Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சிவகிரி அருகே வயதான தம்பதியை கொன்று 15 பவுன் நகை கொள்ளை: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
    மாநிலம்

    சிவகிரி அருகே வயதான தம்பதியை கொன்று 15 பவுன் நகை கொள்ளை: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

    adminBy adminMay 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிவகிரி அருகே வயதான தம்பதியை கொன்று 15 பவுன் நகை கொள்ளை: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஈரோடு: சிவகிரி அருகே வயதான தம்​ப​தியை கொலை செய்​து, 15 பவுன் நகை மற்​றும் பணத்​தைக் கொள்​ளை​யடித்​துச் சென்ற குற்​ற​வாளி​களைப் பிடிக்க 8 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. ஈரோடு மாவட்​டம் சிவகிரி அருகே​யுள்ள விளக்​கேத்தி பகு​தியில் உள்ள மேகரை​யான் தோட்​டத்​தைச் சேர்ந்தவர் ராம​சாமி (75).

    இவரது மனைவி பாக்​கி​யம் (65). இவர்​களது மகன் கவிசங்​கர், மகள் பானுமதி ஆகியோ​ருக்கு திருமண​மான நிலை​யில், ராம​சாமி தன் மனைவி பாக்​கி​யத்​துடன் தோட்​டத்து வீட்​டில் தனி​யாக வசித்து வந்​தார்.

    இந்​நிலை​யில், முத்​தூரில் வசித்து வரும் கவிசங்​கர், ராம​சாமிக்கு போன் செய்​த​போது அவர் எடுக்​க​வில்லை. இதையடுத்​து, அரு​கில் வசிக்​கும் உறவினர்​களுக்கு தகவல் தெரி​வித்​து, தோட்​டத்​துக்​குச் சென்று பார்க்​கு​மாறு கூறி​யுள்​ளார்.

    இதன்​படி, கவிசங்​கரின் உறவினர்​கள் தோட்​டத்​துக்​குச் சென்று பார்த்​த​போது, அங்கு ராம​சாமி மற்​றும் பாக்​கி​யம் ஆகியோர் கொலை செய்​யப்​பட்​டுக் கிடந்​தது தெரிய​வந்​தது. மேற்கு மண்டல ஐ.ஜி. செந்​தில் குமார், டிஐஜி சசிமோகன், ஈரோடு எஸ்​.பி. சுஜாதா ஆகியோர் சம்பவ இடத்​தில் விசா​ரணை மேற்​கொண்டனர்.

    ராம​சாமி-​பாக்​கி​யம் ஆகியோர் தனி​யாக வசிப்​ப​தையறிந்த கும்பல், அவர்​களைக் கொலை செய்​து, பாக்​கி​யம் அணிந்​திருந்த 15 பவுன் நகைகள் மற்​றும் பீரோ​வில் வைத்​திருந்த ரொக்​கத்தை கொள்​ளை​யடித்​துச் சென்​றது தெரிய​வந்​தது. அவர்​களது உடல் அழுகிய நிலை​யில் காணப்​பட்​ட​தால், கொலை நடந்து 3 நாட்​களாகி​யிருக்​கலாம் என்று போலீ​ஸார் சந்​தேகிக்​கின்​றனர்.

    கொலை​யாளி​களைப் பிடிக்க ஏடிஎஸ்பி விவே​கானந்​தன் தலை​மை​யில் 8 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. கொல்​லப்​பட்ட இரு​வரது உடல்​களும் பிரேதப் பரிசோதனைக்​காக பெருந்​துறை அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்​பிவைக்​கப்​பட்​டன. அவர்​களது உடல்​களை உறவினர்​கள் வாங்க மறுத்​தனர். 30 நாட்​களுக்​குள் குற்​ற​வாளி​களைக் கண்​டு​பிடிப்​போம் என போலீ​ஸார் உறுதி அளித்​ததைத் தொடர்ந்​து, உடல்​களைப் பெற்​றனர்.

    சட்​டம்​ – ஒழுங்கு சீர்​குலைவு: சிவகிரி அருகே வயதான தம்​பதி கொலை செய்​யப்​பட்ட சம்​பவத்​துக்கு அரசி​யல் கட்​சித்தலை​வர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

    அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: தமிழகத்​தில் சட்​டம்​- ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது. மக்​கள் இரவில் நிம்​ம​தி​யாக தூங்க முடி​யாமல், அச்ச நிலை​யில் உள்​ளனர். இனி​யா​வது சட்​டம்​-ஒழுங்​கைப் பாது​காப்​ப​தில் கவனத்​துடன் செயல்பட வேண்​டும்.

    தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: கொங்கு பகு​தி​யில் மீண்​டும் மீண்​டும் கொலை சம்​பவங்​கள் நடப்​பது அதிர்ச்​சி​யளிக்​கிறது. திமுக ஆட்​சி​யில் சிறு குழந்​தைகள் முதல் முதி​யோர் வரை யாருக்​கும் பாது​காப்பு இல்​லை. எனவே, சட்​டம்​-ஒழுங்கை சீரமைக்க முதல்​வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

    பாமக தலை​வர் அன்​புமணி: அடுத்​தடுத்து நடக்​கும் கொலைகளும், அதற்​குக் காரண​மானவர்​கள் கண்​டு​பிடிக்​கப்​ப​டாததும் மக்​கள் மத்​தி​யில் அச்​சத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

    தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை: தொடர் படு​கொலைகளை திமுக அரசால் தடுக்க முடிய​வில்​லை. காவல் துறையைக் கையில் வைத்​திருக்​கும் முதல்​வர், உரிய கவனத்​துடன் செய்​லபட வேண்​டும்.

    இதே​போல, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன் உள்​ளிட்​டோரும் சிவகிரி கொலை-​கொள்ளை சம்​பவத்​துக்கு கண்டனம் தெரி​வித்​துள்​ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகத்தில் ஆக.2 வரை மழைக்கு வாய்ப்பு

    July 28, 2025
    மாநிலம்

    வறுமை ஒழிப்பில் முன்னோடி மாநிலம் தமிழகம்: அரசு பெருமிதம்

    July 28, 2025
    மாநிலம்

    “இங்கு பெரியபுராணம்தான் அதிகம் பேசப்பட வேண்டும், பெரியார் புராணம் அல்ல” – தமிழிசை 

    July 28, 2025
    மாநிலம்

    கங்கைகொண்டசோழபுரத்தில் இன்று ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் வெளியிடுகிறார் மோடி

    July 28, 2025
    மாநிலம்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

    July 28, 2025
    மாநிலம்

    10 கி.மீ. தொலைவுக்கு பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’: தொண்டர்கள், மக்கள் உற்சாக வரவேற்பு

    July 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்தில் ஆக.2 வரை மழைக்கு வாய்ப்பு
    • ஆளி விதை ஜெல் குடலுக்கு அதிசயங்களைச் செய்வதற்கான 8 காரணங்கள்!
    • வறுமை ஒழிப்பில் முன்னோடி மாநிலம் தமிழகம்: அரசு பெருமிதம்
    • “இங்கு பெரியபுராணம்தான் அதிகம் பேசப்பட வேண்டும், பெரியார் புராணம் அல்ல” – தமிழிசை 
    • கங்கைகொண்டசோழபுரத்தில் இன்று ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் வெளியிடுகிறார் மோடி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.