Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»செங்கல்பட்டு மாவட்ட நகராட்சிகளில் கரையானுக்கு இரையாகும் ‘ஸ்மார்ட்’ கடைகள்
    மாநிலம்

    செங்கல்பட்டு மாவட்ட நகராட்சிகளில் கரையானுக்கு இரையாகும் ‘ஸ்மார்ட்’ கடைகள்

    adminBy adminAugust 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    செங்கல்பட்டு மாவட்ட நகராட்சிகளில் கரையானுக்கு இரையாகும் ‘ஸ்மார்ட்’ கடைகள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சாலையோர வியாபாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட “ஸ்மார்ட்” கடைகள் பயன்படுத்தப்படாமல் செங்கல்பட்டு மாவட்ட நகராட்சிகளில் குப்பை போல் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சாலையோர நடைபாதை வியாபாரிகள் இந்த கடைகளை தங்களுக்கு வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், நகராட்சி பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஏழை, எளியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

    இதில் சாலையோர வியாபாரிகளுக்கு, 5 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட, “ஸ்மார்ட்” கடைகள் எனும் பெட்டிக்கடைகள் வழங்க திட்டமிடப்பட்டது. இந்த “ஸ்மார்ட்” கடை அமைப்புகளின் பக்கவாட்டுகளில் உலோகம் மற்றும் முன்பக்கம் கதவுகளை கொண்டதாகும்.

    செங்கல்பட்டு நகராட்சி அலுவலக வளாகத்தில் மண்ணில்

    புதைந்துள்ள “ஸ்மார்ட்” கடைகள்

    இந்த “ஸ்மார்ட்” கடை பயன்படுத்தும் வியாபாரிகள், அனுமதிக்கப்பட்ட சாலையோரங்களில், இந்த கடைகள் வாயிலாக வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் “ஸ்மார்ட்” கடைகளை வியாபாரிகளுக்கு வழங்காமல் பழுதாகி, பயனற்று கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, மறைமலை நகர், மதுராந்தகம் ஆகிய நகராட்சிகளில் முடங்கி கிடக்கின்றன.

    சில கடை அமைப்புகள் முற்றிலும் சிதலமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. பெரும்பாலானவை குப்பை குவியல் போல் கடந்த, 2½ ஆண்டுகளாக கவனிப்பாரற்று உள்ளதாகவும், அது கரையானுக்கு இரையாவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட இந்த “ஸ்மார்ட்” கடை அமைப்புகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

    பாண்டியன்

    இது குறித்து சமூக ஆர்வலர் பாண்டியன் கூறியது: சாலையோரமாக உணவு, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. படித்துவிட்டு வேலை கிடைக்காத இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்டோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் என அனைவரும் சாலையோர வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கிடைக்கக்கூடிய சொற்ப வருமானத்தை வைத்துதான் அவர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் “ஸ்மார்ட்” கடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் சாலையோரம் வியாபாரம் செய்வோருக்கு “ஸ்மார்ட்” கடைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளுக்கு வழங்கப்பட்ட “ஸ்மார்ட்” கடைகள் அனைத்தும் பயன்படுத்தாமல், அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக செங்கல்பட்டு நகராட்சியில் வழங்கப்பட்டுள்ள “ஸ்மார்ட்” கடைகள் பயன்படுத்தப்படாமல் மண்ணுக்குள் புதைந்து, பயனற்ற நிலையில் உள்ளது.

    வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் நல்ல திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதனை சரியாக செயல்படுத்தாததால் பொதுமக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள “ஸ்மார்ட்” கடைகள் தற்போது வீணாகி வருகிறது. அரசு இதில் தலையிட்டு சாலையோர வியாபாரிகளுக்கு இந்த கடைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

    August 5, 2025
    மாநிலம்

    தென் தமிழகம் இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம்: முதல்வர் ஸ்டாலின் @ தூத்துக்குடி

    August 5, 2025
    மாநிலம்

    10 மாவட்டங்களில் இன்று கனமழை

    August 5, 2025
    மாநிலம்

    வைகை அணையில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை: தொடர் கண்காணிப்பில் அதிகாரிகள்

    August 5, 2025
    மாநிலம்

    “திமுக கூட்டணியில் விரிசல்…” – பாளை.யில் கொட்டும் மழையில் பழனிசாமி பிரச்சாரம்

    August 5, 2025
    மாநிலம்

    மடப்புரம் அஜித்குமார் வழக்கில் கைதான காவலர்களை காவலில் எடுக்க சிபிஐ மனு

    August 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட தமிழக காங்கிரஸ் எம்.பி.சுதாவிடம் நகை பறிப்பு
    • தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
    • ராகுல் காந்தி எல்லையில் முகாமிட்டு இருந்தாரா? – உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்; வழக்கின் முழு விவரம்
    • தென் தமிழகம் இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம்: முதல்வர் ஸ்டாலின் @ தூத்துக்குடி
    • இலவங்கப்பட்டை Vs ஏலக்காய்: எந்த மசாலா உங்கள் உணவு, இரத்த சர்க்கரை மற்றும் பலவற்றிற்கு ஆரோக்கியமானது மற்றும் சிறந்தது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.