Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சித்திரை முழு நிலவு மாநாடு: பாமகவினர் அமைதியைப் பேண அன்புமணி வேண்டுகோள்
    மாநிலம்

    சித்திரை முழு நிலவு மாநாடு: பாமகவினர் அமைதியைப் பேண அன்புமணி வேண்டுகோள்

    adminBy adminMay 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சித்திரை முழு நிலவு மாநாடு: பாமகவினர் அமைதியைப் பேண அன்புமணி வேண்டுகோள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மாமல்லபுரம்: பாமக சார்பில் ஞாயிறன்று நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்கள் அனைவரும், காவல் துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி முழு கட்டுப்பாடுடன், இடையூறு இல்லாமல் அமைதியான முறையில் வந்து செல்ல வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக, அப்பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. மேலும், அந்த இடத்தில் மாநாட்டுக்கான பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில், தென் மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை செல்ல அனுமதியில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர். மாறாக, என்எச் 45 என அழைக்கப்படும் சென்னை – திருச்சி சாலை மார்க்கமாகவே மாநாட்டுக்கு செல்ல வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அன்றைய தினம் மாமல்லபுரம் சுற்றுலாத்தலம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் பயணிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை பாமக தலைவலர் அன்புமணி இன்று (மே 9) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநாட்டுக்கு அனைவரையும் வரவேற்று வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

    அதில், “சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கு அனைவரையும் வரவேற்கிறேன். மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் முழு கட்டுப்பாடுடன், போலீஸாரின் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றி அமைதியான முறையில் வாகனத்தில் வரவேண்டும். அதேபோல், மாநாட்டை நிறைவு செய்து மீண்டும் அமைதியான முறையில் ஊர் திரும்ப வேண்டும். நீங்கள் அனைவரும் ஊர் திரும்பும் வரையில் எனக்கு தூக்கம் இருக்காது.

    இந்த மாநாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மாநில அரசை வலியுறுத்துவோம். அனைவருக்கும் உரிய இட ஒதுக்கீட்டை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவற்றுக்காகத்தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. தமிழகம் மட்டுமில்லாமல், ஆந்திரா, கர்நாடக உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தொண்டர்கள் வருகின்றனர்,” என்று அந்த வீடியோவில் அன்புமணி கூறியுள்ளார்.

    உங்களை காண ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் உங்களின் அன்புமணி.! pic.twitter.com/IIjNZPYc78


    — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 9, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அரசே தனது குடிமகனை கொலை செய்துள்ளது: அஜித்குமார் வழக்கில் நீதிமன்றம் கூறியது என்ன?

    July 2, 2025
    மாநிலம்

    கடமை தவறி குற்றம் செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை: அஜித்குமாரின் தாயாரிடம் போனில் வருத்தம் தெரிவித்தார் முதல்வர்

    July 2, 2025
    மாநிலம்

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: பெண் உட்பட 8 தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு – நடந்தது என்ன?

    July 2, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் இன்று வெப்பநிலை உயர வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

    July 2, 2025
    மாநிலம்

    ‘நடக்கக் கூடாதது நடந்துவிட்டது…’ – அஜித்குமார் குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

    July 2, 2025
    மாநிலம்

    சாத்தான்குளம் சம்பவத்துக்கு பொங்கியவர்கள் மடப்புரம் விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்?

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அரசே தனது குடிமகனை கொலை செய்துள்ளது: அஜித்குமார் வழக்கில் நீதிமன்றம் கூறியது என்ன?
    • பள்ளி கல்வித்துறை பணியாளர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு: ஜூலை 8, 9-ம் தேதிகளில் நடைபெறுகிறது
    • கடமை தவறி குற்றம் செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை: அஜித்குமாரின் தாயாரிடம் போனில் வருத்தம் தெரிவித்தார் முதல்வர்
    • “மாரி செல்வராஜ் விரைவில் பான் இந்தியா படம் இயக்க வேண்டும்” – இயக்குநர் ராம் விருப்பம்!
    • சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: பெண் உட்பட 8 தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு – நடந்தது என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.