Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, December 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னையில் தொடங்கியது மகளிர் சுய உதவிக் குழுக்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி!
    மாநிலம்

    சென்னையில் தொடங்கியது மகளிர் சுய உதவிக் குழுக்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி!

    adminBy adminSeptember 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னையில் தொடங்கியது மகளிர் சுய உதவிக் குழுக்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி இன்று (செப்.12) முதல் வரும் அக்.5-ம் தேதி வரை நடைபெறுகிது. கண்காட்சியை ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி இன்று காலை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    நவராத்திரியை முன்னிட்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி மதி விற்பனை கண்காட்சி, சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சியை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தொடங்கி வைத்து, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டார்.

    அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “மகளிர் சுய உதவிக் குழுக்களை ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்களது தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் வகையில் 24 நாட்கள் கொண்ட கண்காட்சியை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சி அக்.5-ம் தேதி வரை நடைபெறும். தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியை இலவசமாக பார்வையிட்டு தங்களுக்கு தேவையான மகளிர் சுய உதவிக் குழுக்களின் தரமான பொருட்களை வாங்கிச் செல்லலாம்.

    இந்த கண்காட்சியில் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள சுய உதவிக் குழுக்கள் தயாரித்த, அந்தந்த மாவட்டத்தின் சிறப்பு மிக்க பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில் சென்னையில் கிடைக்காத, தாங்கள் விரும்பும் பல்வேறு மாவட்ட பொருட்களை ஒருசேர ஒரே இடத்தில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் பெரு நிறுவனங்களில் பலருக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்றாலும், அதற்கான கிஃப்ட் பாக்ஸ்களும் இங்கு கிடைக்கும். அதேபோல் பெரியளவிலான ஆர்டர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

    கண்காட்சியில் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளான நவராத்திரி கொலு பொம்மைகள், குத்து விளக்குகள், பட்டு, பருத்தி ஆடைகள், செயற்கை ஆபரணங்கள், கைவினை பொருட்கள், சணல், காகிதம், பனை ஓலை மற்றும் வாழை நார் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், தோல் பொருட்கள், மரச் சிற்பங்கள், மூலிகை பொருட்கள் உள்ளிட்டவை 46 அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இத்துடன் அறுசுவை மிகுந்த பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்வதற்கென 5 அரங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிகழ்வில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.வி.ஷஜீவனா, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை இயக்கு அலுவலர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பெண்களுக்கு அமைதியான உடல்நல அபாயங்களைப் பிடிக்கும் 5 வருடாந்திர சோதனைகளை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்திய வம்சாவளி நகைச்சுவை நடிகர் ஜர்னா கார்க் கூறுகையில், இந்தியர்கள் டிரம்பை நேசிக்கிறார்கள், ஏனெனில் ‘அனைத்து அரசியல்வாதிகளும் வீட்டிற்கு திரும்பி வக்கிரமாக இருக்கிறார்கள்’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குளிர்காலத்தில் குளிர்ந்த மழை உங்கள் சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது: தோல் மருத்துவர் விளக்குகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ‘ஷீலா மூர்த்தியின் கிக் டிரம்ப்’ பேச்சுக்கு முன்னாள் பிடன் ஆலோசகர் கண்டனம்; வன்முறை தீர்வல்ல – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கரீனா கபூர் டயட்: ஆடம்பரமான உணவுகள் அல்லது மிருதுவாக்கிகள் இல்லை-பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் கரீனா கபூர் உண்மையில் ஒரு நாளில் என்ன சாப்பிடுகிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்; ‘அவளுக்கு குறைந்த பட்சம் அதே உணவு உண்டு…’ | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.