Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னையின் முக்கிய சாலைகளில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்: 1,800-க்கும் மேற்பட்ட சிலைகள் கடலில் கரைப்பு
    மாநிலம்

    சென்னையின் முக்கிய சாலைகளில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்: 1,800-க்கும் மேற்பட்ட சிலைகள் கடலில் கரைப்பு

    adminBy adminSeptember 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னையின் முக்கிய சாலைகளில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்: 1,800-க்கும் மேற்பட்ட சிலைகள் கடலில் கரைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னையில் விநாயகர் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. முக்கிய சாலைகளில் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 1,800-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் பந்தல் அமைத்து, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

    சென்னை காவல் ஆணையர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 1,800-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. சிலைகளை கரைக்க சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், பாலவாக்கம் பல்கலை நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை, காசிமேடு ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் போலீஸார் அனுமதி வழங்கியிருந்தனர்.

    சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது, காவல் துறை விதித்த கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. சென்னையின் பல்வேறு முக்கிய சாலைகளில், இடையூறின்றி விநாயகர் ஊர்வலம் செல்லும் வகையில், போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.

    சென்னை முழுவதும் 16,500 போலீஸார், 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. கண்காணிப்பு கோபுரங்கள் வழியாக போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சிலைகள் கரைக்கப்படும் இடங் களில், நீச்சல் தெரிந்த வீரர்கள், தன்னார்வலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். பொதுமக்கள் கடலில் இறங்க போலீஸார் அனுமதி வழங்கவில்லை.

    சென்னையில் ஆங்காங்கே உள்ள பந்தல்களில் இருந்து விநாயகர் ஊர்வலம் நேற்று காலை 10 மணி முதல் புறப்படத் தொடங்கியது.

    மேள, தாளங்கள் முழங்க முக்கிய சாலைகள் வழியாக விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. பட்டினப்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களிலும் ராட்சத கிரேன்கள் உதவியுடன் 1,800-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஒரே மேடையில் இபிஎஸ் – அண்ணாமலை பரஸ்பரம் நெகிழ்ச்சி!

    September 1, 2025
    மாநிலம்

    திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் 2-வது நாளாக உண்ணாவிரதம்

    September 1, 2025
    மாநிலம்

    “நம்பகத்தன்மையற்ற பழனிசாமியை நம்பி எப்படி கூட்டணிக்குச் செல்ல முடியும்?” – இரா.முத்தரசன் நேர்காணல்

    September 1, 2025
    மாநிலம்

    அரசு ஊழியர்களை ஓய்வுபெறும் நாளில் பணிநீக்கம் செய்யக்கூடாது

    September 1, 2025
    மாநிலம்

    சென்னையில் முதல்முறையாக நிகழ்ந்த மேக வெடிப்பு: பல பகுதிகளில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது

    September 1, 2025
    மாநிலம்

    பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் பதவியேற்றார்: கோப்புகளை ஒப்படைத்து விடைபெற்றார் சங்கர் ஜிவால்

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒரே மேடையில் இபிஎஸ் – அண்ணாமலை பரஸ்பரம் நெகிழ்ச்சி!
    • திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் 2-வது நாளாக உண்ணாவிரதம்
    • சுமார் 4 கிலோ கத்தரிக்காயை உற்பத்தி செய்து கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்க விவசாயி!
    • “நம்பகத்தன்மையற்ற பழனிசாமியை நம்பி எப்படி கூட்டணிக்குச் செல்ல முடியும்?” – இரா.முத்தரசன் நேர்காணல்
    • இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலி: பெப்சி, கோக-கோலா, கேஎப்சியை புறக்கணிக்கும் இந்தியர்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.