Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சுங்க கட்டண நிலுவையில் 50 சதவீதத்தை ஆக.15-க்குள் செலுத்த முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
    மாநிலம்

    சுங்க கட்டண நிலுவையில் 50 சதவீதத்தை ஆக.15-க்குள் செலுத்த முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

    adminBy adminAugust 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சுங்க கட்டண நிலுவையில் 50 சதவீதத்தை ஆக.15-க்குள் செலுத்த முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தென் மாவட்டங்களில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய பாக்கி சுங்க கட்டணத்தில் 50 சதவீதத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள்ளும், மீதியை செப்டம்பர் மாதத்திலும் செலுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை – கன்னியாகுமரி, கன்னியாகுமரி – எட்டூர்வட்டம், சாலைப்புதூர் – மதுரை, நாங்குநேரி – கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களில் உள்ள கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்கியதற்காக செலுத்த வேண்டிய சுங்கக் கட்டண பாக்கி 276 கோடி ரூபாய் செலுத்தப்படாமல் உள்ளதாகக் கூறி, சுங்கச்சாவடிகளை பராமரிக்கும் நான்கு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

    இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், சுங்கக் கட்டண பாக்கி 276 கோடி ரூபாயை செலுத்தி, பிரச்னைக்கு தீர்வு காண மாநில போக்குவரத்துத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நான்கு சுங்கச் சாவடிகள் வழியாக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தார்.

    இந்த பிரச்னைக்கு தீர்வு காண சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுடன் போக்குவரத்து துறை செயலாளர் பேச்சு நடத்தி வருவதாகவும், விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை இயக்க அனுமதிக்க கூடாது என்ற உத்தரவை நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுடன் போக்குவரத்து துறை செயலாளர் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

    பாக்கி சுங்க கட்டணத்தில் 50 சதவீதத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள்ளும், மீதியை செப்டம்பர் மாதத்திலும் செலுத்தப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சுங்கச்சாவடி அமைந்துள்ள மாவட்டத்தில் மட்டும் இயக்கப்படும் பேருந்துகளுக்கு 50 சதவீத கட்டணமும், இரு மாவட்டங்களுக்கு இடையில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு கட்டணமும் செலுத்தப்படும் எனவும், அனைத்து அரசு பேருந்துகளும் ‘ஃபாஸ்டாக்’ மூலம் சுங்கக்கட்டணம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை, நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை இயக்க அனுமதிக்க கூடாது என்ற உத்தரவை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    எண்ணும் எழுத்தும் திட்ட முன்னேற்றம் குறித்து ​​ஆய்வு மேற்கொள்ள வேண்டும்: தொடக்க கல்வித் துறை உத்தரவு

    August 3, 2025
    மாநிலம்

    ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ திட்டத்தில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை: நீதிமன்றம் சொல்வது என்ன?

    August 3, 2025
    மாநிலம்

    மூத்த கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்

    August 3, 2025
    மாநிலம்

    அரசுத் திட்டங்களுக்கு ‘ஸ்டாலின்’ பெயரை பயன்படுத்த கூடாது: நீதிமன்ற உத்தரவுக்கு பாஜக வரவேற்பு

    August 3, 2025
    மாநிலம்

    “நயினார் நாகேந்திரன் சொல்வது பொய்” – பிரதமர் சந்திப்பு விவகாரத்தில் ஓபிஎஸ் காட்டம்

    August 2, 2025
    மாநிலம்

    விழுப்புரம் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நெரிசலில் சிக்கித் தவித்த நோயாளிகள்!

    August 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வீட்டு பணிப்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: தேவகவுடா பேரன் பிரஜ்வலுக்கு சாகும் வரை சிறை – வழக்கின் முழு விவரம்
    • எண்ணும் எழுத்தும் திட்ட முன்னேற்றம் குறித்து ​​ஆய்வு மேற்கொள்ள வேண்டும்: தொடக்க கல்வித் துறை உத்தரவு
    • ​​​​​​​‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முழங்கியவர் ராஜேந்திர சோழன்: பிரதமர் மோடி புகழாரம்
    • தேசிய விருது வென்ற திரைக் கலைஞர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
    • ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ திட்டத்தில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை: நீதிமன்றம் சொல்வது என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.