Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்ட்ரல் நிலையத்தில் ரயில்களில் அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்திய 96 பேர் மீது வழக்குப்பதிவு
    மாநிலம்

    சென்ட்ரல் நிலையத்தில் ரயில்களில் அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்திய 96 பேர் மீது வழக்குப்பதிவு

    adminBy adminAugust 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்ட்ரல் நிலையத்தில் ரயில்களில் அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்திய 96 பேர் மீது வழக்குப்பதிவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​தில் கடந்த 7 மாதங்​களில், ரயில்​களில் அபாயச் சங்​கி​லியை பிடித்து இழுத்து நிறுத்​தி​யதற்​காக, 96 பேர் மீது ரயில்வே பாது​காப்​புப் படை​யினர் வழக்​குப்​ப​திந்​து, அபராதம் விதித்​துள்​ளனர். தமிழகத்​தில் முக்​கிய ரயில் நிலை​ய​மாக சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யம் திகழ்​கிறது.

    இங்​கிருந்து வடமாநிலங்​கள், தமிழகத்​தின் மேற்கு மாவட்​டங்​களுக்கு நாள்​தோறும் 100-க்​கும் மேற்​பட்ட விரைவு ரயில்​கள் வந்து செல்​கின்​றன. இதுத​விர, சென்ட்​ரல் புறநகர் ரயில் நிலை​யத்​திலிருந்து 150-க்​கும் மேற்​பட்ட மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. எனவே இந்த ரயில் நிலை​யத்​தில் தினசரி 5 லட்​சம் பேர் வந்து செல்​கின்​றனர்.

    இந்த ரயில் நிலை​யத்​தில் இயக்​கப்​படும் ரயில்​களில் விதி​மீறலில் ஈடு​படு​வோர் மீது ரயில்வே பாது​காப்​பு படை​யினர் வழக்​கு​ப​திந்​து, நீதி​மன்​றம் மூல​மாக அபராதம் விதித்து வரு​கின்​றனர். அந்த வகை​யில், அற்​பக் காரணங்​களுக்​காக, அபாயச்சங்​கி​லியை பிடித்து இழுத்து ரயில்​களை நிறுத்​து​வோர் மீது வழக்​குப் பதிந்து அபராதம் விதிக்​கப்​படு​கிறது.

    ரயில் செல்​வ​தில் தாமதம்: ரயில் பயணி​களின் அவசர மருத்​து​வத் தேவை மற்​றும் எதிர்​பா​ராத நிகழ்​வு​களுக்கு அபாயச் சங்​கி​லியை இழுத்து ஓடும் ரயிலை நிறுத்​தலாம். ஆனால் தேவை​யின்றி அபாயச் சங்​கி​லியை பிடித்து இழுத்து நிறுத்​து​வ​தால், ரயில் செல்​வ​தில் தாமதம் ஏற்​படு​கிறது. இவ்​வாறு சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​தில் கடந்த 7 மாதங்​களில் தேவை​யின்றி அபாயச் சங்​கி​லியை இழுத்து நிறுத்​தி​ய​தாக 96 பேர் மீது ரயில்வே பாது​காப்​புப் பிரி​வினர் வழக்​கு பதிந்​துள்​ளனர்.

    இதுகுறித்​து, சென்னை சென்ட்​ரல் ஆர்​பிஎஃப் ஆய்​வாளர் மதுசூதன ரெட்டி கூறிய​தாவது: ரயில்வே சட்​டம் 141 பிரி​வின் கீழ், தேவை​யின்றி ரயில் அபாயச் சங்​கி​லியை பிடித்து இழுத்​தால், சம்​பந்​தப்​பட்​டோருக்கு ரூ.1,000 அபராதம் அல்​லது 6 மாத சிறைத் தண்​டனை விதிக்​கப்​படும்.

    அதன்​படி, சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​துக்கு உட்​பட்ட பகு​தி​களில் விதி​களை மீறி, ரயில்​களில் அபாயச் சங்​கி​லியை இழுத்​த​தாக, நடப்​பாண்​டில் ஜனவரி முதல் ஜூலை வரை 96 பேர் மீது வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்டு நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தி, அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த 2023-ல் 210 பேர் மீதும், 2024-ல் 217 பேர் மீதும் வழக்​கு​கள் பதி​யப்​பட்​டு, அபராத​மும்​ வி​திக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மதுரையில் கூடுவோம், தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்: தவெகவினருக்கு விஜய் அழைப்பு

    August 18, 2025
    மாநிலம்

    சமுகநீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்களை சுரண்ட எவரும் துணை போகக்கூடாது: அன்புமணி

    August 18, 2025
    மாநிலம்

    சென்னை புறநகரில் புதைவட மின் கம்பி பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்

    August 18, 2025
    மாநிலம்

    பயணிகளின் தேவைக்காக தமிழகத்தில் 21 ரயில்களுக்கு 38 கூடுதல் நிறுத்தம்: ரயில்வே வாரியம் ஒப்புதல்

    August 18, 2025
    மாநிலம்

    தூய்மை பணியாளர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்: மநீம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்

    August 18, 2025
    மாநிலம்

    யார் இந்த சி.பி.​ராதாகிருஷ்ணன்? – குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரான தமிழர்!

    August 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மதுரையில் கூடுவோம், தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்: தவெகவினருக்கு விஜய் அழைப்பு
    • செயற்கை கருப்பையுடன் சீனாவின் 2026 மனித ரோபோ கர்ப்பம்: இனப்பெருக்க தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சிகர பாய்ச்சல் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சமுகநீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்களை சுரண்ட எவரும் துணை போகக்கூடாது: அன்புமணி
    • சென்செக்ஸ் 1,000+ புள்ளிகள் உயர்வு: ஏற்றத்தில் இந்திய பங்குச் சந்தை
    • உங்கள் உதட்டுச்சாயம் உங்கள் ஆரோக்கியத்தை ரகசியமாக பாதிக்கிறது; தீங்கு விளைவிக்கும் பொருட்கள் நீங்கள் கவனிக்க வேண்டும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.