Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சிதம்பரத்தில் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விசிகவினர் கைது 
    மாநிலம்

    சிதம்பரத்தில் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விசிகவினர் கைது 

    adminBy adminJune 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிதம்பரத்தில் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விசிகவினர் கைது 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கடலூர்: சிதம்பரத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

    நீதிமன்ற உத்தரவுப்படி சிதம்பரம் பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நகராட்சி துறையினர் அரசியல் கட்சி கொடி கம்பங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு பேட்டை பகுதிலிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றினார்.

    அப்பொழுது கொடிக்கம்பம் அருகே இருந்த டாக்டர் அம்பேத்கர் சிலை மீது எதிர்பாராத விதமாக விழுந்தது. இதில் அம்பேத்கர் சிலை சேதம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து அன்றிரவு விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் பாஜகவினர் சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பர நகர போலீஸார் அவர்களிடம் சமாதானம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    மேலும் இதுகுறித்து சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் அதே இடத்தில் அம்பேத்கர் சிலை அமைத்து தர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சிதம்பரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரை கண்டித்து அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை 11.30 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அரங்க தமிழ் ஒளி தலைமையில் அக்கட்சியினர் சுமார் 25 பேர் சீர்காழி சாலையில் ஊர்வலமாக நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். போலீஸார் வழியிலேயே அவர்களை தடுத்து நிறுத்தினார்.

    இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உதவி கோட்ட பொறியாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், தமிழக அரசு இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர். இதில் 25-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் போராட்டத்தை முன்னிட்டு ஏடிஎஸ்பி கோடீஸ்வரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்திய பாஜக அரசுதான்: பழனிசாமி தகவல்

    September 16, 2025
    மாநிலம்

    புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்: செங்கோட்டையன் கருத்து

    September 16, 2025
    மாநிலம்

    பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக அன்புமணியே தொடர்வார்: வழக்கறிஞர் பாலு தகவல்

    September 16, 2025
    மாநிலம்

    நீலகிரி: ஒரே வீட்டு எண்ணில் 79 வாக்காளர்கள் இருப்பதாக புகார்

    September 16, 2025
    மாநிலம்

    மாநில செயலாளர் எனும் மாபெரும் பொறுப்பு: வாழ்த்திய தலைவர்களுக்கு மு.வீரபாண்டியன் நன்றி

    September 16, 2025
    மாநிலம்

    16-வது நிதிக் குழுவின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்

    September 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்திய பாஜக அரசுதான்: பழனிசாமி தகவல்
    • இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: டெல்லியில் இன்று தொடக்கம்
    • உணவு முடிந்த உடனேயே உட்கார்ந்திருக்கிறீர்களா? திடீர் மாரடைப்புக்கு இது மிகவும் சந்தேகத்திற்கு இடமில்லாத காரணியாக இருக்கலாம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விஞ்ஞானிகள் ஜாக்சன் பொல்லக்கின் ஓவியங்களில் ஒன்றில் ஒரு மர்ம நிறத்தை அடையாளம் காண்கின்றனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்கும் திறன் உள்ளது: சொந்த ஆதாயத்துக்காக எத்தனால் கொள்கை என்ற புகாருக்கு கட்கரி மறுப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.