Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த தூய்மை பணியாளர்கள் கைது: காவல் துறை நடவடிக்கை
    மாநிலம்

    சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த தூய்மை பணியாளர்கள் கைது: காவல் துறை நடவடிக்கை

    adminBy adminAugust 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த தூய்மை பணியாளர்கள் கைது: காவல் துறை நடவடிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தலைநகர் சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து புதன்கிழமை இரவு இந்த கைது நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டனர்.

    சென்னை மாநக​ராட்சி மண்​டலம் 5, 6 பகு​தி​களுக்​கான தூய்​மைப் பணி தனி​யார் நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதை எதிர்த்​தும், பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தியும்​ இரண்டு மண்டல தூய்​மைப் பணி​யாளர்​களில் என்​யூஎல்​எம் பிரிவைச் சேர்ந்​தவர்​கள் கடந்த 13 நாட்​களாக ரிப்​பன் மாளிகை முன்பு போராட்​டம் மேற்கொண்டனர். தூய்​மைப் பணி​யாளர்​களு​டன் அரசு தரப்பு மேற்கொண்ட பல சுற்​று பேச்​சு​வார்த்​தை​ தோல்​வி​யில் முடிந்த நிலை​யில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    முன்னதாக, போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறித்து போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை அடுத்து போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறை புதன்கிழமை மாலை அறிவுறுத்தியது.

    இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை அங்கு தொடர்ந்தனர். சுதந்திர தினம் நெருங்குகின்ற சூழலில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் தங்களது கையில் தேசிய கொடியை ஏந்தி இருந்தனர். இந்த சூழலில் நீதிமன்ற உத்தரவின் பேரில் புதன்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

    கைது நடவடிக்கைக்கு ஆளான தூய்மை பணியாளர்கள் அரசு பேருந்து மூலம் அழைத்து செல்லப்பட்டனர். போராட்ட களத்தில் இருந்து விலகி செல்ல மறுத்தவர்களை குண்டுக்கட்டாக போலீஸார் தூக்கி சென்றனர். பெண் தூய்மை பணியாளர்களை பெண் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரிப்பன் மாளிகை பகுதி முழுவதும் போலீஸார் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த கைது நடவடிக்கையின் போது அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சுதந்திர தின ஏற்பாடுகள் தீவிரம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீஸார்

    August 14, 2025
    மாநிலம்

    ஆவடி​ மாநகராட்சியைக் கண்டித்து ஆக.28-ம் தேதி ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் அறிவிப்பு

    August 14, 2025
    மாநிலம்

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.14, 15-ல் தலைமைச் செயலக பகுதியில் ‘ட்ரோன்’ பறக்க தடை

    August 14, 2025
    மாநிலம்

    திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.பி மைத்ரேயன்: அதிமுகவில் அடுத்தடுத்து விழும் விக்கெட்!

    August 14, 2025
    மாநிலம்

    சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

    August 14, 2025
    மாநிலம்

    ஆளுநரின் தேநீர் விருந்தில் விசிக பங்கேற்காது: திருமாவளவன் அறிவிப்பு

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒரே இரவில் பருக்களை அகற்றுவது எப்படி: தெளிவான சருமத்திற்கான வேகமான மற்றும் இயற்கை வைத்தியம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சுதந்திர தின ஏற்பாடுகள் தீவிரம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீஸார்
    • நாளை முதல் தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்து கட்டண உயர்வால் பயணிகள் அவதி
    • பாறை உப்பு அல்லது ‘செண்டா நமக்’ அதிகப்படியான பக்க விளைவுகள்: உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழப்பு உங்கள் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஐ.நா பொதுச் சபையில் உரையாற்ற அமெரிக்கா செல்கிறார் பிரதமர்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.