Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, January 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சாதிவாரி கணக்கெடுப்பு தரவு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்
    மாநிலம்

    சாதிவாரி கணக்கெடுப்பு தரவு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

    adminBy adminMay 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சாதிவாரி கணக்கெடுப்பு தரவு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு, கணக்கெடுப்பு தரவுகள் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

    பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவர் ரத்தினசபாபதி கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: எங்கள் கூட்டமைப்பும், ஓபிசி ரைட்ஸ் இயக்கமும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தொடர்ச்சியாக போராடி வருகிறோம்.

    ஒவ்வொரு சாதியிலும் உள்ள மக்களின் எண்ணிக்கையை மட்டும் கணக்கிடாமல், மக்கள்தொகை எவ்வளவு, அவர்களின் சமூக, பொருளாதார நிலை என்ன, எத்தனை பேர் உயர்கல்வி படித்துள்ளனர், எத்தனை பேர் அரசுப் பதவி பெற்றுள்ளனர் என்பன உள்ளிட்ட பல அளவுகோள்களையும், தரவுகளையும் சேகரிப்பதே சாதிவாரி கணக்கெடுப்பாகும்.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி எங்கள் கூட்டமைப்பு சார்பில், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் மட்டுமின்றி, சட்டப் போராட்டமும் நடத்தினோம். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ‘புள்ளி விவரச் சட்டம் 2008’ வழிவகை செய்தும், மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த இயலாது என்று தட்டிக் கழித்தது. இதில் திமுக மற்றும் அதிமுக அரசுகள் ஒரே மாதிரியாகத்தான் செயல்பட்டன.

    புள்ளி விவரச் சட்டப்படி, பிஹார், ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்கள் கணக்கெடுப்பு செய்து, அதனடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கிய பிறகும்கூட, தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இயலாது என்று தட்டிக் கழித்தது. தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்ததை வரவேற்கிறோம். ஆனால், இதற்கான நிபந்தனைகள் என்ன, எவ்வாறு நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவிக்கவில்லை.

    மத்திய அரசின் இந்த அறிவிப்புக்காக 5 வருடங்கள் போராட்டம் நடத்தியுள்ளோம். எனவே, வெறும் கணக்கெடுப்பு நடத்தி தரவுகள் சேகரித்தால் மட்டும் போதாது. கடந்த 70 வருடங்களுக்கு மேலாக கல்வி, அரசு வேலைவாய்ப்பு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள எங்களின் ஓபிசி மக்களுக்கு இடஒதுக்கீடு, சமூக நீதி அந்தஸ்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் திருஞானசம்பந்தம், வெள்ளியங்கிரி, வேலுசாமி உடனிருந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • குளிர்காலத்தில் இட்லி மாவு புளிக்கவில்லையா? இந்த எளிய குறிப்புகள் உண்மையில் வேலை செய்யும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஷிகர் தவான் சோஃபி ஷைனுடன் நிச்சயதார்த்தத்தை அறிவித்தார்: அவர்கள் பிப்ரவரி 2026 இல் திருமணம் செய்து கொள்கிறார்களா? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இனி உடல் அனுமதி இல்லை: சிக்கிம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஆன்லைன் அனுமதியை கட்டாயமாக்குகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நீங்கள் வரும்போது உங்கள் ஹோட்டல் அறையை எப்போதும் புகைப்படம் எடுக்க வேண்டும்; காரணம் இதோ | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு வேலை செய்யும் 10 துருவல் முட்டை ரெசிபிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.