Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னையில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர் முகாம்: தியாகராய நகரில் 26-ம் தேதி நடைபெறுகிறது
    மாநிலம்

    சென்னையில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர் முகாம்: தியாகராய நகரில் 26-ம் தேதி நடைபெறுகிறது

    adminBy adminJune 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னையில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர் முகாம்: தியாகராய நகரில் 26-ம் தேதி நடைபெறுகிறது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர் முகாம் சென்னை தியாகராயநகரில் வரும் ஜூன் 26-ம் தேதி நடைபெறுகிறது.

    இது தொடர்பாக அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை தியாகராயநகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் வரும் ஜூன் 26-ம் தேதி காலை 11 மணிக்கு அஞ்சல் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

    அஞ்சல்துறையின் பொருள்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைகளை கோட்ட அளவிலான குறைதீர் மன்றத் தலைவர் விசாரிப்பார். இந்தக் கோட்டத்துக்கு உட்பட்ட தங்கள் புகார்களை வாடிக்கையாளர்கள் சென்னை நகர மத்திய கோட்ட முதுநிலை கண்காணிப்பாளருக்கு ஜூன் 18-ம் தேதி அல்லது அதற்கு முன் அனுப்பலாம்.

    பதிவு தபால் (பதிவு செய்யப்பட்ட தேதி), பார்சல், காப்பீடு, மணியார்டர் தொடர்பான புகார்களை அனுப்புநர் மற்றும் பெறுநர் முகவரிகள் போன்ற தகவல்களுடனும், சேமிப்பு திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் அல்லது ஊரக அஞ்சலக காப்பீட்டுத் திட்டங்கள் தொடர்பான புகார்களில், கணக்கு எண், பாலிசி எண் ஆகியவற்றுடன் புகார்தாரரின் முழு முகவரி, அஞ்சல் நிலையப் பெயர் போன்ற தகவல்களுடனும் அனுப்ப வேண்டும்.

    கீழ்நிலை அஞ்சலகங்களில் எடுத்துக்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு மனநிறைவு தரும்வகையில் தீர்வு காணப்படாத புகார்கள் மட்டுமே, மண்டல அளவிலான குறைதீர் முகாமில் எடுத்துக்கொள்ளப்படும். புதிய புகார்கள் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. புகார்களை சாதாரண தபாலிலோ அல்லது பதிவுத் தபாலிலோ அனுப்ப வேண்டும். புகார்கள் அடங்கிய உறையின் மேற்பகுதியில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர் என குறிப்பிட வேண்டும்.

    மேலும், தியாகராயநகர், மயிலாப்பூர் ஆகிய தலைமை அஞ்சல் அலுவலகங்கள், சூளைமேடு, ராயப்பேட்டை, கிரீம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை, கோபாலபுரம்,

    திருவல்லிக்கேணி, தியாகராயநகர் வடக்கு, தியாகராயநகர் தெற்கு, இந்தி பிரசார சபா, மந்தைவெளி, விவேகானந்தா கல்லூரி, சாஸ்திரிபவன், டிபிஐ வளாகம், தேனாம்பேட்டை மேற்கு, நுங்காம்பாக்கம் நெடுஞ்சாலை, லயோலா கல்லூரி, லாயிட்ஸ் எஸ்டேட் சேப்பாக்கம், சென்னை பல்கலைக்கழகம், பார்த்தசாரதி கோயில் ஆகிய அஞ்சல் அலுவலகங்கள், முதன்மை கண்காணிப்பாளர் பொது அஞ்சல் அலுவலகம், நுங்கம்பாக்கம் மண்டல வளர்ச்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் தொடர்பான புகார்களை dochennaicitycentral@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘கிங்டம்’ படத்துக்கு எதிர்ப்பு: திரையரங்குகளில் நாதகவினர் முற்றுகை

    August 5, 2025
    மாநிலம்

    அசோக்குமாருக்கு என்ன நிபந்தனை விதிக்கலாம்? – அமலாக்கத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    August 5, 2025
    மாநிலம்

    “அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” – இபிஎஸ் உறுதி

    August 5, 2025
    மாநிலம்

    பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளம்: மலைவாழ் மக்கள் கொடுத்த தகவலால் தப்பிய பக்தர்கள்!

    August 5, 2025
    மாநிலம்

    “எனது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் எனில் சட்டமன்றத்தில் என்னை அமர வையுங்கள்” – சீமான்

    August 5, 2025
    மாநிலம்

    “கூட்டணியை நம்பி இருக்கிறது திமுக… மக்களை நம்பி இருக்கிறது அதிமுக!” – பழனிசாமி பேச்சு

    August 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்கள் படுக்கையறை கதவை மூடியதன் மூலம் நீங்கள் ஏன் எப்போதும் தூங்க வேண்டும்: உங்கள் உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒரு சிறிய பழக்கம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சிட்னி ஸ்வீனியின் ‘ஜீன்ஸ்’ விளம்பரமும்; டொனால்டு ட்ரம்ப்பின் ரியாக்‌ஷனும்!
    • ‘கிங்டம்’ படத்துக்கு எதிர்ப்பு: திரையரங்குகளில் நாதகவினர் முற்றுகை
    • ஒரே நாளில் 70 கோடி பரிவர்த்தனை: புதிய மைல்கல்லை எட்டிய யுபிஐ
    • மேட்சா ஏன் அனைவருக்கும் சரியான பானமாக இருக்கக்கூடாது, குறிப்பாக நீங்கள் இரும்பு குறைவாக இருந்தால் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.