Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சிவகிரி அருகே புதிதாக கட்டப்பட்ட கோயிலில் மகா மண்டபம் சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி
    மாநிலம்

    சிவகிரி அருகே புதிதாக கட்டப்பட்ட கோயிலில் மகா மண்டபம் சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி

    adminBy adminJune 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிவகிரி அருகே புதிதாக கட்டப்பட்ட கோயிலில் மகா மண்டபம் சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஈரோடு: சிவகிரி அருகே கந்தசாமி பாளையம் சடையப்ப சுவாமி கோயிலில் புதியதாக கட்டப்பட்ட மகா மண்டபம் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, கந்தசாமி பாளையத்தில் சடையப்ப சுவாமி கோயில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இக்கோயில் உட்பிரகாரத்தில், மகா மண்டபம், அர்த்தமண்டபம் ஆகியவை கற்களால் கட்டப்பட்டு வருகிறது. திருப்பணிகளை முடித்து, வரும் செப்டம்பர் 4-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த மகா மண்டபத்தின் தூண்கள் நேற்று காலை சரிந்து விழுந்தன.

    இதில், மண்டபம் கட்ட பயன்படுத்திய பிரம்மாண்டமான கற்கள் மற்றும் தூண்கள், துண்டு துண்டாக உடைந்தன. இந்த சம்பவத்தின் போது பணியாட்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. புதியதாக கட்டப்படும் கோயில் மகா மண்டபம் சரிந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுகுமார், மண்டல செயற்பொறியாளர் சந்திரசேகர், உதவி மண்டல பொறியாளர் காணீஸ்வரி ஆகியோர் இடிந்து விழுந்த மண்டபத்தை ஆய்வு செய்தனர். மண்டபம் சரிந்து விழக் காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “என்னை வேவு பார்த்தது என் மகன் அன்புமணி தான்!” – ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

    August 2, 2025
    மாநிலம்

    ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை முடிவா, ஆரம்பமா என்பது போகப்போக தெரியும்: அமைச்சர் ரகுபதி 

    August 2, 2025
    மாநிலம்

    நீதிமன்ற பிடிவாரண்ட்கள் மீது குறித்த நேரத்தில் நடவடிக்கை: காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

    August 2, 2025
    மாநிலம்

    ஆண்டிபட்டி: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் மேடையில் திமுக எம்பி, எம்எல்ஏ வாக்குவாதம்

    August 2, 2025
    மாநிலம்

    ரஷ்யாவில் போருக்கு அனுப்பப்பட இருக்கும் ஸ்ரீமுஷ்ணம் மாணவர் – மீட்கும் முயற்சி தொடருவதாக துரை வைகோ தகவல்

    August 2, 2025
    மாநிலம்

    குளித்தலையில் கூகுள் மேப் பார்த்து நடைபாலத்தில் சிக்கிய கார் மீட்பு

    August 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “என்னை வேவு பார்த்தது என் மகன் அன்புமணி தான்!” – ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
    • ஹுடா முஸ்தபா மற்றும் லூயிஸ் ரஸ்ஸல் டேட்டிங்? ரியாலிட்டி டிவியின் புதிய கிராஸ்ஓவர் ஜோடி ஒரு விஷயமாக எப்படி இருக்கலாம் என்பது இங்கே
    • ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் கவலைக்கிடம்
    • இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளர் காலித் ஜமீல் முன் உள்ள சவால்கள் என்னென்ன?
    • ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை முடிவா, ஆரம்பமா என்பது போகப்போக தெரியும்: அமைச்சர் ரகுபதி 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.