Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சிந்தாதிரிப்பேட்டை ஜோதியம்மாள் நகரில் ரூ.2.92 கோடியில் நவீன மீன் அங்காடி: துணை முதல்வர் திறந்து வைத்தார்
    மாநிலம்

    சிந்தாதிரிப்பேட்டை ஜோதியம்மாள் நகரில் ரூ.2.92 கோடியில் நவீன மீன் அங்காடி: துணை முதல்வர் திறந்து வைத்தார்

    adminBy adminMay 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிந்தாதிரிப்பேட்டை ஜோதியம்மாள் நகரில் ரூ.2.92 கோடியில் நவீன மீன் அங்காடி: துணை முதல்வர் திறந்து வைத்தார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.2.92 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் அங்காடியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

    சென்னையில் உள்ள மீன் அங்காடிகளில் சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி, முக்கியமானது. மீன் அங்காடிக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிந்தாதிரிப்பேட்டை, ஜோதியம்மாள் நகரில், சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ் ரூ.2.92 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி கட்டப்பட்டுள்ளது.

    மொத்தம் 82 கடைகளுடன் கட்டப்பட்ட இந்த கட்டிடமானது புயலினால் சேதமடையாமல் இருக்கும் வகையில் டென்சைல் கட்டுமானத்துடன் கூடிய மேற்கூரை, மீன் கழிவுகளை வெளியேற்றும் வகையில் 28 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சேகரிப்புத் தொட்டி, குப்பைகளை எளிதாக அகற்றுவதற்கான அமைப்புகள் மற்றும் வழிகாட்டிப் பலகைகள், 10,555 லிட்டர் கொள்ளளவு கொண்ட பயோ டைஜஸ்ட் அமைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    திறன் மேம்பாட்டு மையம்: அதேபோல் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அருகில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1.05 கோடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டு நிதி ரூ.99 லட்சம் என மொத்தம் ரூ.2.04 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் தரை தளத்தில் 60 பேர் பயன்பெறும் வகையில் தையல், அழகுக்கலை பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படவுள்ளன.

    முதல் தளத்தில் கணினி, டேலி பயிற்சி வகுப்புகள், இளைஞர்களுக்கான தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் நடத்தப்படும். பயிற்சி வகுப்புகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதிசெய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அந்தவகையில் புதிதாக கட்டப்பட்ட சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடி மற்றும் திருவல்லிக்கேணி ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மையக் கட்டிடங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்து பார்வையிட்டார்.

    இந்நிகழ்வுகளில் மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி என்.வி.என்.சோமு, மாநகராட்சி கூடுதல் ஆணையர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி, துணை ஆணையர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘ஆவின் பணி, வீட்டுமனை ஒதுக்கீட்டில் திருப்தியில்லை’ – மடப்புரம் அஜித்குமார் சகோதரர்

    July 8, 2025
    மாநிலம்

    கூட்டணியை தேர்வு செய்ய ராமதாஸுக்கு அதிகாரம், அன்புமணிக்கு கண்டனம்: பாமக செயற்குழுவில் தீர்மானம்

    July 8, 2025
    மாநிலம்

    மலிவு அரசியல் செய்யும் செல்வப்பெருந்தகை: தமிழக பாஜக கண்டனம்

    July 8, 2025
    மாநிலம்

    காவல் மரணம் வழக்குடன் அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் சிபிஐ விசாரிக்க வேண்டும்: ஐகோர்ட்

    July 8, 2025
    மாநிலம்

    ‘விதிகள் மீறல் மற்றும்…’ – கடலூர் விபத்துக்கு தெற்கு ரயில்வே சொல்லும் காரணம் என்ன?

    July 8, 2025
    மாநிலம்

    கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து: துணை முதல்வர் உதயநிதி இரங்கல்

    July 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆப்டிகல் மாயை: 1% மக்கள் மட்டுமே “செய்தபின் உருமறைப்பு” பணப்பையை கண்டுபிடிக்க முடியும்: உங்களால் முடியுமா? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஆவின் பணி, வீட்டுமனை ஒதுக்கீட்டில் திருப்தியில்லை’ – மடப்புரம் அஜித்குமார் சகோதரர்
    • வயிற்று புற்றுநோய் அறிகுறிகள்: வயிற்று புற்றுநோயின் 7 ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகின்றன
    • அதிபர் சர்தாரியின் பதவியை பறித்துவிட்டு பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு அடித்தளமா?
    • போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.