Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சிறுமுகை அருகே நீரில் மூழ்கத் தொடங்கிய காந்தையாற்று பாலம்!
    மாநிலம்

    சிறுமுகை அருகே நீரில் மூழ்கத் தொடங்கிய காந்தையாற்று பாலம்!

    adminBy adminJuly 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிறுமுகை அருகே நீரில் மூழ்கத் தொடங்கிய காந்தையாற்று பாலம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிறுமுகை அருகே நீரில் மூழ்கத் தொடங்கிய காந்தையாறு பாலத்தால் வாகனப் போக்குவரத்து முடங்கியது. இதனால் கிராம மக்கள் பரிசல் மூலம் பயணித்து வருகின்றனர்.

    கோவை மாவட்டம் சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், லிங்காபுரம் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பவானியாற்றில் இணையும் காட்டாறான காந்தையாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் வடக்குப் பகுதியில் உள்ள மறுகரையில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் காந்தவயல், காந்தையூர், மொக்கைமேடு, உளியூர் ஆகிய மலையடிவார கிராமங்கள் உள்ளன. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர். இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம், விவசாயப் பொருட்கள் விற்பனை என அனைத்து தேவைகளுக்கும் காந்தையாற்றை கடந்து லிங்காபுரத்தை அடைந்த பின்னரே நகரப் பகுதிக்கு செல்ல இயலும்.

    கடந்த 2005-ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில், ரூ.4 கோடி மதிப்பில் காந்தையாற்றின் குறுக்கே 20 அடி உயரத்தில் பாலம் கட்டப்பட்டது. ஆனால் மழைக்காலத்தில் காட்டாறுகளில் நீர் வரத்து அதிகரிப்பு, பில்லூர் அணை நிரம்பி அதன் உபரி நீர் பவானியாற்றில் திறந்து விடப்படுவது போன்ற காரணங்களினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, எப்போதெல்லாம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயரம் 97 அடியை கடக்கிறதோ அப்போதெல்லாம் இந்த காந்தையாற்று பாலம் நீருக்கடியில் மூழ்கத் தொடங்கி விடும்.

    இந்நிலையில், தென்மேற்கு பருவமழையின் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97 அடியை கடந்ததால் நேற்றிலிருந்து இப்பாலம் நீருக்குள் மூழ்கத் தொடங்கியுள்ளது. இதனால் பாலத்தில் வாகனப் போக்குவரத்து முடங்கியது. இதனால் காட்டாற்றை கடந்து செல்ல மீண்டும் பரிசல்களையே இப்பகுதி மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘‘லிங்காபுரம் – காந்தவயல் இடையே உள்ள காந்தையாற்றை கடக்க புதிய உயர் மட்டப் பாலம் ரூ.15.40 கோடி மதிப்பில் கட்டும் பணி நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி தற்போது 70 சதவீதம் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. மந்தமாக நடக்கும் இப்பணியை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும். அப்போது தான் மக்கள் பாதுகாப்பாக பயணிக்க முடியும்’’ என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: காஞ்சி, சேலம், தஞ்சை, மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!

    September 16, 2025
    மாநிலம்

    மதிமுக தவிர்க்க முடியாத சக்தி என நிரூபித்து அங்கீகாரம் பெறுவோம்: துரை வைகோ உறுதி

    September 16, 2025
    மாநிலம்

    ஜிஎஸ்டி முதல் தமிழ் ஈழம் வரை: மதிமுக மாநாட்டு தீர்மானங்கள் என்னென்ன?

    September 16, 2025
    மாநிலம்

    “ஏன் கூட்டமே இல்ல?” – தஞ்சாவூரில் கொந்தளித்த பிரேமலதா

    September 16, 2025
    மாநிலம்

    கொலை முயற்சி வழக்கில் கைதான ஏர்போர்ட் மூர்த்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி

    September 16, 2025
    மாநிலம்

    தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்களை முன்னதாகவே அறிவிக்க கோரிக்கை

    September 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முதலில் ‘லோகா’வை வாங்க யாரும் முன்வரவில்லை: துல்கர் சல்மான் வெளிப்படை
    • வானிலை முன்னறிவிப்பு: காஞ்சி, சேலம், தஞ்சை, மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!
    • கூகிள் ஜெமினி நானோ வாழை AI: இந்த சானியா சோலி அய் மூச்சடைக்கக் கூடிய நவரத்ரி தோற்றத்தை முயற்சிக்கவும்
    • டேராடூனில் மேகவெடிப்பு: உத்தராகண்ட் முதல்வரிடம் பாதிப்புகளை கேட்டறிந்த மோடி, அமித் ஷா
    • வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் நாயகனாக அறிமுகம்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.