Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னையில் நாய் கடி சம்பவத்தை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    சென்னையில் நாய் கடி சம்பவத்தை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminAugust 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னையில் நாய் கடி சம்பவத்தை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை மாநகரில் கடந்த ஆண்டு மட்​டும் சுமார் 20 ஆயிரம் பேரை நாய்​கள் கடித்​துள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்ட தகவலால் அதிர்ச்​சி​யடைந்த நீதிப​தி​கள், நாய்க்​கடி சம்​பவங்​களை தடுக்க திட்​டம் வகுத்து விரி​வான அறிக்கை தாக்​கல் செய்ய மாநக​ராட்​சிக்கு உத்​தர​விட்​டுள்​ளனர்.

    சென்​னை​யில் வீட்​டில் செல்​ல​மாக வளர்க்​கப்​படும் ராட்​வீலர் நாய்​களும், தெரு​நாய்​களும் சிறு​வர், சிறுமியர் மற்​றும் பெண்​களை கடித்​துக் குதறிய சம்​பவங்​களை​யடுத்​து, நாய்​களை கட்​டுப்​படுத்​தக் கோரி கோடம்​பாக்​கத்​தைச் சேர்ந்த வழக்​கறிஞ​ரான ஆர்.எஸ்​. தமிழ்​வேந்​தன் உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

    அதில், ‘தெருக்​களில் வாய்​மூடி அணிவிக்​காமல் அழைத்​துச் செல்​லப்​படும் ராட்​வீலர் போன்ற வளர்ப்பு நாய்​களை​யும், ஆக்​ரோஷமாக சுற்​றித்​திரி​யும் தெரு​நாய்​களை​யும் பிடித்து பொது​மக்​களை பாது​காக்க உரிய நடவடிக்கை எடுக்க மாநக​ராட்​சிக்கு உத்​தர​விட வேண்​டும்’ என கோரி​யிருந்​தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்​ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி சுந்​தர்​மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசாரணைக்கு வந்​தது. அப்​போது, சென்னை மாநக​ராட்​சி​யின் முதன்மை கால்​நடைத் துறை அதி​காரி​யான ஜெ.க​மால் ஹூசைன் ஆஜராகி அறிக்கை தாக்​கல் செய்​தார்.

    அதில், ‘சென்னை மாநக​ராட்சி எல்​லைக்​குள் வீடு​களில் நாய் உள்​ளிட்ட செல்​லப்​பி​ராணி​களை வளர்ப்​பவர்​கள் அதற்​கான உரிமம் பெறு​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. ஆன்​லைனில் இதற்​கான உரிமம் பெறு​வதற்​கான நடை​முறை​கள் எளி​தாக்​கப்​பட்​டுள்​ளது. இந்த நாய்​களால் பொது சுகா​தா​ரத்​துக்கு ஏற்​படும் தீங்​கு​கள், மலம் கழித்​தல், கடித்​தல் போன்ற அனைத்து நிகழ்​வு​களுக்​கும் சம்​பந்​தப்​பட்ட உரிமை​யாளரே பொறுப்​பேற்க வேண்​டும் என்​றும் நிபந்​தனை​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளது.

    கடந்த ஆக.9-ம் தேதி முதல் வெறி​நாய் தடுப்​பூசி போடு​வதற்​கான மெகா திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்டு 200 வார்​டு​களி​லும் 60 நாட்​களுக்​குள் முடிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது’ என தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. விசா​ரணை​யின்​போது, ‘‘சென்​னை​யில் எத்​தனை நாய் கடி சம்​பவங்​கள் நடந்​துள்​ளன’’ என தலைமை நீதிபதி கேள்வி எழுப்​பினர். அதற்கு பதிலளித்த கால்​நடைத்​துறை அதி​காரி, ‘‘உத்​தேச​மாக கடந்த ஆண்டு மட்​டும் 20 ஆயிரம் நாய் கடி சம்​பவங்​கள் நிகழ்ந்து இருக்​கும்’’ என்​றார்.

    அதைக் கேட்டு அதிர்ச்​சி​யடைந்த நீதிப​தி​கள், தெரு​நாய்​களை பிடித்து கருத்​தடை செய்து தடுப்​பூசி போட்டு மீண்​டும் அதே பகுதியில் விடு​வதற்கு பதிலாக அவற்றை தனி​யாக காப்​பகம் அமைத்து பராமரிக்​கலாம் என கருத்து தெரி​வித்​தனர். பின்​னர் தெரு​நாய் விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்​ற​மும் விசா​ரித்து வரு​வ​தால், நாய் கடி சம்​பவங்​களைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்​டுள்​ளது என்​பது தொடர்​பாக விரி​வான அறிக்கை தாக்​கல் செய்ய மாநக​ராட்சிக்​கு உத்​தர​விட்​டு, வி​சா​ரணை​யை 3 வாரங்​களுக்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கரிசன கணேசன்… கண்டுகொள்ளாத அருண்மொழித்தேவன்! – கடலூர் மாவட்ட அரசியல் கணக்குகள்

    August 15, 2025
    மாநிலம்

    விடுதலை போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் 9 அறிவிப்புகள்

    August 15, 2025
    மாநிலம்

    கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 950 பேர் விடுவிப்பு – பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து வழக்குப் பதிவு

    August 15, 2025
    மாநிலம்

    செங்கல்பட்டில் ரூ.700 கோடி முதலீட்டில்  மின் கருவிகள் உற்பத்தி ஆலை: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

    August 15, 2025
    மாநிலம்

    ஆக.17-ல் திருமாவளவன் பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் தீவிரம்: கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு

    August 15, 2025
    மாநிலம்

    அரசின் திட்டங்களை எதிர்த்து வழக்கு; வழக்கறிஞர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

    August 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கரிசன கணேசன்… கண்டுகொள்ளாத அருண்மொழித்தேவன்! – கடலூர் மாவட்ட அரசியல் கணக்குகள்
    • இதய ஆரோக்கியம், கல்லீரல் செயல்பாடு, கொலஸ்ட்ரால் மற்றும் பலவற்றை மேம்படுத்துதல்: ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி தேநீர் சக்திவாய்ந்த சுகாதார நன்மைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை
    • விடுதலை போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் 9 அறிவிப்புகள்
    • சாட்ஜ்ட் ஆலோசனைக்குப் பிறகு செல்வாக்கு செலுத்துபவர்கள் விமானத்தை இழக்கிறார்கள்: திருப்பம் உங்களை பேச்சில்லாமல் விட்டுவிடும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.