Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னையில் கட்டுமானம், இடிபாடு பணியிடங்களில் மாசு ஏற்படுத்தினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்
    மாநிலம்

    சென்னையில் கட்டுமானம், இடிபாடு பணியிடங்களில் மாசு ஏற்படுத்தினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்

    adminBy adminMay 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னையில் கட்டுமானம், இடிபாடு பணியிடங்களில் மாசு ஏற்படுத்தினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னையில் கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் மேற்கொள்ளும் இடங்களில் மாசு ஏற்படுத்தினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் மாநகராட்சி உருவாக்கியுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் மே 21-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை, வரும் மே 21-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இதன்படி, ஒரு ஏக்கர் வரை பரப்பளவு கொண்ட புதிய கட்டுமானம் அல்லது கட்டிட இடிபாடுகள் மேற்கொள்ளும் போது 6 மீட்டர் உயரத்துக்கும், ஒரு ஏக்கருக்கும் அதிமான தள பரப்பளவு கொண்ட இடங்களை சுற்றி 10 மீ உயரத்தும் தகரம் அல்லது உலோகத் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.

    இப்பணிகளின்போது வெளிவரும் தூசித் துகள்கள் பரவுவதைத் தடுக்க அதிக அடர்த்தி கொண்ட துணி, தார்ப்பாய், இரட்டை அடுக்கு பச்சை வலை போன்றவற்றால் மூடப்பட்டிருக்க வேண்டும். அப்பகுதிகளில் தண்ணீர் தெளித்து தூசி உற்பத்தியைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை மாநகராட்சியின் கட்டுமான மற்றும் இடிபாட்டுக் கழிவு மேலாண்மை வழிகாட்டுதல்களின்படி பிரிக்கப்பட்டு வாகனங்களில், மாநகராட்சியால் உருவாக்கப்பட்ட கட்டுமான மற்றும் இடிபாட்டுக் கழிவு மேலாண்மை தளங்களுக்கு பிரிக்கப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட வேண்டும்.

    இக்கழிவுகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களும், தூசிகள் பரவுவதைத் தடுக்க தார்பாலின் மூலம் மூடப்பட்டிருக்க வேண்டும். இக்கழிவுகளை கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களின் சக்கரங்களையும் தானியங்கி இயந்திரம் மூலம் தண்ணீர் கொண்டு கழுவுதல் வேண்டும். கட்டிடம் கட்டுவோர், சிசிடிவி காண்காணிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தி, தேவைப்படும்போது மாநகராட்சியின் ஆய்வுக்கு சமர்பிக்க வேண்டும்.

    உயரமான கட்டிடத் திட்ட இடங்களில் (18.5 மீட்டருக்கு மேல்) சென்சார் அடிப்படையிலான காற்று மாசை கண்டறியும் கண்காணிப்பு கருவிகளை பயன்படுத்த வேண்டும்.

    மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பளவு உள்ள கட்டுமான தளங்களுக்கு ரூ.5 லட்சம் வரையும், 500 சதுர மீட்டருக்கு மேல் 20 ஆயிரம் சதுர மீட்டருக்குள் உள்ள கட்டுமான தளங்களுக்கு ரூ.25 ஆயிரம் வரையும், 300 சதுர மீட்டர் முதல் 500 சதுர மீட்டர் வரை ரூ.10 ஆயிரம் வரையும் அபராதம் விதிக்கப்படும்.

    விதிகளை பின்பற்றாத 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு அதிகமான கட்டுமான தளங்களுக்கு ரூ.1 லட்சம், 20 ஆயிரம் சதுர அடி வரை ரூ.10 ஆயிரம், 300 முதல் 500 சதுர அடிவரை ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

    விதிமீறல்கள் ஏற்பட்டால், அதை சரி செய்ய எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு, 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதன் பிறகு 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். அதன் பிறகும் சரி செய்யாவிட்டால் கட்டுமான நடவடிக்கைகள் நிறுத்தப்படும். இந்த விதிகள் வரும் மே 21-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கோவை, நீலகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    September 24, 2025
    மாநிலம்

    சாலைகளில் தோண்டும் பள்ளங்களை மூடாமல் விட்டுச் சென்றால் போலீஸில் புகார் அளிக்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

    September 24, 2025
    மாநிலம்

    இபிஎப் நிறுவனத்தில் நடப்பாண்டு ஜூலையில் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் அதிக உறுப்பினர் சேர்க்கை

    September 24, 2025
    மாநிலம்

    நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க அரசு அலுவலர்களுக்கு உதயநிதி அறிவுறுத்தல்

    September 24, 2025
    மாநிலம்

    கோவில்பட்டி தொகுதியில் திமுக வெற்றி பெறாது: கடம்பூர் ராஜு ‘லாஜிக்’

    September 24, 2025
    மாநிலம்

    மக்களின் வரிப் பணத்தில் முன்னாள் தலைவருக்கு சிலை வைத்து ஏன் துதிபாட வேண்டும்? – உச்ச நீதிமன்றம்

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கணினி சான்றிதழ் தேர்வு: தேர்ச்சி சான்றிதழை செப்​.26 வரை பெறலாம்
    • கோவை, நீலகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
    • சுவையை இழக்காமல் கறி இலைகளிலிருந்து பூச்சிக்கொல்லிகளை அகற்ற விரைவான முறைகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தின் 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் அறிவிப்பு
    • சாலைகளில் தோண்டும் பள்ளங்களை மூடாமல் விட்டுச் சென்றால் போலீஸில் புகார் அளிக்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.