Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம்: எஸ்ஐ, 2 தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை
    மாநிலம்

    சென்னையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம்: எஸ்ஐ, 2 தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை

    adminBy adminSeptember 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம்: எஸ்ஐ, 2 தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவரின் மரணம் தொடர்பான கொலை வழக்கில், உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு தலைமைக் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம், குட்டி பழனி என்கிற பழனி குடிபோதையில் தகராறு செய்வதாக வந்த புகாரில், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தினர், மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறி கடுமையாக தாக்கியுள்ளனர்.

    அதன்பின்னர், வீட்டிற்கு அனுப்பப்பட்ட பழனி மரணமடைந்ததால், கோட்டூர்புரம் போலீஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தந்தை ரங்கநாதன் புகாரில் வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர், அதை சைதாப்பேட்டை உதவி ஆணையருக்கு அனுப்பியுள்ளார்.

    காவல்துறையினர் மீதான வழக்கு என்பதால், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, அவரது கூடுதல் நேர்முக உதவியாளரும், சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட் நடத்திய விசாரணையில், பழனியின் மரணத்திற்கு காவல்துறையினரின் தாக்குதல் தான் காரணம் என அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யபட்டது.

    அதனடிப்படையில், சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட் சி.ராஜேந்திரனின் புகாரை அடிப்படையாக கொண்டு, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, கோட்டூர்புரம் காவல் நிலைய குற்றப் பிரிவு உதவி ஆய்வாளராக இருந்த பி. ஆறுமுகம் தலைமை காவலர்களாக இருந்த எம். மனோகரன், பி.என். ஹரிஹர சுப்ரமணியன், வின்சென்ட், ஏழுமலை ஆகிய 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கின் விசாரணை சென்னை அல்லிக்குளம் வணிக வளாகத்தில் அமைந்துள்ள 6வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, புகார்தாரரான சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட் தரப்பில் அரசின் பெருநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.தேவபிரசாத் ஆஜராகி வாதிட்டார். வழக்கு நிலுவையில் இருந்தகாலத்தில் வின்சென்ட் மற்றும் ஏழுமலை ஆகியோர் இறந்துவிட்டதால், அவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை.

    இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிபதி வி.பாண்டியராஜ், பழனியின் மரணத்திற்கு காவல்துறையினர் தாக்கியதுதான் காரணம் என விசாரணையில் நிருபணம் ஆவதாக கூறி, கோட்டூர்புரம் எஸ்.ஐ.-ஆக இருந்த பி. ஆறுமுகம் ஏட்டுகளாக இருந்த எம். மனோகரன், பி.என். ஹரிஹர சுப்ரமணியன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவித்தார். அவர்களது குற்றங்களுக்காக எஸ்.ஐ. உள்ளிட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கிலோ மீட்டர் அலவன்ஸை 25% உயர்த்தக் கோரி சென்னையில் ரயில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

    September 24, 2025
    மாநிலம்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம்

    September 24, 2025
    மாநிலம்

    மதுரை ஹாக்கி மைதானம் தென் தமிழக வீரர்கள் பயிற்சி எடுக்க சிறந்த தளம் : உதயநிதி பெருமிதம்

    September 24, 2025
    மாநிலம்

    ஊரக வேலைத் திட்டத்தில் ரூ.87 கோடி ஊழல்: உயர்நிலை விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்

    September 24, 2025
    மாநிலம்

    ஈரோடு மாவட்ட மலையாளி பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குக: அன்புமணி

    September 24, 2025
    மாநிலம்

    ‘வந்தவங்க வாழ்றாங்க… இருக்கிறவங்க வாடுறோம்ங்க..!’ – அமைச்சர் முன்னிலையில் திமுக நிர்வாகி புலம்பல்

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்த நாய்கள் உண்மையில் மனிதர்களைப் போல சிந்திக்க முடியும் – குழந்தைகளை விட வியக்கத்தக்க வகையில் புத்திசாலி | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாநில அந்தஸ்து கோரி லடாக் பாஜக அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை
    • கிலோ மீட்டர் அலவன்ஸை 25% உயர்த்தக் கோரி சென்னையில் ரயில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
    • ஒரு பழம் மட்டுமே உணவு உங்களை உயிரோடு வைத்திருக்க முடியுமா? உங்கள் உடலில் சுகாதார விளைவுகள் விளக்கப்பட்டுள்ளன | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அன்று சச்சினிடம் ஆட்டமிழந்த திராவிட்… இன்று அர்ஜுன் டெண்டுல்கரிடம் ஆட்டமிழந்த சமித் திராவிட்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.