Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, December 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சிதம்பரம் நடராஜர் சந்நிதி முன்பாக உள்ள கனகசபையில் நின்று தரிசனம் மேற்கொள்ள பக்தர்களை அனுமதிக்க முடியாது: தீட்சிதர் தரப்பில் வாதம்
    மாநிலம்

    சிதம்பரம் நடராஜர் சந்நிதி முன்பாக உள்ள கனகசபையில் நின்று தரிசனம் மேற்கொள்ள பக்தர்களை அனுமதிக்க முடியாது: தீட்சிதர் தரப்பில் வாதம்

    adminBy adminSeptember 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிதம்பரம் நடராஜர் சந்நிதி முன்பாக உள்ள கனகசபையில் நின்று தரிசனம் மேற்கொள்ள பக்தர்களை அனுமதிக்க முடியாது: தீட்சிதர் தரப்பில் வாதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சிதம்பரம் நடராஜர் சந்நிதி முன்பாக உள்ள கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதியளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து பொது தீட்சதர்கள் தரப்பிலும், சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கனக சபையில் நின்று பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்தும், வார நாட்கள், வார விடுமுறை மற்றும் விழாக்காலங்களில் எவ்வளவு பேர் தரிசனம் மேற்கொள்ள முடியும் என்பது குறித்து களஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.

    அதன்படி அறநிலையத்துறை தரப்பில் கனகசபையில் சில மாறுதல்களை செய்தால் சுமார் 4 ஆயிரம் பக்தர்கள் வரை எளிதாக சுவாமி தரிசனம் செய்ய முடியும் என கடந்தமுறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், “கனகசபையில் நின்று தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

    பக்தர்களை அனுமதிக்கவும் முடியாது. விஐபிக்கள் மற்றும் தீட்சிதர்களுக்கு மட்டுமே கனகசபையில் நின்று தரிசனம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடை முறைதான் ஆண்டாண்டு கால மாகக் கடைபிடிக்கப்பட்டு வரு கிறது” என்றார், அதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர். அருண்நடராஜன், “பொது தீட்சிதர்கள் தரப்பில் தற்போது திடீரென பல்டிஅடித்து பக்தர்களுக்கு கனகசபையில் நின்று தரிசனம் மேற்கொள்ள அனுமதி கிடையாது என தெரிவிக்கப்படுவதை ஏற்கமுடியாது.

    கடந்த 2008 முதல் பக்தர்களும் கனகசபையில் நின்று தரிசனம் மேற்கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதற்காகத்தான் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தட்டு காணிக்கை மூலமாக கோயிலை நிர்வகித்து வருகிறோம் எனக் கூறும் தீட்சிதர்கள் பக்தர்களை கனகசபை மீது ஏற அனுமதிக்க மாட்டோம், எனக்கூற முடியாது” என்றார், அதையடுத்து நீதிபதிகள், பக்தர்களுக்கு கனகசபையில் அனுமதி கிடையாது எனக்கூறுவது தொடர்பாக மனுவாக தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்.9-க்கு தள்ளி வைத்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சளி அதிகமாகுமா? அறிவியல் என்ன சொல்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பசுக்கள் விளையாட்டுத்தனமான புல் நாய்க்குட்டிகள் போல் செயல்பட 5 அபிமான காரணங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘டை ஹார்ட் கிறிஸ்துமஸ் திரைப்படம் அல்ல!’ பிறகு ஏன் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் பார்க்கிறோம்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டிசம்பரில் 10 குறைவாக மதிப்பிடப்பட்ட, குறைவான கூட்ட நெரிசல் உள்ள இடங்கள்
    • மருத்துவ ஏர் கிளீனர்களுக்கான US-FDA வகுப்பு II அனுமதியைப் பெற்ற முதல் இந்திய நிறுவனம் பெங்களூரு ஸ்டார்ட்அப் | இந்தியா செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.