Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»​​​​​​​சென்னையில் ‘சிங்கா 60’ கலைத் திருவிழா: சமூக, கலாச்சார சிக்கல்களை வெளிப்படுத்திய ‘முச்சந்தி’ நாடகம்
    மாநிலம்

    ​​​​​​​சென்னையில் ‘சிங்கா 60’ கலைத் திருவிழா: சமூக, கலாச்சார சிக்கல்களை வெளிப்படுத்திய ‘முச்சந்தி’ நாடகம்

    adminBy adminAugust 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ​​​​​​​சென்னையில் ‘சிங்கா 60’ கலைத் திருவிழா: சமூக, கலாச்சார சிக்கல்களை வெளிப்படுத்திய ‘முச்சந்தி’ நாடகம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் `சிங்கா 60′ கலைத் திருவிழாவில் இடம்பெற்ற, சிங்கப்பூர் நாடகக் குழுவின் ‘முச்சந்தி’ நாடகம், தொழில்நுட்ப முன்னேற்றத்தால் சமூக, கலாச்சாரத்தில் ஏற்படும் சிக்கல்களை வெளிப்படுத்தியது.

    அண்டை நாடான சிங்​கப்​பூர், 60-வது தேசிய தினத்தை விரைவில் கொண்​டாட உள்ளது. இந்நிலையில் ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்​றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ ஆகியவை இணைந்து சென்னையில் ‘சிங்கா 60’ என்ற பிரம்​மாண்ட கலைத் திருவிழாவை 10 நாட்​கள் நடத்​துகின்​றன.

    ‘சிங்கா 60’ கலைத் திருவிழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியாக ராஜா அண்ணாமலைபுரம் ராஜரத்தினம் கலையரங்கில், சிங்கப்பூரைச் சேர்ந்த அகம் தியேட்​டர் லேப் நாடகக் குழுவின் ‘முச்​சந்​தி’ நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியை பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். `இந்து தமிழ் திசை’ இயக்குநர் அகிலா விஜய் ஐயங்கார், உத்ரா பாம்பே ஞானம், தாரணி கோமல் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

    இதில் உன்னி கிருஷ்ணன் பேசும்போது, “இந்தியா-சிங்கப்பூர் நாடுகளிடையே பொருளாதார, வர்த்தக உறவைத் தாண்டி நீண்டகால கலாச்சார இணைப்பும், மொழிரீதியான பிணைப்பும் உள்ளது. இவற்றை பலப்படுத்தும் வகையில் `சிங்கா 60′ நிகழ்ச்சியை நடத்துவதற்காக `தி இந்து’ குழுமத்துக்கும், சிங்கப்பூர் தூதரகத்துக்கும் பாராட்டுகள்” என்றார்.

    `இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் பேசும்போது, “தமிழால் இணைவோம் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் `இந்து தமிழ் திசை’ நாளிதழ் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை இணைக்கக்கூடிய பாலமாகத் திகழ்கிறது. `சிங்கா 60′ நிகழ்ச்சி நாடு தாண்டிய தமிழர்களின் உறவுகளை வளர்க்கும் வகையிலும், அவற்றைபலப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. கலைகள் மூலம்தான் நாடுகளிடையிலான உறவுகளை பலப்படுத்தி, ஒன்றிணைக்க முடியும்” என்றார்.

    முச்சந்தி நாடகக் கலைஞர்களுக்கு `இந்து தமிழ் திசை’ இயக்குநர் லட்சுமி ஸ்ரீநாத் பரிசு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில், `இந்து தமிழ் திசை’ இயக்குநர் விஜயா அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் நிறுவன இயக்குநர் இளங்கோ குமணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மனதை வருடும் இசையுடன் அரங்கேற்றப்பட்ட முச்சந்தி நாடகம், தொழில்நுட்ப முன்னேற்றத்தால் ஏற்படும் சமூக, கலாச்சார சிக்கல்கள், தலைமுறை இடைவெளி, வரலாற்றை புதிய கண்ணோட்டத்தில் அணுகுவது போன்றவற்றை அடிப்படையாக கொண்டு அமைந்திருந்தது. ஆசிரியர், மாணவர், பெற்றோரின் அன்றாட வாழ்வையும், நவீன கல்விமுறையில் அவர்கள் சந்திக்கும் சிரமங்களையும் நகைச்சுவையாக விவரித்தது.

    ‘சிங்கா 60’ நிகழ்ச்சிக்கான பங்​கு​தா​ரர்​களாக சிங்​கப்​பூர் தூதரகம், டிபிஎஸ் வங்​கி​யும், துணை பங்​கு​தா​ரர்​களாக டிவிஎஸ், லார்​சன் அண்டு டூப்​ரோ, ஓலம் அக்​ரி, டிரான்​ஸ்​வோர்ல்​டு, நிப்பான் பெயின்ட் அண்ட் எச்​ஒய்​சி, ராம்​ராஜ் காட்​டன், லலிதா ஜுவல்​லரி, ரெசிடென்சி டவர்​ஸ், போரம் ஆர்ட் கேலரி, மிஸ்​டர் ஓங், நாசி அண்ட் மீ, பம்​கின்​ டேல்​ஸ், மேவெண்​டோயர்​, சிங்கப்பூர் தமிழ்​ முரசு நாளிதழ்​ ஆகியவையும் உள்​ளன.

    விழாவின் ஒரு பகுதியாக தி.நகரில் உள்ள தி ரெஸிடென்ஸி டவர்ஸ் ஹோட்டலில் (ஸ்கை) சிங்கப்பூர் உணவுத் திருவிழா கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் சிங்கப்பூர், மலேசியா, சீனா உணவு வகைகளை சுவைத்து மகிழலாம். உணவு திருவிழா வரும் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    வரும் 4, 5-ம் தேதிகளில் ஸ்கிரீன் சிட்டி என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இந்திய திரைப்படங்களில் சிங்கப்பூர் எவ்வாறு சித்தரிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து சுவாரசியமாக விவரிக்கப்படும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    படிக்கும்போதே விவசாயம் குறித்த சிந்தனையை ஏற்படுத்த வேண்டும்: ஐஐடி மாநாட்டில் அண்ணாமலை வலியுறுத்தல்

    August 3, 2025
    மாநிலம்

    ​​​​​​​துரோகம் செய்ததாக வைகோ குற்றச்சாட்டு: நீதி கேட்டு மல்லை சத்யா சென்னையில் உண்ணாவிரதம்

    August 3, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் நடப்பது பழனிசாமிக்கு தெரியவில்லை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம்

    August 3, 2025
    மாநிலம்

    ​​​​​​​மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த ஓபிஎஸ் திட்டம்

    August 3, 2025
    மாநிலம்

    ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கியது: மக்களை பரிவுடன் கவனிக்குமாறு மருத்துவர்களுக்கு முதல்வர் அறிவுரை

    August 3, 2025
    மாநிலம்

    எண்ணும் எழுத்தும் திட்ட முன்னேற்றம் குறித்து ​​ஆய்வு மேற்கொள்ள வேண்டும்: தொடக்க கல்வித் துறை உத்தரவு

    August 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • படிக்கும்போதே விவசாயம் குறித்த சிந்தனையை ஏற்படுத்த வேண்டும்: ஐஐடி மாநாட்டில் அண்ணாமலை வலியுறுத்தல்
    • ஆண்களில் காணப்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வின் எச்சரிக்கை அறிகுறிகள்
    • ​​​​​​​துரோகம் செய்ததாக வைகோ குற்றச்சாட்டு: நீதி கேட்டு மல்லை சத்யா சென்னையில் உண்ணாவிரதம்
    • தமிழகத்தில் நடப்பது பழனிசாமிக்கு தெரியவில்லை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம்
    • ​​​​​​​மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த ஓபிஎஸ் திட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.