தி மூலம் மூளை​யைத் தூண்​டும் நவீன சிகிச்சை ஆகிய​வற்றை முதல்​வர் ஏற்​கெனவே தொடங்கி வைத்​துள்​ளார்.

    ரூ.42 கோடி செல​வில் மனநலம் மற்​றும் நரம்​பியல் ஒப்​புயர்வு மையம் கட்​டு​வதற்கு முதல்​வர் அடிக்​கல் நாட்​டி​யிருந்​தார். கட்​டிடப் பணி​கள் முடிவடைந்த நிலை​யில் மருத்​துவ உபகரணங்​கள் கொள்​முதல் செய்​யும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்த மைய கட்​டிடத்தை முதல்​வர் விரை​வில் திறந்து வைக்​க​வுள்​ளார்.

    இந்த மருத்​து​வ​மனை​யில் ஏற்​கெனவே ரூ.4.62 கோடி​யில் பாரம்​பரிய கட்​டிட​மாகக் கருதப்​பட்ட மனமகிழ் மன்​ற கட்​டிடம் புனரமைக்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது. இந்​தி​யா​வில் முதன்​முறை​யாக மனநோ​யாளர்​களுக்கு காப்​பீட்டு திட்​டம் செயல்​படுத்​தப்​படு​கிறது. 850-க்​கும் மேற்​பட்ட மருத்​துவ பயனாளர்​களுக்கு முதலமைச்​சரின் விரி​வான மருத்​துவ காப்​பீட்டு திட்​டம் பயன்​பாட்​டில் உள்​ளது.

    மருத்​து​வக் கட்​டமைப்பை மேம்​படுத்​தும் முயற்​சி​யாக 100 தீவிர சிகிச்சை பிரிவுக்​கான மருத்​து​வக் கட்​டிடம், 220 மற்ற சாதாரண படுக்கை வசதி​கள் கொண்ட கட்​டிடம் என்று 330 படுக்கை வசதி​கள் கொண்ட 3 பிளாக்​கு​கள் கட்​டும் பணி தற்​போது தொடங்கி வைக்​கப்​பட்​டுள்​ளது.

    இந்​தப் பணி​கள் முடிவுற்ற பிறகு இந்த மருத்​து​வ​மனை​யில் மட்​டும் 570 படுக்கை வசதி​களோடு புதிய கட்​டிடத்​திலேயே மருத்​துவ பயனாளர்​கள் பயன் பெறு​வார்​கள். ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ திட்ட முகாம் தொடங்​கப்​பட்ட ஒரே நாளில் 38 மாவட்​டங்​களில் 44,418 பேர் பயன்​பெற்று இருக்​கிறார்​கள். வரும் சனிக்​கிழமை 37 மாவட்​டங்​களில் நடத்​தப்பட உள்​ளது.

    388 வட்டாரங்​களுக்கு தலா 3 என்ற வகை​யிலும், 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட 5 மாநக​ராட்​சிகளில் தலா 4 என்ற வகை​யிலும், 10 லட்​சத்​துக்​கும் குறை​வான 19 மாநக​ராட்​சிகளில் தலா 3 என்ற வகை​யிலும் 1,256 மு​காம்​கள் நடத்​தப்பட உள்​ளன. வாரத்​துக்கு 38 மு​காம்​கள் என 6 மாதங்​களுக்​குள்​ நடத்​தப்​படும்​. இவ்​வாறு அமைச்​சர்​ கூறி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    7-வது முறையாக ஆட்சி அமைக்க உறுதியேற்போம்: திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

    August 6, 2025
    மாநிலம்

    இன்னும் 70 ஆண்டுகள் ஆனாலும் திமுகவுக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை: பழனிசாமி கருத்து

    August 6, 2025
    மாநிலம்

    அனலைக் கிளப்பும் ‘அனாதைமடம்’ டைடல் பார்க்! – எந்தப் பக்கம் நிற்பது என்று தெரியாமல் தகிக்கும் திமுக மேயர்

    August 6, 2025
    மாநிலம்

    முதல்வர் தலைமையில் ஆக. 14-ல் அமைச்சரவை கூட்டம்

    August 6, 2025
    மாநிலம்

    திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

    August 6, 2025
    மாநிலம்

    எழும்பூர் ஈவெரா சாலை முதல் உயர் நீதிமன்றம் வரை… – சென்னை பாரம்பரிய கட்டிடங்கள் வழித்தடம்

    August 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘தூங்குவது’ உண்மையில் வேலை செய்கிறது! இது கற்றல் மற்றும் நினைவகத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பது இங்கே | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 7-வது முறையாக ஆட்சி அமைக்க உறுதியேற்போம்: திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு
    • இன்னும் 70 ஆண்டுகள் ஆனாலும் திமுகவுக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை: பழனிசாமி கருத்து
    • அனலைக் கிளப்பும் ‘அனாதைமடம்’ டைடல் பார்க்! – எந்தப் பக்கம் நிற்பது என்று தெரியாமல் தகிக்கும் திமுக மேயர்
    • 7 நாள் ஓட்ஸ் சவால்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நன்மைகள், மாற்றங்கள் மற்றும் பக்க விளைவுகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.