Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம் நிறைவேற்ற அன்புமணி கோரிக்கை
    மாநிலம்

    சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம் நிறைவேற்ற அன்புமணி கோரிக்கை

    adminBy adminAugust 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம் நிறைவேற்ற அன்புமணி கோரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஆகஸ்ட் 15 விடுதலை நாள் கிராமசபைக் கூட்டங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் நாள் காலை 11.00 மணிக்கு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராமங்கள் அனைத்தும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளாகத் திகழ வேண்டும் என்ற மகாத்மா காந்தியடிகளின் கனவை நனவாக்குவதற்கான மகத்தான ஆயுதம் தான் கிராம சபைக் கூட்டங்கள் ஆகும்.

    நமது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக அவற்றை நாம் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிப்பதற்கான அற்புதமான வாய்ப்பு கிராமசபைக் கூட்டங்கள் தான்.

    அத்தகையக் கூட்டங்களை கடந்த பல ஆண்டுகளாகவே நாம் சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான கிராமசபைக் கூட்டங்களில் நாம் வெற்றிகரமாக தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

    இந்த ஆக்கப்பூர்வமான பணி நடப்பாண்டிலும் தொடர வேண்டும். அதன்படி வரும் 15-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களில்,’’ தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்கொண்டு சமூகநீதியைப் பாதுகாக்கவும், தமிழகத்தில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையாகவும், சமூக ரீதியாக பின் தங்கிய நிலையின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு வழங்கவும் வசதியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்’’ என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பாமகவினர் உள்ளிட்ட பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று 75 ஆண்டுகளாக முழங்கி வரும் திமுகவுக்கு உண்மையாகவே ஜனநாயகத்தில் அக்கறை இருந்தால், கிராம சபைகளுக்கு உள்ள உரிமைகளை மதித்தும், அவற்றுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையைக் கொடுக்கும் வகையிலும் விடுதலை நாள் கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அங்கீகரித்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த முடிவுற்ற பணிகள், அடிக்கல் நாட்டிய பணிகள் என்னென்ன?

    August 11, 2025
    மாநிலம்

    ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது: தவெக தலைவர் விஜய் கண்டனம்

    August 11, 2025
    மாநிலம்

    சென்னையில் பருவமழை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

    August 11, 2025
    மாநிலம்

    2026 தேர்தலின்போது மேற்கு மண்டலத்தில் இருந்து தான் அதிமுகவின் தோல்வி தொடங்கும்: ஸ்டாலின்

    August 11, 2025
    மாநிலம்

    போராடும் தூய்மைப் பணியாளர்கள் சார்பில் மனு: சென்னை மாநகராட்சி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    August 11, 2025
    மாநிலம்

    பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தை உருவாக்கியோரின் சிலைகளை திறந்து வைத்தார் ஸ்டாலின்

    August 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த முடிவுற்ற பணிகள், அடிக்கல் நாட்டிய பணிகள் என்னென்ன?
    • நான்காவது மற்றும் ஐந்தாவது விரல்களில் அதிக கொழுப்பு அறிகுறிகள்: உங்கள் இதயத்தைப் பாதுகாக்க தாமதமாகிவிடும் முன் இந்த ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறியவும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அணு ஆயுத தாக்குதல் குறித்த பாக். ராணுவ தளபதியின் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம்
    • “சிஎஸ்கே அணியில் தோனிக்கு சிறந்த மாற்று சஞ்சு சாம்சன்தான்” – ஸ்ரீகாந்த் கருத்து
    • சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் எப்படி? – இயக்குநர் வெங்கட்பிரபு விவரிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.