Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி திருவள்ளுவர்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து
    மாநிலம்

    சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி திருவள்ளுவர்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

    adminBy adminMay 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி திருவள்ளுவர்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருச்சி: சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி வள்ளுவர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். திருச்சி அருகேயுள்ள குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி கோயிலில் ரூ.22 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

    ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டினார். மேலும், கோயில் பரம்பரை டிரஸ்டி பிச்சுமணி ஐயங்கார் எழுதிய ‘குணசீல மஹாத்மியம்’, சென்னகரை சுப்பிரமணியன் எழுதிய ‘வள்ளுவத்தில் மெய் ஞானம்’ ஆகிய நூல்களை ஆளுநர் வெளியிட்டார்.

    அப்போது அவர் பேசியதாவது: உலகின் பல நாடுகள் ஆட்சியாளர்களாலும், ராணுவத்தாலும் கட்டமைக்கப்பட்டவை. ஆனால், பாரதம் ரிஷிகளாலும், துறவிகளாலும், சனாதன தர்மத்தாலும் உருவான நாடு. அதனால், உலக அளவில் பாரதம் தனித்துவம் பெற்ற நாடாகத் திகழ்கிறது.

    மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தர்மம் ஒன்றுதான். அது சனாதன தர்மம் மட்டும்தான். பாரதம், தர்மம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தர்மம் அழிந்தால், நாடு அழிந்துவிடும். யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் உருவாகக் காரணமாக இருப்பவை கோயில்கள்.

    அத்தகைய தெய்வீக உத்தரவுகள் நிறைவேற்றப்படும்போது நாடு தெய்வீக தேசமாக ஒளிரும். திருக்குறள் ஒரு ஆன்மிகப் புத்தகம். சில அரசியல் சிந்தனையாளர்கள், ஆன்மிகத்தில் இருந்து திருக்குறளைப் பிரிக்கப் பார்க்கிறார்கள். சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி திருவள்ளுவர். இவ்வாறு அவர் பேசினார்.

    யதுகிரி யதிராஜ மடம் 41-வது பட்டம் எதிராஜா நாராயண ராமானுஜ ஜீயர் பேசும்போது, “குணசீலம் கோயிலில் வீற்றிருக்கும் வேங்கடாஜலபதி, செங்கோலுடன் ஆட்சி புரிந்து வருகிறார். பக்தர்களுக்கு அபிவிருத்தி, நிம்மதி, சந்தோஷத்தை வழங்கி, மனோ வியாதிகளையும் தீர்க்கும் தலமாக குணசீலம் உள்ளது. இக்கோயில் 2-வது திருப்பதியாக மாறவேண்டும்” என்றார். விழாவில், திருச்சி தினமலர் ஆசிரியர் ஆர்.ராமசுப்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அறங்காவலர் நாராயணன் நன்றி கூறினார்.

    முன்னதாக, பிரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் கோயிலில், ஆளுநர் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, அவருக்கு மண்டல இணை ஆணையர் கல்யாணி தலைமையில் அறநிலைத் துறையினர் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிடுமா? – அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

    June 30, 2025
    மாநிலம்

    அன்புமணியின் பின்னால் இருப்பது நிர்வாகிகள்; ராமதாஸின் பின்னால் வாக்காளர்கள்: எம்எல்ஏ அருள் கருத்து

    June 30, 2025
    மாநிலம்

    அன்புமணி திடீர் டெல்லி பயணம்

    June 30, 2025
    மாநிலம்

    ராமதாஸ் உடனான சந்திப்பில் திமுகவின் சூழ்ச்சி இல்லை: அன்புமணிக்கு செல்வப்பெருந்தகை பதில்

    June 30, 2025
    மாநிலம்

    தனது வாழ்நாளில் பொது வாழ்க்கைக்காக 80 ஆண்டுகளை ஒப்படைத்தவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

    June 30, 2025
    மாநிலம்

    நகை திருட்டு விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழப்பு: தலைவர்கள் கண்டனம்

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கொழுப்பு கல்லீரல்: கொழுப்பு கல்லீரலை மாற்றியமைக்க சிறந்த உடற்பயிற்சியை அமெரிக்க மருத்துவர் வெளிப்படுத்துகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிடுமா? – அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
    • இந்தியாவின் தடை காரணமாக பாதிப்பு பாகிஸ்தானில் சரக்கு கட்டணம் கடும் உயர்வு
    • வசிரிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலுக்கு வழக்கம் போல் இந்தியா மீது குற்றம் சுமத்துகிறது பாகிஸ்தான்
    • அன்புமணியின் பின்னால் இருப்பது நிர்வாகிகள்; ராமதாஸின் பின்னால் வாக்காளர்கள்: எம்எல்ஏ அருள் கருத்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.