Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல்: மத்திய அமைச்சரவை முடிவுக்கு தலைவர்கள் வரவேற்பு
    மாநிலம்

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல்: மத்திய அமைச்சரவை முடிவுக்கு தலைவர்கள் வரவேற்பு

    adminBy adminMay 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல்: மத்திய அமைச்சரவை முடிவுக்கு தலைவர்கள் வரவேற்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வரவேற்பு அளித்ததுடன், அனைத்து சமூகங்களின் பிரதிநிதித்துவத்தையும் சாதிவாரி கணக்கெடுப்பு உறுதி செய்யும் என தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்க வேண்டும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியது அவசியம். அந்தவகையில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மத்திய அரசின் முடிவை மனதார வரவேற்கிறேன்.

    விசிக தலைவர் திருமாவளவன்: இந்தியாவில் அடுத்து மேற்கொள்ளப்பட இருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இது விசிக உள்ளிட்ட சமூகநீதிக் கட்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். அதேநேரம் சமூக நீதியில் உண்மையிலே பாஜக அரசுக்கு அக்கறையிருந்தால் உடனடியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலே அதற்கான சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும்.

    மநீம தலைவர் கமல்ஹாசன்: சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றமாக இருக்கும். அதேநேரம் சமத்துவத்துக்கான உண்மையான அர்ப்பணிப்பில் இதற்காக போராடிய தலைமுறையினரை கவுரவிக்க வேண்டியதும் அவசியம். மக்கள் நீதி மய்யம் நீண்ட காலமாக சாதி அநீதிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில் மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை வரவேற்கிறோம்.

    தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.சேக் தாவூத்: மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு உத்தரவை மனதார வரவேற்கிறோம். இது இந்தியாவில் அனைத்து சமூகங்களுக்கும் நீதியையும், பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்யும். அதன்படி 1931-ல் நடந்த கடைசி சாதி கணக்கெடுப்புக்குப் பின் உள்ள இடைவெளியை சரிசெய்யும் வாய்ப்பாக இதை நான் பார்க்கிறேன். இதை முஸ்லிம்கள் எச்சரிக்கையுடனும், தெளிவுடனும் அணுக வேண்டும். இந்த கணக்கெடுப்பு நம் சமூகத்தின் உண்மையான வலிமையை பதிவு செய்யும் வாய்ப்பாகும். அந்தவகையில் கணக்கெடுப்பு நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடப்பதை நாம் உறுதிசெய்வோம்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நன்கொடை கேட்டு தாக்குதல்: விசிகவினரை கண்டித்து மேலூரில் வர்த்தக சங்கம் கடையடைப்பு

    July 1, 2025
    மாநிலம்

    திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் இபிஎஸ்

    July 1, 2025
    மாநிலம்

    சென்னையில் 8 இடங்களில் வீடுகளுக்கான இயற்கை எரிவாயு விநியோக மையம் அமைக்க மாநகராட்சி அனுமதி

    July 1, 2025
    மாநிலம்

    171 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி: ஜூலை 4-ம் தேதி பழனிசாமி வழங்குகிறார்

    July 1, 2025
    மாநிலம்

    பாஜக, தி​முகவை எதிர்க்​கும் கட்​சிகளுடன் கூட்​ட​ணி​யா? – பிரேமலதா விளக்​கம்

    July 1, 2025
    மாநிலம்

    அஜித்குமாரின் உடலில் 30 காயங்கள்: சிவகங்கை கஸ்டடி மரண வழக்கில் 5 காவலர்கள் கைது

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நன்கொடை கேட்டு தாக்குதல்: விசிகவினரை கண்டித்து மேலூரில் வர்த்தக சங்கம் கடையடைப்பு
    • Prepieabeades அறிகுறிகள்: 5 அறிகுறிகள் முன்னுரிமைகள் (இரத்த பரிசோதனை இல்லாமல்) | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பூமியின் கவசத்திலிருந்து எரிமலை வெடிப்புகள் ஆப்பிரிக்காவில் ஒரு புதிய கடலை உருவாக்குகின்றன | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு 52 கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவும் பணி தீவிரம்
    • இந்தியா உடனான 2-வது டெஸ்ட்: ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து – பும்ரா விளையாடுகிறாரா?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.