Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சூளைமேட்டில் மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள்: வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி
    மாநிலம்

    சூளைமேட்டில் மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள்: வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி

    adminBy adminSeptember 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சூளைமேட்டில் மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள்: வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை சூளைமேட்டில் அண்ணாநெடும்பாதை, பஜனைகோயில் தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெறுவதால், அங்குள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, காலை, மாலைவேளைகளில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

    பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் அதிக குடியிருப்புகளையும், பல்வேறு வணிக வளாகங்களையும் கொண்ட பகுதிகளில் ஒன்றாக சூளைமேடு இருக்கிறது. வளர்ந்து வரும் சிறு நகரங்களில் ஒன்றாக திகழும் இங்கு பல்வேறு தரப்பு மக்கள் வசிக்கின்றனர்.

    இதை யொட்டி அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனி, அமைந்தகரை, வடபழனி ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. சூளைமேடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இதற்கிடையில், சென்னை சூளைமேடு கடந்த சில மாதங்களாக போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் ஆகும்.

    சூளைமேடு அண்ணாநெடும்பாதையில் மந்தகதியில் நடைபெறும்

    மழைநீர் வடிகால் அமைக்கும் பணி.

    சென்னை மாநகராட்சியின் சார்பில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக, மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. சூளைமேட்டில் அண்ணா நெடும்பாதை, பஜனை கோயில் தெரு, வடஅகரம்சாலை, பெரியார்பாதை உட்பட பல இடங்களில் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளை பொருத்தவரை, எவ்வித முன் அறிவிப்புமின்றி, திடீரென பிரதான சாலையை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு, பூமியை தொண்டி பணியை தொடங்குகின்றனர்.

    பஜனை கோயில் தெரு சாலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திடீரென பணியை தொடங்கினர். இதனால், இந்த சாலை முழுவதுமாக மூடப்பட்டது. இந்தவழியாக வழக்கமாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். ஒருகட்டத்தில், மாநகராட்சி ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவமும் நடைபெற்றது. இதையடுத்து, சிறிய வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

    இதேபோல, அண்ணா நெடும்பாதையில் அதாவது கண்ணகி தெரு, ஆண்டவர் தெரு நுழைவு வாயிலை ஒட்டிய பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெறுகிறது. இதுபோல, கல்யாணராமன் தெருவின் இருபுறமும் நுழைவு வாயிலில், கல்யாணராமன் தெருவழியாக பஜனைகோயில் செல்லும் சாலையில் பணி தொடங்கியுள்ளது. இதனால், பஜனைகோயில் தெரு முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    அண்ணா நெடும்பாதையில் போக்குவரத்து நெரிசலில்

    சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்.

    சாலை துண்டிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் அண்ணாநெடும்பாதை வழியாக செல்லும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, மந்த கதியில் நடைபெறும் பணியால் இந்தபாதை சுருங்கி இருந்த நிலையில், தற்போது, கூடுதல் வாகனங்கள் இந்த சாலை நோக்கி படையெடுத்து வருவதால், காலை, மாலை வேளையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

    இது குறித்து, சூளைமேட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மனோஜ்குமார் கூறியதாவது: பல்வேறு இடங்களில் எந்தவித முன் அறிவிப்பு இன்றி, மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் செய்கிறது. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். அண்ணாநெடும்பாதையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி முடிப்பதற்கு முன்பாகவே, கல்யாணராமன் தெருவை ஒட்டி பஜனைகோயில் தெருவில் பணியை தொடங்கி விட்டனர்.

    இதனால், அண்ணாநெடும்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுபோல, பெரியார் பாதையிலும் பணிகள் மெதுவாக நடைபெறுகிறது. இப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய, போக்குவரத்து போலீஸாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    என்டிஏ கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும் விரைவில் முடிவுக்கு வரும்: அண்ணாமலை கருத்து

    September 10, 2025
    மாநிலம்

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாயார் காலமானார்: பழனிசாமி இரங்கல்

    September 10, 2025
    மாநிலம்

    210-ல் வெற்றி என்ற பழனிசாமி கனவு நிறைவேறாது: கனிமொழி எம்.பி. விமர்சனம்

    September 10, 2025
    மாநிலம்

    வெளியே ஜொலிப்பு, உள்ளே புதர்… காஞ்​சியில் கவலைக்குரிய நிலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா!

    September 10, 2025
    மாநிலம்

    எச்சரிக்கை… இங்கு எச்சரிக்கை பலகை இல்லை! – பள்ளத்தால் செங்கை மக்கள் பீதி

    September 10, 2025
    மாநிலம்

    ​திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விருதுக்காகப் படங்களை உருவாக்கவில்லை: பிருத்விராஜ்  
    • என்டிஏ கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும் விரைவில் முடிவுக்கு வரும்: அண்ணாமலை கருத்து
    • ஒரு எளிய இரத்த பரிசோதனையானது அறிகுறிகள் தொடங்குவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே HPV தொடர்புடைய தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களைக் கண்டறிய முடியும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சாதிய எண்ணம் கொண்ட பள்ளி ஆசிரியர்களை மாற்ற நடவடிக்கை
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாயார் காலமானார்: பழனிசாமி இரங்கல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.