Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு விவகாரம்: ஏடிஜிபி ஜெயராம் நாளை ஆஜராக சம்மன்
    மாநிலம்

    சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு விவகாரம்: ஏடிஜிபி ஜெயராம் நாளை ஆஜராக சம்மன்

    adminBy adminJuly 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு விவகாரம்: ஏடிஜிபி ஜெயராம் நாளை ஆஜராக சம்மன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராம், நாளை (ஜூலை 24) விசாரணைக்கு ஆஜராக சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காதல் திருமண விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான வனராஜா, முன்னாள் எஸ்ஐ மகேஸ்வரி, மணிகண்டன், கணேசன், வழக்கறிஞர் சரத்குமார் ஆகிய 5 பேரை திருவாலங்காடு போலீஸார் கடந்த ஜூன் 13-ம் தேதி கைது செய்தனர்.

    இந்த வழக்கில் ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் மற்றும் கே.வி.குப்பம் எம்எல்ஏ- வான பூவை ஜெகன்மூர்த்தி மீதும் குற்றம் சாட்டப்பட்டது. போலீஸார் பூவை ஜெகன்மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்த நிலையில், அவருக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த கடத்தல் வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வரும் நிலையில், கைதான வனராஜா, மணிகண்டன், கணேசன் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விவேகானந்தன் ஆஜராகி மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும், என கோரினார்.

    அப்போது நீதிபதி, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்த பிறகு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராமை ஒருமுறைகூட விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் பிறப்பிக்காதது ஏன் என கேள்வி எழுப்பி, வழக்கை சிபிஐ-க்கு மாற்றப்போவதாக தெரிவித்தார்.

    அதற்கு சிபிசிஐடி போலீஸார் தரப்பில் ஆஜரான அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆகியோர், “இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

    இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம், ஜூலை 24-ம் தேதி (நாளை) விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றனர். அதையடுத்து நீதிபதி, ஜாமீன் கோரிய வழக்கின் உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அஜித்குமார் கொலை வழக்கு: மருத்துவர், செவிலியர், உதவியாளர்களிடம் சிபிஐ தீவிர விசாரணை

    July 23, 2025
    மாநிலம்

    ராஜேந்திர சோழனின் பிறந்தநாளில் சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    July 23, 2025
    மாநிலம்

    பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆகம விதிகளை மீறியதாக சர்ச்சை!

    July 23, 2025
    மாநிலம்

    9 கி.மீ தார் சாலை வசதிக்கு ‘ஏங்கும்’ மலைவாழ் மக்கள் – தேன்கனிக்கோட்டை அருகே வேதனை

    July 23, 2025
    மாநிலம்

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பங்களை திருத்தி சமர்ப்பிக்க மருத்துவக் கல்வி இயக்குநரகம் கூடுதல் அவகாசம் 

    July 23, 2025
    மாநிலம்

    ராமநாதபுரம்: கடலாடி அரசு கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்க வர்த்தக சங்கம் கோரிக்கை

    July 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வேந்தன்பட்டியில் வீற்றிருக்கும் நெய் நந்தீஸ்வரரின் மகிமைகள்!
    • அஜித்குமார் கொலை வழக்கு: மருத்துவர், செவிலியர், உதவியாளர்களிடம் சிபிஐ தீவிர விசாரணை
    • மக்கள் பெரும்பாலும் சாதாரண அறிகுறிகளாக நிராகரிக்கும் ஸ்டோக்கின் ஆரம்ப அறிகுறிகள்
    • வானியலாளர்கள் எரியும் பெட்டல்ஜூஸில் துணை நட்சத்திரம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ராஜேந்திர சோழனின் பிறந்தநாளில் சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.