Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் 7-வது நாளாக போராட்டம்: ராயபுரம், திரு.வி.க. நகரில் குப்பை தேக்கம்
    மாநிலம்

    சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் 7-வது நாளாக போராட்டம்: ராயபுரம், திரு.வி.க. நகரில் குப்பை தேக்கம்

    adminBy adminAugust 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் 7-வது நாளாக போராட்டம்: ராயபுரம், திரு.வி.க. நகரில் குப்பை தேக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பணி நிரந்தரம் கோரி ரிப்பன் மாளிகை முன்பு போராடி வரும் தூய்மைப் பணியாளர் தரப்புடன் அமைச்சர் கே.என்.நேரு நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காத நிலையில், 7-வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.

    சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்கள் மற்றும் அம்பத்தூர், அண்ணாநகர் மண்டலங்களில் சில வார்டுகள் தவிர மற்ற பகுதிகளில் தூய்மைப்பணி தனியாரிடம் விடப்பட்டுள்ளது. மேற்கூறிய 5 மண்டலங்களில் மாநகராட்சி நிரந்தரப்பணியாளர்கள் மற்றும் என்யூஎல்எம் திட்டத்தின் கீழ் ஒப்பந்தப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இப்பகுதிகளையும் தனியாரிடம் விட மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் வேலை இழப்பு, ஊதியக் குறைப்பு, பணி பாதுகாப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்பதால் தனியாருக்கு விடக்கூடாது. தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த ஆக.1-ம் தேதி முதல் உழைப்போர் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள், ‘தூய்மைப் பணியில் தனியாரை அனுமதிக்க கூடாது. பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு, பணி புறக்கணிப்பும் செய்து வருகின்றனர்.

    இதனால் ராயபுரம், மேயர் ஆர்.பிரியாவின் வார்டு இடம்பெற்றுள்ள திரு.வி.க.நகர் மண்டலம் ஆகியவற்றில் 6 நாட்களாக குப்பைகள் அகற்றப்படாததால், சாலைகளில் குப்பை குவிந்து துர்நாற்றம் வீசுகிறது.

    இந்நிலையில், உழைப்போர் உரிமை இயக்க நிர்வாகிகளை அழைத்து, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா முன்னிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது, ‘அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு, மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறோம்’ என்று அமைச்சர் நேரு கூறியதாக உழைப்போர் உரிமை இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, எங்கள் கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

    August 7, 2025
    மாநிலம்

    ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைப்பதற்காக பிராட்வேயில் ‘குறளகம்’ கட்டிடம் இடிக்கும் பணி தீவிரம்

    August 7, 2025
    மாநிலம்

    மாற்று இடங்களில் வீடுகளை ஒதுக்கி தரக் கோரி: மெரினாவில் திருநங்கைகள் திடீர் சாலை மறியல்

    August 7, 2025
    மாநிலம்

    இதர போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்ட பயண அட்டையை பயன்படுத்தி தமிழறிஞர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்: எம்டிசி தகவல்

    August 7, 2025
    மாநிலம்

    வீட்டு இணைப்புக்கு ரூ.91,993 மின் கட்டணம்: அம்பத்தூரில் உரிமையாளர் அதிர்ச்சி

    August 7, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் என்டிஏ ஆட்சியை பிடிப்பது உறுதி: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

    August 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
    • கிளி மீன் பெறுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்
    • பண்டைய டி.என்.ஏ நோர்வேயில் 75,000 ஆண்டுகள் பழமையான விலங்கு எச்சங்களை வெளிப்படுத்துகிறது: பி.என்.ஏ.எஸ் ஆய்வு | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மஹுவா மொய்த்ரா திருமண வரவேற்பில் அரசியல் பிரபலங்கள்!
    • தமிழ் மரபு குறித்து எடுத்துரைக்கும் விதமாக கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற ‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி: ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.