Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சிசு உயிரிழந்த புகார்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தல்
    மாநிலம்

    சிசு உயிரிழந்த புகார்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தல்

    adminBy adminJuly 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிசு உயிரிழந்த புகார்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: விழுப்​புரம் அருகே மகப்​பேறு சிகிச்​சை​யின்​போது கர்ப்​பிணியை மனி​தாபி​மானமற்ற முறை​யில் நடத்​தி​ய​தால் சிசு உயி​ரிழந்த புகார் தொடர்​பான விசா​ரணை அறிக்​கையை முறை​யாக தாக்​கல் செய்ய பொதுசு​கா​தா​ரத் துறை இயக்​குநருக்கு உத்​தர​விட வேண்​டும் என தமிழக அரசை மாநில மனித உரிமை​கள் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

    விழுப்​புரம் மாவட்​டம் புதுப்​பாக்​கத்​தைச் சேர்ந்த கே.தேவ​மணி என்​பவர் ஆணை​யத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறியிருப்பதாவது: கடந்த 2021-ம் ஆண்டு கர்ப்​பிணி​யான எனது மகளை முருக்​கேரி ஆரம்ப சுகா​தார நிலை​யத்​தில் அனுமதித்தேன்.

    அங்கு ரத்​தப்​போக்கு அதி​க​மான நிலை​யில், அவரை பெரிய மருத்​து​வ​மனைக்கு மாற்ற பரிந்​துரை செய்​தனர். இதற்​காக ஆம்​புலன்​ஸில் எனது மகளை ஏற்​றும் நேரத்​தில் மனி​தாபி​மானமில்​லாமல் ரத்த கறையை துடைத்த பிறகே செல்ல முடியும் என செவிலியர் நிர்​பந்​தித்​தார்.

    இதனால், தாமத​மாகி 8 மாத குழந்தை கரு​விலேயே இறந்​தது. எனது மகளும், மனம் மற்​றும் உடலள​வில் பல்​வேறு பிரச்சினைகளை எதிர்​கொண்​டார். இவ்​வாறு மனித உரிமை மீறலில் ஈடு​பட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

    மனுவை விசா​ரித்த உறுப்​பினர் வி.கண்​ண​தாசன் பிறப்​பித்த உத்​தர​வில் கூறியிருப்பதாவது: வழக்கு தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்ய பொதுசு​கா​தா​ரத் துறை இயக்​குநருக்கு உத்​தர​விடப்​பட்டு அறிக்கை பெறப்​பட்​டது.

    எனினும், அறிக்​கை​யில் திருப்​தி​யில்​லாத​தால் அனைத்து தரப்​பினரும் விசா​ரிக்​கப்​பட்​டனர். அப்​போது, ரத்த கறையை சுத்​தம் செய்ய சொன்​னது முத்​துலட்​சுமி என்​னும் பணி​யாளர் என்​பது தெரிய​வந்​தது. இதுதொடர்​பாக, முத்​துலட்​சுமி பணிநீக்​கம் செய்யப்பட்​டாலும், குழந்​தையை இழந்​த​தால் ஏற்​பட்ட மனஉளைச்​சலுக்​காக தமிழக அரசு ரூ.5 லட்​சத்தை 4 வாரத்​துக்​குள் மனுதாரருக்கு வழங்க வேண்​டும்.

    கிராம அளவில் உள்ள ஆரம்ப சுகா​தார நிலை​யத்​தில் 24 மணி நேரம் பணி​யில் இருக்​கும் வகையில் அதி​கள​வில் மருத்​து​வர், செவிலியர், மருத்​து​வப் பணி​யாளர்​களை தமிழக அரசு நியமிக்க வேண்​டும். கர்ப்​பிணி​களை மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​வ​தில் சிறப்பு கவனம் செலுத்​தும் வகை​யில் அதி​களவு ஆம்​புலன்ஸ் சேவையை அரசு விரிவுபடுத்த வேண்​டும்.

    விசா​ரணை அறிக்​கையை முறை​யாக தாக்​கல் செய்ய பொதுசு​கா​தா​ரத் துறை இயக்​குநருக்கு தமிழக அரசு அறி​வுறுத்த வேண்டும். ஏழைகள், பெண்​களுக்கு உரிய நேரத்​தில் சிகிச்சை கிடைக்​கும் வகை​யில் பொதுசு​கா​தார இயக்​குநர் உள்​ளிட்ட அதிகாரி​கள் தொடர்ச்​சி​யாக ஆய்வு செய்​து, போ​திய மருத்​து​வர்​கள் பணி​யில் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு உத்தர​வில்​ பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னையில் செப்.2, 3 தேதிகளில் ‘ட்ரோன்’ பறக்க தடை

    August 28, 2025
    மாநிலம்

    கண்ணப்பர் திடலில் நாய் கருத்தடை மையம் அமைக்க தடை கோரிய வழக்கு: சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு

    August 28, 2025
    மாநிலம்

    “மதுரை மேயர் இந்திராணி உடனடியாக பதவி விலக வேண்டும்” – செல்லூர் ராஜூ

    August 28, 2025
    மாநிலம்

    பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும்: ஐகோர்ட்

    August 28, 2025
    மாநிலம்

    கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு விரைந்து நலம் பெற விழைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்

    August 28, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் செப்.3 வரை மழை பெய்ய வாய்ப்பு

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னை ஐஐடியில் இணையவழி தொழில்நுட்ப படிப்புகள்: இதுவரை 381 அரசுப் பள்ளி மாணவர்கள் பலன்!
    • குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னையில் செப்.2, 3 தேதிகளில் ‘ட்ரோன்’ பறக்க தடை
    • பிஸ்தா உடன் இணைக்கப்பட்ட சால்மோனெல்லா வெடிப்பு: கொட்டைகள் பெரிய சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்த முடியுமா, பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கண்ணப்பர் திடலில் நாய் கருத்தடை மையம் அமைக்க தடை கோரிய வழக்கு: சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு
    • உரிய விலை கிடைக்காமல் குறைந்த விலையில் ஏலம் போகும் வாழைத்தார்கள் – கோவை விவசாயிகள் கவலை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.