Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘சமூக நீதி விடுதி’ எனப் பெயர் வைத்தால் மட்டும் போதுமா? – ஸ்டாலினை சாடும் எல்.முருகன்
    மாநிலம்

    ‘சமூக நீதி விடுதி’ எனப் பெயர் வைத்தால் மட்டும் போதுமா? – ஸ்டாலினை சாடும் எல்.முருகன்

    adminBy adminJuly 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘சமூக நீதி விடுதி’ எனப் பெயர் வைத்தால் மட்டும் போதுமா? – ஸ்டாலினை சாடும் எல்.முருகன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: எஸ்சி, எஸ்டி மாணவர்களின் விடுதிக்கு ‘சமூக நீதி விடுதி’ என பெயர் வைத்திருக்கிறார். முதல்வர் இதுவரை ஏதாவது ஒரு மாணவர்கள் விடுதியை நேரில் சென்று பார்த்திருக்கிறாரா?. மாணவர்கள் மீது அக்கறை இருந்தால், நிதி ஒதுக்கி விடுதிகளை மேம்படுத்த வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

    சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து, இஎஸ்ஐ பயனாளிகளுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம்களை தொடங்கி வைத்து, மூத்த குடிமக்களுக்கு மருத்துவ உதவி உபகரணங்களை வழங்கினார்.

    அப்போது செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது: தமிழக முதல்வர் மிகப்பெரிய கேலிக்கூத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். எல்லாரையும் முட்டாளாக்க முயற்சிக்கிறார். எஸ்சி, எஸ்டி மாணவர்களின் விடுதிக்கு ‘சமூக நீதி விடுதி’ என பெயர் வைத்திருக்கிறார். முதல்வர் இதுவரை ஏதாவது ஒரு மாணவர்கள் விடுதியை நேரில் சென்று பார்த்திருக்கிறாரா? நான் எஸ்டி கமிஷன் துணைத் தலைவராக இருந்தபோது, ஒவ்வொரு விடுதியையும் நேரில் சென்று பார்த்திருக்கிறேன்.

    அங்கு விடுதியின் தரம் என்பது மிக மோசமாக இருக்கும். எஸ்சி, எஸ்டி விடுதியில் தங்கியிருந்து மாணவர் ஒருவர் படிக்கிறார் என்றால், அதைவிட ஒரு கொடுமையை அந்த மாணவர் அனுபவித்திருக்க முடியாது. அந்தளவு கொடுமையுள்ள விடுதிகளை, பெயரை மட்டும் மாற்றிவிட்டால் போதாது. பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் உள்ள விடுதியில், எந்தளவு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம் என தமிழக முதல்வர் அங்கு நேரில் சென்று பார்க்க வேண்டும்.

    அதேபோல், கர்நாடகா, தெலங்கானாவில் உள்ள மாணவர்கள் விடுதிகள் எந்தளவு சிறப்பாக இருக்கிறது என்பதை முதல்வர் நேரில் சென்று பார்க்க வேண்டும். தமிழகத்தில் எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது. அந்த விடுதியில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்கள் தோல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். கடந்த வாரம் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் கூட, விடுதி வசதி சரியாக இல்லை என சாலைக்கு வந்து போராடினார்கள். மாணவர்கள் மீது அக்கறை இருந்தால், நிதி ஒதுக்கி விடுதிகளை மேம்படுத்த வேண்டும்.

    காலணிகளை ஒழித்திருக்கிறோம் என்கிறார்கள். பல கிராமங்களில் இன்னும் தீண்டாமை இருக்கிறது. இதையெல்லாம் வைத்து கொண்டு சமூக நீதி பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஊட்டியில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அங்கன்வாடி மையங்களை மூடிவிட்டார்கள். அதை மீண்டும் திறக்க வேண்டும். சிவகாசி பட்டாசு விபத்து என்பது வாடிக்கையாக இருக்கிறது. தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்களுக்கு சரியான பாதுகாப்பு விதிமுறைகளை தமிழக அரசு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    அடிப்படையில் காவல்துறைக்கு நிறைய பாடங்களை சொல்லிக் கொடுக்க வேண்டி உள்ளது. காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க ஒருவர் சென்றாலும் சரி அல்லது ஒரு குற்றவாளி சென்றாலும் சரி, அவர்கள் மீதான போலீஸாரின் அணுகுமுறை சரியில்லை. மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மக்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதை ஆரம்ப காலத்தில் இருந்து போலீஸாருக்கு பயிற்சி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ரிதன்யா மரணத்துக்கு நீதி கேட்டு அவிநாசியில் மக்கள் திரண்டு அஞ்சலி!

    July 7, 2025
    மாநிலம்

    “பாஜகவுடன் அன்று திமுக கூட்டணி வைத்தபோது…” – கோவை பிரச்சாரத்தில் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி

    July 7, 2025
    மாநிலம்

    ராமதாஸ் தலைமையில் காலையில் கூடும் பாமக செயற்குழுவை புறக்கணிக்க அன்புமணி முடிவு?

    July 7, 2025
    மாநிலம்

    சென்னையில் ஆக.5-ல் உண்ணாவிரதப் போராட்டம்: டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனம் அறிவிப்பு

    July 7, 2025
    மாநிலம்

    மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    July 7, 2025
    மாநிலம்

    இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்

    July 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஐடெல் ‘சிட்டி 100’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
    • 26/11 தாக்குதலை மேற்பார்வையிட மும்பையில் இருந்த தீவிரவாதி ராணா – விசாரணையில் புதிய தகவல்
    • ரிதன்யா மரணத்துக்கு நீதி கேட்டு அவிநாசியில் மக்கள் திரண்டு அஞ்சலி!
    • “அரசிடம் இருந்து இந்துக்களைவிட அதிக பலன் பெறுவது சிறுபான்மையினரே” – கிரண் ரிஜிஜு
    • “பாஜகவுடன் அன்று திமுக கூட்டணி வைத்தபோது…” – கோவை பிரச்சாரத்தில் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.