Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, October 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னையில் தெரு நாய்கள், செல்ல பிராணிகளுக்கு உரிமம் வழங்க ஒருங்கிணைந்த மேலாண்மை இணையதளம் தொடக்கம்
    மாநிலம்

    சென்னையில் தெரு நாய்கள், செல்ல பிராணிகளுக்கு உரிமம் வழங்க ஒருங்கிணைந்த மேலாண்மை இணையதளம் தொடக்கம்

    adminBy adminOctober 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னையில் தெரு நாய்கள், செல்ல பிராணிகளுக்கு உரிமம் வழங்க ஒருங்கிணைந்த மேலாண்மை இணையதளம் தொடக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை மாநகரில் தெரு நாய்​கள் மற்​றும் செல்​லப் பிராணி​களுக்கு உரிமம் வழங்​குதல், மைக்​ரோசிப் பொருத்​துதல் உள்​ளிட்ட பணி​களுக்கு ஒருங்​கிணைந்த மேலாண்மை இணை​யதளம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநக​ராட்சி எல்​லைக்​குள் செல்​லப் பிராணி​களை வளர்ப்​ப​தற்கு உரிமம் பெறு​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது.

    செல்​லப் பிராணி​கள் வளர்ப்பை முறைப்​படுத்த கடந்த 2023-ம் ஆண்​டு, ஆகஸ்ட் மாதம் முதல் மாநக​ராட்சி இணை​யதளம் வாயி​லாக செல்​லப்​பி​ராணி உரிமம் பெறு​வது நடை​முறை​யில் உள்​ளது.

    செல்​லப் பிராணி​களின் உரிமை​யாளர் தங்​களின் புகைப்​படம், முகவரிச் சான்​று, செல்​லப்​பி​ராணி புகைப்​படம் மற்​றும் வெறி​நாய்க்​கடி நோய் தடுப்​பூசி செலுத்​தப்​பட்ட சான்​றிதழ் ஆகிய​வற்றை பதிவேற்​றம் செய்து ரூ.50 உரிமக் கட்​ட​ண​மாகச் செலுத்தி உரிமம் பெற்று வரு​கின்​றனர். கடந்த 2024-ம் ஆண்​டு​முதல் இந்த ஆண்டு செப்​டம்​பர் மாதம் வரை 12,393 உரிமங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

    இந்​நிலை​யில் நாட்டிலேயே முதன்​முறை​யாக சென்னை மாநக​ராட்​சி​யில் நாய்​களுக்கு மைக்​ரோசிப் செலுத்​துதல், உரிமம் வழங்​குதல் உள்​ளிட்ட ஒருங்​கிணைந்த மேலாண்மை இணை​யதள சேவை உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இந்த சேவையை ரிப்​பன் மாளிகை வளாகத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் மேயர் ஆர்​.பிரியா நேற்று தொடங்​கி​வைத்​தார்.

    பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மாநக​ராட்​சிப் பணி​யாளர்​கள் வீடு​வீ​டாகச் சென்று செல்​லப் பிராணி​கள் குறித்த கணக்​கெடுப்​பும், உரிமம் வழங்​கு​வதற்​கான வழி​காட்​டு​தல்​களை வழங்​கும் பணி வரும் நவம்​பர் மாதம் முதல் தொடங்​கப்​படும். நாய்​களை முறை​யாகப் பிடித்து விடு​விப்​பதை உறுதி செய்​வதற்​காக, க்யூஆர் குறி​யீடு காலர்​கள் மற்​றும் மைக்ரோ சிப் பொருத்​தும் பணி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இது​வரை 12,250 தெரு​நாய்​களுக்கு மைக்ரோ சிப் பொருத்​தப்​பட்​டுள்​ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்​போது வரை 72,345 தெரு​நாய்​களுக்கு கருத்​தடை அறுவை சிகிச்​சை​யும் வெறி​நாய்க்​கடி நோய் தடுப்​பூசி​யும் செலுத்​தப்​பட்​டுள்​ளது. நாய்​கள் தொடர்​பாக 1913 என்​கிற எண்​ணிலும், 9445061913 என்ற வாட்​ஸ்​-அப் எண்​ணிலும் புகார்​களைத் தெரிவிக்​கலாம்.

    இவ்​வாறு அவர் கூறி​னார். இந்​நிகழ்ச்​சி​யில் துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ. குமரகுருபரன், இணை ஆணை​யர் வீ.ப.ஜெயசீலன், நிலைக்​குழுத் தலை​வர் (சு​கா​தா​ரம்) கோ.​சாந்​தகு​மாரி, கால்​நடை மருத்​துவ அலு​வலர் ஜெ.க​மால் உசேன் உள்​ளிட்​டோர்​ கலந்​து​கொண்​டனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கரூர் நெரிசல்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நேரில் ஆய்வு

    October 4, 2025
    மாநிலம்

    “உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும்” – தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேட்டி

    October 4, 2025
    மாநிலம்

    வேலைவாய்ப்பு பயிற்சித் துறை நடத்திய தனியார் முகாம்கள் மூலம் 2.70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

    October 4, 2025
    மாநிலம்

    கரூர் கூட்ட நெரிசல் விசாரணை: அஸ்ரா கார்க் குழுவில் 2 பெண் எஸ்.பி.க்கள்!

    October 4, 2025
    மாநிலம்

    வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட மேலும் 28 சுவாமி சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அமைச்சர் சேகர்பாபு தகவல்

    October 4, 2025
    மாநிலம்

    கரூருக்கு விரைந்த ஸ்டாலின் கள்ளக்குறிச்சி, வேங்கைவயலுக்கு செல்லாதது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி

    October 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நேரடியாக ஓடிடியில் வெளியாகும் அருள்நிதி படம்
    • கரூர் நெரிசல்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நேரில் ஆய்வு
    • சிவகாசியில் 30% உற்பத்தி குறைவு: பட்டாசு விலை 20% வரை அதிகரிக்க வாய்ப்பு
    • ஒப்பனையுடன் தூங்குவது ஏன் தீங்கு விளைவிக்கும்: தோல் அபாயங்கள் மற்றும் நிபுணர் நுண்ணறிவு | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சனியின் சந்திரன் என்செலடஸ் வாழ்க்கைக்கு ஏற்ற நிலைமைகளைக் கொண்டிருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கிறார்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.