Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்​னை​யில் பசுமை பரப்பை அதி​கரிக்க ஜூன் 5 முதல் 1 லட்​சம் மரக்​கன்று நடும் பணி – மாநக​ராட்சி நடவடிக்கை
    மாநிலம்

    சென்​னை​யில் பசுமை பரப்பை அதி​கரிக்க ஜூன் 5 முதல் 1 லட்​சம் மரக்​கன்று நடும் பணி – மாநக​ராட்சி நடவடிக்கை

    adminBy adminMay 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்​னை​யில் பசுமை பரப்பை அதி​கரிக்க ஜூன் 5 முதல் 1 லட்​சம் மரக்​கன்று நடும் பணி – மாநக​ராட்சி நடவடிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், மாநகர பசுமைப் பரப்பை அதிகரிக்க ஜூன் 5-ம் தேதி முதல் மரக்கன்று நடவு பணிகளைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. மாநகராட்சி தரவுகளின்படி இம்மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 21 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. மக்கள்தொகை 80 லட்சமாக உள்ளது. தினமும் சுமார் 15 லட்சம் பேர் சென்னைக்கு வந்து செல்கின்றனர்.

    இங்கு சராசரியாக ஒரு சதுர கிமீ பரப்பில் 26 ஆயிரம் பேரும், வடசென்னை போன்ற பகுதிகளில் சில இடங்களில் ஒரு சதுர கிமீ பரப்பில் 65 ஆயிரம் பேரும் வசிக்கின்றனர். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சக வழிகாட்டுதல்படி, மாநகரின் மொத்த நிலப்பரப்பில் 33.3 சதவீதம் பசுமைப் போர்வையுடன் இருக்க வேண்டும்.

    அப்படியெனில், 426 சதுர கிமீ பரப்பளவு கொண்ட சென்னையில் 144 சதுர கிமீ (33 சதவீதம்) பரப்பளவுக்கு பசுமைப் போர்வை இருக்க வேண்டும். ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு நடத்தப்பட்ட வன கணக்கெடுப்பு அறிக்கையில் சென்னை மாநகரில் 22.70 சதுர கிமீ (5.28 சதவீதம்) அளவே பசுமைப் போர்வை உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

    பெங்களூரு (6.81 சதவீதம்), டெல்லி (12.61 சதவீதம்), ஹைதராபாத் (12.90 சதவீதம்), மும்பை (25.41 சதவீதம்) போன்ற நகரங்களின் பசுமைப் பரப்பை விட சென்னை மாநகர பசுமைப் பரப்பு குறைவான நிலையில் உள்ளது. கடலோர நகரம் என்பதால், சென்னையில் பசுமைப் பரப்பு குறைவாக இருப்பதின் தாக்கம் உணரப்படவில்லை. இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் 33.3 சதவீதம் பசுமைப் பரப்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது: மாநகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்க, மாநகராட்சி மயானங்களில் காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகளை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் மயானத்தில் 500 மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மணலி மயானத்தில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதேபோல், அனைத்து மயானங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 12 அடி உயரம் வரை வளர்ந்த மரக்கன்றுகள்தான் நடப்பட்டு வருகின்றன. அனைத்து பகுதிகளிலும் சொட்டுநீர் பாசன கட்டமைப்பு ஏற்படுத்தி, அதன்மூலம் மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்ச திட்டமிடப்பட்டுள்ளது.

    தொண்டு நிறுவனங்கள் மற்றும் மழைநீர் சேகரிப்பில் ஆர்வம் கொண்ட தன்னார்வலர்களுடன் இணைந்து, ஜூன் 5-ம் தேதி (உலக சுற்றுச்சூழல் தினம்) முதல் தீவிர மரக்கன்று நடும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். இதில் ஆர்வம் உள்ள தொண்டு நிறுவனங்கள், 94450 71037 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். மரக்கன்று நடவு பணி தொடர்பாக விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 1 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து இடங்களிலும் உள்ளூர் மரக்கன்றுகள் மட்டுமே நடப்படும். அதன்படி, ஆலமரம், அரச மரம், செண்பக மரம், வேங்கை, சிவப்பு சந்தனம், சந்தனம், மகா வில்வம், இலுப்பை, மகிழம், தேக்கு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட உள்ளூர் இன மரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    மாநகர மண் வகைக்கும், சாலைகளின் அகலத்துக்கும் ஏற்ப உள்ளூர் மர வகைகள் தேர்வு செய்து நடப்படும். பறவைகளுக்கு உணவளிக்கும் விதமாக இலந்தை, நாவல், அத்தி போன்ற பழ மரங்கள் மற்றும் கொடுக்காபுளி மரங்களும் நடப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர கோரி கோவை ஆட்சியர் அலுவலகம் வந்த மூதாட்டி!

    June 30, 2025
    மாநிலம்

    சிறு வணிகர்களுக்கான மின் கட்டண சலுகைகள் என்னென்ன? – தமிழக அரசு அறிவிப்பு

    June 30, 2025
    மாநிலம்

    “தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து விசிக தான் வலுவான கட்சி!” – திருமாவளவன்

    June 30, 2025
    மாநிலம்

    காவலாளி அஜித்குமார் மரணம்: மடப்புரத்தில் குற்றவியல் நடுவர் விசாரணை – நடந்தது என்ன?

    June 30, 2025
    மாநிலம்

    ராமதாஸ் மீது திடீர் பாசமா? – அன்புமணிக்கு திருமாவளவன் விளக்கம்

    June 30, 2025
    மாநிலம்

    புதுச்சேரி: பாஜக முக்கிய நிர்வாகிகள் பயணித்த விமானம் ரத்து!

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர கோரி கோவை ஆட்சியர் அலுவலகம் வந்த மூதாட்டி!
    • பெண்களால் கட்டப்பட்ட இந்தியாவில் பிரபலமான நினைவுச்சின்னங்கள்; சில யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள்
    • பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’  – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
    • சிறு வணிகர்களுக்கான மின் கட்டண சலுகைகள் என்னென்ன? – தமிழக அரசு அறிவிப்பு
    • வைட்டமின் சி குறைபாட்டைப் புரிந்துகொள்வது: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.