Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு: செந்தில் பாலாஜி சகோதரர் உட்பட 12 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்
    மாநிலம்

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு: செந்தில் பாலாஜி சகோதரர் உட்பட 12 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்

    adminBy adminJune 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு: செந்தில் பாலாஜி சகோதரர் உட்பட 12 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உட்பட 12 பேருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக செந்தில் பாலாஜியும் ஆஜராகியிருந்தார்.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்தாண்டு அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் பி.சண்முகம் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றபத்திரிகையுடன் சுமார் 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட வழக்கின் ஆவணங்களை காகித வடிவில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்க நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு ஏற்கெனவே குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அவகாசம் தேவை: அப்போது செந்தில் பாலாஜி, அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் ஆஜராகியிருந்தனர். இதில் குற்றப்பத்திரிகை நகல் வாங்காத அசோக்குமார் உள்ளிட்ட 12 பேருக்கும் நேற்று குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

    அப்போது குற்றப்பத்திரிகை ஆவணங்கள் சுமார் 50 ஆயிரம் பக்கங்கள் இருப்பதால் அவற்றை படித்துப்பார்க்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.பரணிக்குமார் உள்ளிட்டோர் கோரினர். அதையடுத்து நீதிபதி எஸ். கார்த்திகேயன் இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: கருத்துகேட்பு கூட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்கள் மனு

    August 20, 2025
    மாநிலம்

    ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்​ கோரி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

    August 20, 2025
    மாநிலம்

    எந்த நிதி மோசடி வழக்கிலாவது 2 ஆண்டுகளுக்குள் வழக்கை முடித்த வரலாறு உள்ளதா? – போலீஸாருக்கு ஐகோர்ட் கண்டனம்

    August 20, 2025
    மாநிலம்

    75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த முயற்சி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

    August 20, 2025
    மாநிலம்

    பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதை தடுப்பது குறித்து பரிசீலிக்க டிஜிபி-க்கு ஐகோர்ட் உத்தரவு

    August 20, 2025
    மாநிலம்

    நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு தனது சட்டங்களை மீறி செயல்படலாமா? – ஐகோர்ட் கேள்வி

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: கருத்துகேட்பு கூட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்கள் மனு
    • ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்​ கோரி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
    • இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிப்பு: நாளை மனு தாக்கல் 
    • எந்த நிதி மோசடி வழக்கிலாவது 2 ஆண்டுகளுக்குள் வழக்கை முடித்த வரலாறு உள்ளதா? – போலீஸாருக்கு ஐகோர்ட் கண்டனம்
    • ஆன்லைன் சூதாட்டத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனை: மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.