Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சமூக நீதிக்கான அரசியல் மற்றும் போராட்டத்தை நாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
    மாநிலம்

    சமூக நீதிக்கான அரசியல் மற்றும் போராட்டத்தை நாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

    adminBy adminJuly 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சமூக நீதிக்கான அரசியல் மற்றும் போராட்டத்தை நாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சமூக நீதிக்​கான அரசி​யலை​யும், போராட்​டத்​தை​யும் நாம் மீண்​டும் மீண்​டும் சொல்​லிக்​கொண்டே இருக்க வேண்​டும் என்று மருத்​துவ மாணவர் சேர்க்​கை​யில் ஓபிசி பிரி​வினருக்கு 27 சதவீதம் இடஒதுக்​கீடு பெற்​றதை சுட்​டிக்​காட்டி முதல்​வர் மு.க.ஸ்டா​லின் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். அகில இந்​திய மருத்​துவ மாணவர் சேர்க்​கை​யில் ஓபிசி பிரி​வினருக்கு 27 சதவீதம் இடஒதுக்​கீடு தொடர்​பாக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி சாதக​மான தீர்ப்பு வெளிவந்​தது.

    இந்த வெற்​றியைக் குறிப்​பிட்​டு, மாநிலங்​களவை திமுக எம்​.பி.​யும், மூத்த வழக்​கறிஞரு​மான பி.​வில்​சன் நேற்று வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது:சமூகநீதி வரலாற்​றின் சாதனை மைல் கல். 2021 ஜூலை 29 அன்​று, அகில இந்​திய மருத்​துவ மாணவர் சேர்க்​கை​யில் ஓபிசி 27 சதவீதம் இடஒதுக்​கீடு வென்று காட்​டிய சமூகநீதி நன்​னாள். முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் காட்​டிய வழி​யில், ஓபிசி மாணவர் நலனில் கொண்ட உறு​தி​யில் சட்​டப் போராட்​டத்​தில் வென்று காட்​டினோம்.

    மருத்​து​வப் படிப்​பு​களில் இதர பிற்​படுத்​தப்​பட்ட மாணவர்​களுக்கு இழைக்​கப்​பட்ட அநீ​தி​களுக்கு முற்​றுப்​புள்ளி வைத்​து, அவர்​களின் உரிமை​களை மீட்​டெடுத்​ததன் மூலம், ஆண்​டு​தோறும் இந்​திய அளவில் மருத்​து​வப் படிப்​பு​களில் 4,022 இடங்​களும், பல் மருத்​துவ படிப்​பு​களில் 1,000 இடங்​களும் கிடைக்கப்​பெற்ற நிலை​யில், கடந்த 4 ஆண்​டு​களில் மொத்​த​மாக 20,088 மருத்​துவ இடங்​களை ஓபிசி வகுப்​பினைச் சார்ந்த மாணவர்​கள் பெற்று பயனடைந்​துள்​ளனர்.

    முதல்​வரின் இந்​தப் பணி மகத்​தானது மட்​டுமல்​ல, வரலாற்​றில் பொன்​னெழுத்​துக்​களால் பொறிக்​கப்பட வேண்​டியது. சாதனை பயணம் தொடரட்​டும், சமூக நீதி தீர்ப்பு சிறக்​கட்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​திருந்​தார்.

    இதைச் சுட்​டிக்​காட்​டி, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில், ‘‘20,088 இடங்​கள் என்​பது பல குடும்​பங்​களின் பல தலை​முறைக் கனவு. சதிக்​குக் கால் முளைத்து சாதி​யாகி, உழைக்​கும் மக்​களை ஒடுக்​கி​னாலும், விதி வலியது – இது​தான் நம் தலை​யில் எழு​தி​யது என சுருண்​டு​வி​டா​மல், போராடி பெறும் உரிமை​களால் கல்வி மற்​றும் வேலை​வாய்ப்​பு​களில் நமக்​கான இடங்​களை உறு​தி​செய்​கிறோம்.

    சமூக நீதிக்​கான இந்த அரசி​யலை​யும் – போராட்​டத்​தை​யும் நாம் மீண்​டும் மீண்​டும் சொல்​லிக்​கொண்டே இருக்க வேண்​டும். நம் விரல்​களைக் கொண்டே நம் கண்​களைக் குத்​தும் வித்​தையறிந்​தவர்​கள் செய்​யும் சூழ்ச்சி அரசி​யலை முறியடிக்க, இந்​நாளின் வரலாற்று முக்​கி​யத்​து​வத்தை உரக்​கச்​ சொல்​வோம்’’ என தெரி​வித்​துள்​ளார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மக்கள் நலனை காப்பதில் தமிழகம் நம்பர் 1 என்பதை உறுதி செய்வோம்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

    August 25, 2025
    மாநிலம்

    ராயப்பேட்டை – ராதாகிருஷ்ணன் சாலை வரையிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி விரைவில் நிறைவு

    August 25, 2025
    மாநிலம்

    போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடரும்: சிஐடியு தொழிற்சங்கம் அறிவிப்பு

    August 25, 2025
    மாநிலம்

    தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவில் தீவிரமடையும் உட்கட்சி பிரச்சினைகள்: நிர்வாகிகள் குமுறல்

    August 25, 2025
    மாநிலம்

    மக்கள் மீது முதல்வர் ஸ்டாலினுக்கு அக்கறை கிடையாது: பழனிசாமி குற்றச்சாட்டு

    August 25, 2025
    மாநிலம்

    அரசு ஊழியர்கள் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது துறை ரீதியான நடவடிக்கையை தொடரலாம்: ஐகோர்ட்

    August 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சயின்ஸ் பிக்‌ஷன் கதையில் தேஜா சஜ்ஜா!
    • மக்கள் நலனை காப்பதில் தமிழகம் நம்பர் 1 என்பதை உறுதி செய்வோம்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
    • சிறந்த தூக்கத்திற்கான தேதிகள் மற்றும் பூசணி விதைகள்: ஊட்டச்சத்து நிபுணர் ஆழமான, அமைதியான இரவுகளுக்கான மெக்னீசியம் நிறைந்த ரகசியத்தை வெளிப்படுத்துகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிஹாரில் வாக்கு திருட்டு நடைபெறுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு
    • தெலுங்கில் அறிமுகமாகிறார் ரவீணா டாண்டன் மகள்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.