Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சிசு உயிரிழந்த புகார்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தல்
    மாநிலம்

    சிசு உயிரிழந்த புகார்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தல்

    adminBy adminJuly 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிசு உயிரிழந்த புகார்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: விழுப்​புரம் அருகே மகப்​பேறு சிகிச்​சை​யின்​போது கர்ப்​பிணியை மனி​தாபி​மானமற்ற முறை​யில் நடத்​தி​ய​தால் சிசு உயி​ரிழந்த புகார் தொடர்​பான விசா​ரணை அறிக்​கையை முறை​யாக தாக்​கல் செய்ய பொதுசு​கா​தா​ரத் துறை இயக்​குநருக்கு உத்​தர​விட வேண்​டும் என தமிழக அரசை மாநில மனித உரிமை​கள் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

    விழுப்​புரம் மாவட்​டம் புதுப்​பாக்​கத்​தைச் சேர்ந்த கே.தேவ​மணி என்​பவர் ஆணை​யத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறியிருப்பதாவது: கடந்த 2021-ம் ஆண்டு கர்ப்​பிணி​யான எனது மகளை முருக்​கேரி ஆரம்ப சுகா​தார நிலை​யத்​தில் அனுமதித்தேன்.

    அங்கு ரத்​தப்​போக்கு அதி​க​மான நிலை​யில், அவரை பெரிய மருத்​து​வ​மனைக்கு மாற்ற பரிந்​துரை செய்​தனர். இதற்​காக ஆம்​புலன்​ஸில் எனது மகளை ஏற்​றும் நேரத்​தில் மனி​தாபி​மானமில்​லாமல் ரத்த கறையை துடைத்த பிறகே செல்ல முடியும் என செவிலியர் நிர்​பந்​தித்​தார்.

    இதனால், தாமத​மாகி 8 மாத குழந்தை கரு​விலேயே இறந்​தது. எனது மகளும், மனம் மற்​றும் உடலள​வில் பல்​வேறு பிரச்சினைகளை எதிர்​கொண்​டார். இவ்​வாறு மனித உரிமை மீறலில் ஈடு​பட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

    மனுவை விசா​ரித்த உறுப்​பினர் வி.கண்​ண​தாசன் பிறப்​பித்த உத்​தர​வில் கூறியிருப்பதாவது: வழக்கு தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்ய பொதுசு​கா​தா​ரத் துறை இயக்​குநருக்கு உத்​தர​விடப்​பட்டு அறிக்கை பெறப்​பட்​டது.

    எனினும், அறிக்​கை​யில் திருப்​தி​யில்​லாத​தால் அனைத்து தரப்​பினரும் விசா​ரிக்​கப்​பட்​டனர். அப்​போது, ரத்த கறையை சுத்​தம் செய்ய சொன்​னது முத்​துலட்​சுமி என்​னும் பணி​யாளர் என்​பது தெரிய​வந்​தது. இதுதொடர்​பாக, முத்​துலட்​சுமி பணிநீக்​கம் செய்யப்பட்​டாலும், குழந்​தையை இழந்​த​தால் ஏற்​பட்ட மனஉளைச்​சலுக்​காக தமிழக அரசு ரூ.5 லட்​சத்தை 4 வாரத்​துக்​குள் மனுதாரருக்கு வழங்க வேண்​டும்.

    கிராம அளவில் உள்ள ஆரம்ப சுகா​தார நிலை​யத்​தில் 24 மணி நேரம் பணி​யில் இருக்​கும் வகையில் அதி​கள​வில் மருத்​து​வர், செவிலியர், மருத்​து​வப் பணி​யாளர்​களை தமிழக அரசு நியமிக்க வேண்​டும். கர்ப்​பிணி​களை மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​வ​தில் சிறப்பு கவனம் செலுத்​தும் வகை​யில் அதி​களவு ஆம்​புலன்ஸ் சேவையை அரசு விரிவுபடுத்த வேண்​டும்.

    விசா​ரணை அறிக்​கையை முறை​யாக தாக்​கல் செய்ய பொதுசு​கா​தா​ரத் துறை இயக்​குநருக்கு தமிழக அரசு அறி​வுறுத்த வேண்டும். ஏழைகள், பெண்​களுக்கு உரிய நேரத்​தில் சிகிச்சை கிடைக்​கும் வகை​யில் பொதுசு​கா​தார இயக்​குநர் உள்​ளிட்ட அதிகாரி​கள் தொடர்ச்​சி​யாக ஆய்வு செய்​து, போ​திய மருத்​து​வர்​கள் பணி​யில் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு உத்தர​வில்​ பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சிறிய கடைகளுக்கும் உரிமம்: கட்டாய சட்டத்தை திரும்ப பெற தலைவர்கள் வலியுறுத்தல்

    July 30, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஆக. 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

    July 30, 2025
    மாநிலம்

    பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம் ஆலோசனை

    July 30, 2025
    மாநிலம்

    சென்னையில் இருந்து துர்காபூர் புறப்பட இருந்த விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயற்சி நடந்ததால் பரபரப்பு

    July 30, 2025
    மாநிலம்

    இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    July 30, 2025
    மாநிலம்

    தமிழக தேர்தல் களம் 2026-ல் என்ன செய்யப் போகிறது ‘ஏஐ’ புயல்? – ஓர் அலர்ட் பார்வை

    July 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிறிய கடைகளுக்கும் உரிமம்: கட்டாய சட்டத்தை திரும்ப பெற தலைவர்கள் வலியுறுத்தல்
    • ஊராட்சி பகுதியில் தொழில் தொடங்க உரிம கட்டணம் மாற்றியமைப்பு
    • பஹல்காமில் தாக்கியவர்கள் பாக். தீவிரவாதிகள்தான்: நாடாளுமன்றத்தில் அமித் ஷா திட்டவட்ட பேச்சு
    • புற்றுநோயை விலக்கி வைப்பதற்கான 7 வழிகள் (30 ஆண்டுகளாக இந்த நிலையைப் படித்த ஒரு ஆராய்ச்சியாளரிடமிருந்து)
    • ஆற்றல் பானங்கள் பீதி தாக்குதல்களைத் தூண்ட முடியுமா? சிறந்த அமெரிக்க மருத்துவர் விளக்குகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.