ராமநாதபுரம்: மண்டபம் அருகே சுனாமி வீட்டில் வசிக்கும் மீனவருக்கு ரூ.67 ஆயிரம் மின் கட்டண பில் வந்ததால், அதிர்ச்சியடைந்த அவர் ஆட்சியரிடம் பகார் அளித்தார். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வேதாளை கிராமத்தில் அரசு இலவசமாக கட்டிக் கொடுத்த சுனாமி வீட்டில் வசிப்பவர் மீனவர் ஷேக் ஜமாலுதீன்.
இவருக்கு இந்த மாத மின்கட்டணம் ரூ.67 ஆயிரம் என பில் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், முறையான மின் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என, ராமநாத புரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்து புகார் அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வழக்கமாக எனது வீட்டுக்கு ரூ.500 முதல் ரூ.600 வரை மின் கட்டணம் வரும்.
இந்த மாதம் ரூ.67 ஆயிரம் என பில் வந்துள்ளதால், எனது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து மண்டபம் மின்வாரிய உதவிப் பொறியாளர் அலு வலகத்தில் கேட்டபோது, அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை.
இந்த மின் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் வலி யுறுத்துகின்றனர். அதனால் முறையான மின்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்து ள்ளேன்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, விசாரணை செய்து வருகிறோம். அவரது வீட்டு மீட்டர் உள் ளிட்டவற்றை சோதனை செய்த பின்னரே, முறையான மின்கட்டணம் நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.